தமிழ்மொழியின் அகவை, 3,000 ஆண்டுகளுக்கும் மேல். அந்தத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர், இலக்கியம் படைத்தோர், நீதிநுால் செய்தோர், காப்பியம் கண்டோர், அறநுால் ஆக்கியோர், பேரிலக்கியமாய்ப் போரிலக்கியம் படைத்தோர், அடைபட்டுக் கிடந்த மொழிச் செல்வங்களை மீட்டெடுத்தோர், இதன் தொன்மையை ஆராய்ந்து அறிவித்தோர், சீர்திருத்தம் செய்து மொழியைச் செப்பனிட்டோர், தெய்வம் தொழுதோர், பகுத்தறிவு பரப்பியோர், பொதுவுடைமை பேசியோர், கலையிலும் அரசியலிலும் தமிழுக்குத் தகுதி தந்தோர் இப்படித் தமிழ்ப்பணி ஆற்றிய, 24 ஆளுமைகள் குறித்து, கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்த, ‘தமிழாற்றுப்படை!’இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொல்காப்பியர், கபிலர், அப்பர், கம்பர், வள்ளலார், பாரதியார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதைய்யர், பாரதிதாசன், அண்ணாதுரை, கருணாநிதி, கண்ணதாசன், ஜெயகாந்தன் உள்ளிட்ட அனைவருமே தமிழின் உயரமறிந்தோர் மட்டுமல்லர்; அதன் ஆழ அகலங்களையும் நன்கறிந்தோர். தமிழில் அவர்கள் வினைப்பட்டதையும், தமிழ் அவர்களுக்கு வயப்பட்டதையும் காய்தல் உவத்தலின்றித் தன் கட்டுரைகளின் வழியே தமிழ்ச் சமூகத்தின் முன்காட்சிப்படுத்தி இருக்கிறார் கவிஞர்.கம்பர் குறித்த கட்டுரையில், விசுவாமித்திர முனிவரின் ஆசிரமத்தை ராமன், இலக்குவன் இருவரும் கண்ணை இமை காப்பது போல் காவல் காக்கின்றனர் என கூறப்புகும் கம்பர், ‘கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்’ என்றுரைக்கிறார். ஆனால், அந்த ஒரு வரிக்குக் கவிஞர் விரித்துக் கூறும் மறைபொருள் இதுவரை கூறாதது.அது போன்றே இளங்கோவடிகள் குறித்த கட்டுரையில், கணவனைப் பிரிந்து துயருறும் கண்ணகி, சோமகுண்டம் மற்றும் சூரியகுண்டம் என்ற பொய்கைகளில் மூழ்கிக் காமனை வழிபட்டால் கணவனோடு சேரலாம் என்று அவளின் தோழி கூறும் போது, அது பெருமையன்று எனும் பொருளில், ‘பீடன்று’ என்று கூறுகிறாள். அது ஏன் கண்ணகிக்குப் பெருமை என்று விளக்குகிறார் கவிஞர். தனக்கு உரிமையுள்ள ஆடவனை அடைய, மற்றோர் ஆடவனாகிய அது, கடவுளே ஆயினும் துணை எதற்கு என கண்ணகி கருதியிருக்கக்கூடும் என்கிறார். மேலும் ஒருபடி மேலே சென்று, காமன் என்பவன் சிவனால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி.திருவள்ளுவர் கட்டுரையில், நட்புக்கு உவமை காட்ட வந்த வள்ளுவர், உடுக்கை இழந்தவன் கைபோல விரைந்து நண்பரின் துன்பத்தைத் துடைக்க வேண்டும் என்று கூறியதைக் குறிப்பிட்டு, இதில் எந்தவோர் ஆடையின் பெயரையோ, வடிவத்தையோ குறிப்பிடாது, ‘உடுக்கை’ என்ற பொதுப் பெயரால் வள்ளுவர் குறிப்பிடக் காரணம், உடைகள் காலத்தால் மாறக்கூடும். ஆனால், உடுத்தல் என்பது எக்காலத்தும் நிலைத்திருக்கும் பண்பாடு. எனவே, மாறும் நாகரிகத்தைக் கூறாமல், மாறாப் பண்பாட்டைக் குறிப்பிட்டார் வள்ளுவர் என்று விளக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் கவிஞர். அப்பர் குறித்த கட்டுரையில், அவரின் வாழ்வை தமிழ் மீட்பு, சைவ மீட்பு, சமூக மீட்பு எனும் மூன்று தளங்களில் விரிவாக விளக்கியிருக்கும் ஆற்றல் பிரமிக்கத்தக்கது.பெரியார் தன் முதல் துணைவி நாகம்மை மறைந்தபோது எழுதிய இரங்கல் அறிக்கையில், ‘பெண்கள் சுதந்திர விசயமாகவும் பெருமை விசயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நுாற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மை விசயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள, எனக்கு முழு யோக்கியதை இல்லை’ என்று குறிப்பிட்டிருப்பதும், எவரையும் எதனையும் பொருட்படுத்தாது மனதில் பட்டதை மறைக்காமல் உரைப்பதே மேன்மக்கள் இயல்பு என்பதனை பறைசாற்றுகின்றன.