Advertisement

சாதிகளற்ற சமுதாயம் சாத்தியமே!


சாதிகளற்ற சமுதாயம் சாத்தியமே!

₹ 140

எழுத்துரு அளவு:

சாதி அவசியமா? அதன் அடிப்படை வரையறை என்ன? சாதி அடையாளம் களைவது சாத்தியமா போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம் இது.ஆதிசங்கரர், நந்தனார், வேதாத்திரி மகரிஷி துவங்கி கண்ணதாசன் வரையிலான பலரின் மேற்கோள்களை முன்வைத்து, ஆலயங்கள் சாதி மதம் கடந்த ஞானப் பட்டறைகளாகத் திகழ்ந்தால், சமுதாய நல்லிணக்கம் தானாய் மலரும் என்பதை வலியுறுத்துகிறது.கடலுாரில் பார்த்த, கேட்ட, அனுபவித்த சாதிய ரீதியிலான பாகுபாடுகள் குறித்தும், அதன் தாக்கம் தொடரும் அவலம் குறித்தும் முன்வைக்கிறது. குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல், பலதார மணம், பெண்களுக்கான கல்வி, சொத்துரிமை மறுப்பு போன்ற இழிநிலைகள் முற்றிலும் களையப்பட்டுள்ளது போல, இன அடையாள சிந்தனையும் ஒழியும் என்பதை கருத்துகளின் மூலம் முன்வைக்கும் நுால்.– பெருந்துறையான்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்