Advertisement

அபாயப்பேட்டை

₹ 90

எழுத்துரு அளவு:

குழந்தைகளுக்காக எழுதுபவர்கள் தமிழ் இலக்கியச் சூழலில் மிகவும் குறைவு. அப்படியே எழுதினாலும் அந்தச் சின்ன வாசகர்களுக்கு, எளிதில் புரியும் சொற்களில், செறிவான தமிழ் நடையில் எழுதுவது மிக மிக அபூர்வம். அந்த இரண்டையும் பூர்த்தி செய்யக்கூடிய எழுத்தாளராக ரமேஷ் வைத்யா இருக்கிறார். ‘அபாயப்பேட்டை’ கதை சுட்டி விகடனில் தொடராக வந்து, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மனதை வெற்றிகொண்ட கதை.கதை மட்டும் அல்லாது மொழியறிவையும் குழந்தைகளுக்கு ஊட்டுவது மிக அவசியம் என்பதில் இந்த நூல் கவனம் செலுத்துகிறது. ‘ரூபியின் இதழ்களின் மேல் ஒரு சின்னச் சிரிப்பு வந்து அமர்ந்தது. அது இளஞ்சிவப்பினால் ஆன ஒரு பூவைப் போல இருந்தது’ என்ற வரிகள், கவிதை மனதை, சிறுவருக்குள்ளும் குழந்தைகளுக்குள்ளும் வளர்க்கும் தானே!இருட்டு என்றாலே பயம், கொஞ்சம் அச்சம் பெரியவர்களுக்கும் வரும். அந்த இருட்டில் ஒரு சிறுமி தன்னந்தனியாக அதுவும் மழை இருட்டில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்? அப்படி மாட்டிக்கொண்டவள் ரூபி என்ற சிறுமி. அவளை காப்பாற்ற சாபநரி ஒன்று வருகிறது. நரியை தந்திரம் நிறைந்ததாக, ஏமாற்றக்கூடிய ஒன்றாகத்தான் நாம் எல்லா கதைகளிலும் படித்திருக்கிறோம். முதல் முறையாக இந்த கதையில், நரியை நன்மை செய்யும் விலங்காக பார்க்கும்போது, நரி பற்றிய நம்முடைய பழைய பிம்பங்களும், தவறான பார்வைகளும் அந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன. தரீமியன் என்ற தீயவனை அழிக்க மச்சகந்திப்பூவை எடுத்து வருகிறாள் ரூபி. காற்றையும், கையில் பிடித்து வருகிறாள் என்பதை படிக்கும்போதே மச்சகந்திப் பூ எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. அந்தப் பூவுக்கு மீன் வாசம் எப்படி வீசும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.ரூபி காற்றை கையில் பிடிப்பது, ஊட்டி மலைப்பகுதியில் தலைக்கு மேலே மேகம் நம்மை தழுவிச்செல்வதை நினைவூட்டுகிறது. நூல் முழுக்க தொப்பிச்சாத்தான், ஓணான் ராஜ்யம், பைராகபா குகை, தீ ஊதி ஓநாய்கள் என்று நிறைய மந்திர தந்திர மாயாஜல வித்தைகள் தெரிந்தவர்கள் வந்து போகிறார்கள். அவர்களைப் படிக்கும் போது மனதிற்குள் விட்டாலாச்சார்யாவின் குட்டிச்சாத்தான்களும், இராம.நாராயணன் பட, குட்டி நாயகிகளும் நம் கண் முன்னே வந்து போகிறார்கள். ‘பஜுலேஹிரா’ என்ற மந்திரவாதி, ரூபியின் தம்பியைக் கடத்திச் சென்று விடுகிறான். தன் தம்பியைக் காப்பாற்றப் போகும் ரூபியை, மந்திரவாதி கரையான் புற்றுக்குள் சிறை வைக்கிறான். பிறகு அவளை அழிக்க பிரேதங்களை ஏவி விடுகிறான். எதைக் கண்டும் அஞ்சாமல் ஒரு குட்டி காளியாக, மந்திரங்களைப் பயன்படுத்துகிறாள் ரூபி. நிஜத்தில் மந்திரம் என்பது மனோதைரியத்தைக் குறிக்கும். மனோதைரியம்தான் இன்றைய சிறுவர், சிறுமியருக்குத் தேவை. பிரச்னைகளில் இருந்து எப்படி வெளியில் வருவது என்ற அறிவுக் கூர்மை தேவை. அதை ரூபி என்ற சிறுமியின் வாயிலாக எல்லா சிறுவர், சிறுமியருக்குள்ளும் புகுத்துகிறார் நூலாசிரியர். காளிகளும், துர்கைகளும் நான்கு கைகளுடனும், சூலாயுதம், வேலாயுதங்களுடனும் தனியாகப் பிறப்பதில்லை. மன தைரியம், உறுதி, விடாமுயற்சி, தனக்கு நேரும் ஆபத்திலிருந்து விடுதலை பெறுவது இதெல்லாம் தான் ஆயுதங்கள், கைகள். பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் தொடர்ந்து வன்முறைகள் ஏவப்பட்டு வரும் இன்றைய சூழலில், ரூபியின் மனோதைரியம், நாவலைப் படிக்கும் சிறுவர், சிறுமியருக்கும் நிச்சயம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.தொடர்புக்கு: eslalitha@gmail.com– இ.எஸ்.லலிதாமதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 198).கல்விக் கொள்கை, ஊறும் அறிவு, குழந்தைகளின் வளர் சிறப்புகள், குடும்பம் தரும் அறிவு, சுற்றுப்புறம் தரும் அறிவு, பள்ளி நடைமுறை, கல்விப்படி நிலைகள், குழந்தைகள் கல்வியில் மூத்தோர் பொறுப்பு என அத்தியாயங்களில் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர்களும், கல்வி போதித்திடும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் உதவும்.

  • அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை-49. போன்: 2650 2086. (பக்கம்: 128).ராமாயணம் பிறந்த கதை முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை அழகுற சொல்லப்பட்டு உள்ளது.ராமரை போன்ற பிள்ளை, பதி, மன்னன் இன்றைய அத்தியாவசிய தேவை. இன்றைய பிள்ளைகள், ராமர்களாக நாளை உருவாக உதவும் நூல்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).அமெரிக்காவின் முக்கிய இடங்களான ப்ளோரிடா, வாஷிங்டன், சவுத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றி எளிய நடையில் பிஞ்சுகளுக்குப் புரியும்படி எழுதியிருக்கிறார் கமலநாதன்.அமெரிக்காவில், கென்னடி விண்வெளி மையம், டிஸ்னி வேர்ல்டு, அருங்காட்சியகம் போன்ற விந்தைமிகு உலகங்களுக்குக் குழந்தைகளை உல்லாசப் பயணம் அழைத்துச் செல்கிறார்.குழந்தைகள் இலக்கியம்!

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 115).இந்நூல் ஆசிரியர் எடையூர் சிவமதி சிறுவர்களுக்கான 45 கதைகளை இந்நூலில் சுவையாக தொகுத்து வழங்கியுள்ளார். இவை அனைத்தும் சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் கதை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. படிக்கும் ஆர்வம் வளர, சிறுவர்களுக்கு தாரளமாக வாங்கி பரிசாக அளிக்கலாம்.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701. குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

  • ஓவியம்: ஸுபா. வெளியீடு: பண்மொழி பதிப்பகம், 2, பேதலா ஹவுசிங், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, சென்னை-4. (பக்கம்: 104). குழந்தைகளுக்கு ஆடிப் பாடுவதில் விருப்பம். ஆடிப்பாடும் போதே அவர்கள் அறிவியலையும் கற்றுக் கொள்ள இந்த கவிதை நூல் பெரிதும் துணை நிற்கும்.பருப்பில்லாமல் கல்யாணமா? படங்கள் இல்லாமல் சிறுவர் நூலா? அந்தக் குறை வைக்காமல், பக்கத்துக்கு பக்கம் புகைப்படங்களாகவும், ஓவியங்களாகவும் வண்ணத்தில் கொடுத்து சிறுவர்களை அசத்தியிருக்கிறார்.ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்.

  • அட்சயப் புத்தகாலயம், 2/30, சின்னராஜு தோட்டம், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 160. விலை: ரூ.70). சிறுவர்கள் படித்து பயன்பெற, பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில் இத்தொகுதியில் 36 கதைகள் இடம் பெற்றுள்ளன. அனைவரும் படித்து மகிழலாம்.

  • பண்மொழி பதிப்பகம், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:96 விலை:ரூ.60) இயற்கை, விலங்குகள், பறவைகள், வேடிக்கைப் பாடல்கள் என்ற நான்கு பிரிவுகளில் 37 சிறுவர் பாடல்கள் படித்து மகிழத்தக்க வகையிலும் படங்கள் சிறுவர் பாடல்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகைகளிலும் அமைந்துள்ளன.மயிலே! மயிலே! எனக்கொரு இறகுதரமாட்டாயா? மயிலே மயிலேபோன்ற பாடல்கள் சிறுவர்கள் பள்ளி விழாக்களில் ஆடிப்பாடுவதற்கு ஏற்ற பாடல்கள். அற்புதமான சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல்.

  • புத்தகப்பூங்கா, 3/1 சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, சென்னை-14. பக்கம்:192 விலை:ரூ.60) பெயர்தான் குட்டி கதைகளே தவிர கதைகள் ஒவ்வொன்றும் 4, 5 பக்கங்கள் கொண்டவையே. வாழ்க்கைப் பயிருக்கான விதைகளாக கருதி எழுதப்பட்ட கதைகள். சிறுவர்கள் படித்து பயன்பெறலாம்.

புதிய வெளியீடுகள்