அமைதி வழியை அறிவுறுத்திய வள்ளலாரின் பிறப்பே ஒரு பூகம்பப் பிறப்பு என்று கூறும் கவிஞர், அது அளவில், 5.1 ரிக்டர் என்றும் கூறுகிறார் (வள்ளலார் வாழ்ந்தது 51 ஆண்டுகள்). வள்ளலாரின் பாடல்களை மட்டுமே அறிந்த பலருக்கும், அவருடைய உரைநடை எவ்வளவு சிறப்பானது என்பதை இத்தொகுப்பிலுள்ள வள்ளலார் குறித்த கட்டுரை விளக்குகிறது.தமிழ்மொழி ஆளுமைகள் குறித்த தொகுப்புதானெனினும், பிறமொழி அறிஞர்களோடும் படைப்புகளோடும், தமிழ்மொழி அறிஞர்களும் படைப்புகளும் பல இடங்களில் ஒப்பிடப்படுகின்றனர். உதாரணமாக, கவுடில்யரோடு திருவள்ளுவர், -ஹோமரின் இலியட்டோடு செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி-, காளிதாசனோடும் ஷேக்ஸ்பியரோடும் கம்பர் இப்படிப் பற்பல ஒப்பீடுகள். இவை பிறமொழி இலக்கியங்களின் அறிமுகமாகவும் அமைகின்றன.மேலும் புதுப் புதுச் செய்திகள் பலவும் கட்டுரைகளுக்கிடையே ஊடும் பாவுமாக விரவியிருக்கின்றன. நுாலாசிரியர் கவிஞர் என்பதாலோ என்னவோ பலவிடங்களில் உரைநடைக்குள்ளிலிருந்து கவிதை எட்டிப் பார்ப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் மேற்கோள்களாகக் கவிஞர் காட்டும் கவிதைகளும், கருத்துகளும், நிகழ்வுகளும் நம்மை வியக்க வைக்கின்றன.கண்ணதாசன் குறித்த கட்டுரையில், ‘அவர் வாழ்வை திராவிடத்தில் தொடங்கி, தேசியத்தில் அடங்கி தெய்வீகத்தில் முடிந்த கதை’ என்று குறிப்பிட்டிருப்பது சரியான மதிப்பீடு.தமிழறியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில், 3,000 ஆண்டு தமிழ்ப் பெருமிதங்களை, 360 பக்கங்களில் வடித்தெடுத்திருக்கும் நுாலாசிரியரின் பணி சாதாரணமானதன்று.ஜாதி, மதம், கட்சி, சொந்த மண் என்ற எந்த பின்புலத்தையும் பாராமல், தமிழ்ப்பணி என்கிற ஒற்றைப் புள்ளியில், 24 ஆளுமைகளின் பெருமைகளை இணைத்திருக்கும் நுால் இது. இவ்வகையில் இது முன்மாதிரியற்ற முதல் நுாலாகிறது.தமிழாற்றுப்படை – தமிழுலகுக்குக் கிட்டியுள்ள அருங்கொடை; உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.– ராஜ்கண்ணன்
-
பாவை பப்ளிகேஷன் (பி) லிட்., 142, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் தூண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நூல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95). ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.
-
தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60). ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். "சொல்லதெழுதல்' என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது' என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நூல் ஒரு விருந்து.
-
ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.) தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.
-
ஐந்திணைப் பதிப்பகம், 279 பாரதி சாலை, சென்னை-5. (பக் கம்:152 விலை: ரூ.70.) சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நூல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50). மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!
-
திலகம் பதிப்பகம், 17இ, பி-1 கே.கே.பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (பக்கம்:191. விலை:ரூ.85) பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப் பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.
-
பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை- 600 108 போன்: 044 2527 0795; 3253 0516; 2523 4576; மின் அஞ்சல்: paarinilayam@yahoo.co.in
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்