தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கண நுால்களில் மூத்த முதல் இலக்கண நுால் தொல்காப்பியமே. தொல்காப்பியரின் சம காலத்திய யாப்பிலக்கண நுால்களும் முழுமையாகக் கிடைக்காமல் போயிற்று. தொல்காப்பியத்தை விரி நுால் என்றும், அதற்குச் சற்றொப்ப, 1,000 ஆண்டுகளுக்கு பிற்பட்டுத் தோன்றியதும், எழுத்து, சொல் இலக்கணங்கள் மட்டும் சொல்வதாகிய நன்னுாலை சுருங்க உரைத்த நுால் என்பர்.நன்னுாலையும், தொல்காப்பியத்தையும் ஒப்பீடு செய்தும், நன்னுாலாரின் கருத்துக்கள் சிலவற்றை மறுத்தும் நுால்கள் வந்ததும் உண்டு. இந்நுால் தொல்காப்பிய நுாற்பாக்களுக்கு எளியதும், சுருங்கியதும், எடுத்துக்காட்டுகளுடன் கூடியதுமாகிய உரை நுால். ஒவ்வொரு நுாற்பாவுக்கும் கீழே நன்னுால் நுாற்பா உளதெனில் குறிக்கப்பட்டுள்ளது. அதை நன்னுால் உரை என்று குறித்துள்ளார். நன்னுாலுக்கு முதல் உரையாகிய மயிலைநாதர் உரை, சிறந்த உரையாகிய பவானந்தம் பிள்ளை உரை, மாணவர்களை உளங்கொண்டெழுதிய நன்னுாலறிஞர் சுயம்பு உரை ஆகியவற்றை இந்நுாலாசிரியர் துணையாகக் கொண்டு உள்ளார். சங்கர நமச்சிவாயரும், சிவஞான சுவாமிகளும் இயற்றிய விருத்தியுரையைத் துணையாகக் கொண்டிருந்தால், இவர் தம் கருத்துக்களில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும்.உரைப் பகுதிக்கு முன்னே செய்திச் சுருக்கம் கொடுத்திருப்பது பயனுள்ளது. தொண்டு, ஒன்பது பற்றி இவர் கருத்துப் பதிவில் தொண்டு எனத் தொல்காப்பிய இடங்களில் ஒன்பது என்ற சொல்லைச் செருகி விட்டனர் என்ற தம் கருத்தை விரிவாக எழுதியுள்ளார். இப்போதுள்ள பதிப்புகளில் ஒன்பது என்பதை நீக்கித் தொண்டு என்ற சொல்லைக் செருகினால் சூத்திரங்களுக்கும், உளதாய யாய்மைதி கெடாவா எனக் காணுதல் வேண்டும்.‘திருடன் அகப்பட்டு விட்டான்’ என்பன போன்ற கடும் தாக்குதல்கள் இலக்கண நுாலில் வருதல் தகாது. நல்லறிஞர், வெள்ளிமலை சிவா அடக்கி வாசிக்கச் சொன்ன பிறகும் இப்படியா?புதிய அணுகுமுறைகளை எடுத்தெழுதி வாதிடும் இடங்களில் எல்லாம், தாம் ஒரு வழக்குரைஞர் என்பதை நன்கு நிறுவியுள்ளார்.ஒல்காப் பெரும்புகழ் படைத்த இலக்கண நுால் தொல்காப்பியத்தில் அதனுள்ளும் இரண்டாம் அதிகாரமாகிய சொல்லதிகாரம் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகிய இலக்கண மேதைகளின் மெய்யுரைகளாலும் மிளிர்ந்து சிறப்புப் பெற்றது.எளிய நடையில் உரை, எடுத்துக்காட்டுகள், நன்னுாலுடன் ஒப்பீடு, தம் கருத்துப்படியான ஆய்வு ஆகியவற்றுடன் பதிப்பித்துள்ளார். 1985 முதல், தளராமல் எழுத்துப் பணி செய்து வரும் இவர், 20க்கும் மேற்பட்ட நுாற்பதிப்புகளைச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நுாலாசிரியர், நன்னுால் தொல்காப்பியத்திற்கு வழி நுால் ஆகாது; அது தொல்காப்பியத்திற்குக் காண்டிகை உரை என்னும் கருத்துடையவர். நன்னுால் நந்தியாம்; ‘பாவம் தமிழர்கள்; பல நுாற்றாண்டுகளாக நந்திகளைப் பின்பற்றி வரும் தமிழர்கள் இன்னும் எழவில்லை’ என்பதும் இவர் கருத்து.தொல்காப்பியத்திற்கு நன்னுால் உரை நுாலன்று. முன்னோர் நுாலின் முடிவு ஒத்தலே வழி நுால் நிலை; வழக்கு வீழ்ந்தவற்றை விலக்கியும், பின்னோன் வேண்டும் விகற்பம் கூறியும் செய்த நுாலில், முன்னோர் நுாலின் அனைத்து நுாற்பாவுக்கும் மாற்று நுாற்பாக்களை வேண்டாது, அஃது எற்றினான் நீங்கியது எனக் காண்டலே, ஆய்வெனப்படும். முன்னிலை வினைக் கண் ஈகாரமும், ஏகாரமுமாயவற்றுள் ஒன்றிணைதல் பற்றிய நுாற்பா நன்னுாலில் இல்லை; ‘உண்டீ, கென்மே’ என்பன போன்றவை வழக்கு வீழ்ந்தமையின் இல்லையாயிற்று.வினைத் தொகையில் முக்காலக் கலப்பைத் தருகிறார் தொல்காப்பியர். வினைத் தொகையாக இருப்பவை யாவும் பெயரெஞ்சு கிளவியாகவும் இருக்கும் என்ற ஒரு அதிநுட்பத்தைக் கூறினார், பவணந்தியார். பெயரெச்சம் அல்லாமலேயே வினைத் தொகையாதற்குச் சான்றேதும் உளதோ? கூடுதல் தகவல் தருவது பாராட்ட வேண்டிய சிறப்பன்றோ?நன்னுாலின் சிறப்புக் கூறலால் தொல்காப்பியத்தின் மிக்கோங்கிய உயர்வு குன்றாது. நுாலாசிரியரின் அறிவையும் உழைப்பையும் நாம்பாராட்டுவோமாக.– தமிழ் அறிஞர் ம.வே.பசுபதி
தொல்காப்பியம் – சொல் அதிகாரம்
-
பாவை பப்ளிகேஷன் (பி) லிட்., 142, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் தூண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நூல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95). ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.
-
தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60). ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். "சொல்லதெழுதல்' என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது' என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நூல் ஒரு விருந்து.
-
ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.) தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.
-
ஐந்திணைப் பதிப்பகம், 279 பாரதி சாலை, சென்னை-5. (பக் கம்:152 விலை: ரூ.70.) சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நூல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50). மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!
-
திலகம் பதிப்பகம், 17இ, பி-1 கே.கே.பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (பக்கம்:191. விலை:ரூ.85) பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப் பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.
-
பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை- 600 108 போன்: 044 2527 0795; 3253 0516; 2523 4576; மின் அஞ்சல்: paarinilayam@yahoo.co.in
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்