Advertisement

பிரபுலிங்கலீலை மூலமும் உரையும்


பிரபுலிங்கலீலை    மூலமும் உரையும்

₹ 600

எழுத்துரு அளவு:

பக்கம்: 900 துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் சைவ மறையின் ஆணிவேர். அதனால், இந்த நூலை, "காவிய ரத்னம் என்று தமிழ் அறிஞர்கள் போற்றுவர். இது வீரசைவ நூல். வாழ்வின் மயக்கத்தை அறுத்து, சிவன் பக்கம் சார்ந்து, தெளிவுபட வழிகாட்டும் கருவை மையமாகக் கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் இந்த நூலை, உரையுடன் வெளியிட்டு, சைவ நெறிக்கு பெருமை சேர்த்துள்ளது.நிறைந்த அறிஞர்கள், ஞானி யார் என்பதை ஆராய்வது வழக்கம். அதற்கு எளிய விடையாக, 865வது பாடலில், கரும்பைக் கண்டால் யானை அதன் முற்பகுதி இலையை நீக்கி, முழுமையாகச் சுவைக்கும். ஆடு அதைக் கண்டால்,மாறாக இலையைத் தின்னும்: கரும்பைச் சுவைக்காது என்ற கருத்து, ஓர் உதாரணம். அதை "செறிந்த ஆடிலை தின்பன் என்னவே என்ற நான்கு சீர்கள் விளக்கும்.ஆழ்ந்த அறிவைப் போதிக்கும், சைவ இலக்கியம் மீண்டும் தமிழ் உலகில் வலம் வர, இந்த வெளியீடு உதவிடும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்