பால் நல்லதா, கெட்டதா? என்று பட்டிமன்றம் வைத்தால் நிச்சயம் யார் வெல்வர் என்று நினைக்கிறீர்கள்? கெட்டது என்ற அணியினர் தான். காரணம் அதற்கான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி, புள்ளி விபரங்களோடு மருத்துவர் அவர்கள், மெல்லக்கொல்லும் பால் என்னும் நூலை எழுதியிருக்கிறார். இவர், முதுநிலை மரபியல் மருத்துவம் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம் பார்த்துக்கொண்டிருப்பவர்.ஒரு மருத்துவர் ஆதாரங்களுடன் எழுதி இருக்கும் நூல் என்பதால், எளிதாக கருத்துக்களைத் தள்ள முடியாது.தாய்ப்பால் குழந்தைக்களுக்கானது. அதுபோல், நியாயப்படி பார்த்தால் பசுவின் பால் கன்றுக்குத்தானே செல்லவேண்டும்? ஆனால், கன்று அவ்வளவு பாலையும் குடித்தால், அது செரிமானம் இன்றி கழிச்சல்நோய் கண்டு சாகும் என்பது வேறு விஷயம்.வைக்கோல் கன்றைக்காட்டி, மாட்டின் மடியை சுரண்டி, பால் கறப்பது குற்றமாகும்.குழந்தைகளுக்கு காலை உணவை கொடுக்காமல், பாலைக் குடித்துவிட்டுப் போ என்ற நிலையில் தான், பல பெற்றோர் இருக்கின்றனர். அதேபோல், இரவிலும் கொடுத்து உறங்க வைக்கின்றனர். இப்படியான குழந்தைகளுக்கு இரவில், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோய் வருகிறது என்கிறார் டாக்டர் ஜெகதீசன். ஐந்து சதவீத மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொலஸ்ட்ராலும், அதனால் ஏற்படும் ரத்தக்கொதிப்பும், வருவதற்குக் காரணம் பசும்பாலும், அதனால் ஏற்படும் பருமனுமே காரணம் என்று கூறியிருக்கிறார் நூலில்(பக்.68).இரவில் கண் விழித்துப் படிக்கும் மாணவர்களுக்கு, பால் அருந்த கொடுக்கின்றனர் பெற்றோர். ஒரு குவளை பால் அருந்தினால், ஒரு மணி நேரத்தில் பீட்டா கேசோ மார்பின்(BCM-7)என்ற போதைப் பொருள் உண்டாகி, ரத்தத்தில் கலக்கிறது. இந்த பீட்டா கேசோ மூளையை மழுங்கடிக்கச் செய்யும் (பக்.69) என்ற அதிர்ச்சித் தகவலும் இதில் உள்ளது.இக்கருத்துக்கள் பலவற்றைப் பார்க்கும் பலரும், பால் இன்றி வேறு உணவு பாமரர்களுக்கு ஏது? அல்லது ஆட்டுப்பால் போன்றவை போதுமா என்று நினைக்கத் தோன்றும்.மேலும், பால் அதிகம் கறக்க, அதற்கு தரப்படும் தீவனங்கள் அல்லது பசுக்கள் உண்ணும் பல்வேறு வகை முரண்பட்ட பொருட்கள், பாலில் தீய தன்மையை ஏற்படுத்துகின்றன என்பதும், இப்போது பேசப்படுகிறது.குறிப்பாக ‘ஜல்லிக்கட்டு பிரச்னை’ எழுந்த பின், நாட்டு மாடுகள் தரும் பால், அதிக புரதசத்து கொண்டது என்ற தகவலும் உண்டு. ஆனாலும், பாலை மட்டும் பருகி, முழு ஊட்டச்சத்து ஒருவருக்கு கிடைக்குமா என்பதற்கு இந்த நூல் படிக்கும் போது, பல தகவல்கள் எளிதாக கிடைக்கும்.– லலிதாமதி
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்