மருத்துவம், நவீன ஆப்பரேஷன், அதற்கான சிகிச்சை ஆகியவை குறித்து, அதிகமாக மக்கள் அறிந்து கொள்ளும் காலமாக மாறி வருகிறது. ஆனால், காது, மூக்கு, தொண்டை மூன்றும் நம் முக்கிய உறுப்புகள். கேட்கும் திறன் பாதிப்பு அல்லது மூக்கில் சளி மட்டும் அல்ல, மற்ற சில பெரிய பாதிப்புகள், உணவு உண்ண முடியாத நிலைக்கு மாறும் தொண்டை என்பது கவலை தருபவை.ஆனால், டாக்டர் குமரேசன் இத்துறையில் சிறந்த அனுபவத்துடன் அதிக நுண்ணறிவு பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் படைத்திருப்பதுடன், பியூபர்போனியா சிகிச்சை என்பது குறித்த ஒரு இணைப்பையும் தந்திருப்பது சிறப்பாகும்.கண்ணை மூடிக் கொண்டு, இரு கால்களையும் சேர்த்தபடி, 30 வினாடிகள் நிற்கும் நோயாளி உடலானது பாதிப்புள்ள காது பக்கம் சாயும். கண்ணை மூடிக் கொண்டு நடந்தால், நேர்கோடாக நடக்க முடியாது.இதில் தலைச்சுற்றல் என்பது அடுத்த அணுகுமுறை. இதற்கு பயிற்சிகள், உரிய வைத்தியம் ஆகியவற்றை எளிதில் விளங்க வைத்திருப்பது, ஆசிரியர் இத்துறையில் வல்லுனர் என்பதை பாமரர்கள் அறிய உதவும். ஆனால், ஒரு இளைஞர் அல்லது பெண் பருவம் வந்த பின், அதுவரை இருந்த குரல் மாறுவது, கீச்சுக்குரல் அல்லது தட்டைக் குரல் என்பது, ‘பியூபர்போனியா’ என்றழைக்கப்படுகிறது.குரல் பாதிப்பு நோய் என்பதை, இந்த நுாலை படிக்கும் போது அதில் உள்ள பல நுட்பங்கள் புரியும். குரல் மேம்பாட்டிற்கு முழு மூச்சு தேவை என்கிற மருத்துவர், அந்த பாதிப்பில் உயிரியல், உளவியல் சேர்கின்றன என்கிறார்.இதை பேச்சுப் பயிற்சி மற்றும் மருத்துவ அணுகுமுறைகளில், ஒருவரது தொனியை உறுதி செய்யும் முறையை ஆசிரியர் மட்டும் நுண்ணிய முறையில் அணுகி, மக்கள் துயரை தீர்க்கிறார் என்பது சிறப்பானதகவல். மாறுபட்ட இந்த குரல் நிலைமை மட்டுமின்றி, காது, மூக்கு தொண்டை குறித்து, மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சை உத்திகள் என்ற பல விஷயங்கள் உரிய படங்களுடன் தரப்பட்டு உள்ளன.இந்த நுாலை டாக்டர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைவரும் படித்தால், பல விஷயங்கள் தெளிவாகும். சமுதாய அக்கறையில் இந்த நுாலைப் படைத்த டாக்டர் குமரேசன் முழுவதும் பாராட்டிற்குரியவர்.– பாண்டியன்
காது மூக்கு தொண்டை மற்றும் பியூபர்போனியா மருத்துவம்
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்