Advertisement

மாநில, தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள்


மாநில, தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள்

₹ 80

எழுத்துரு அளவு:

இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி என்னும் திட்டத்தைக் கொண்டு வர இயலாது என்னும் உண்மையை ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ள நுால். இந்தியாவில் பாயும் நதிகளை இணைத்து ஒரே நாடு என்னும் உணர்வை கட்டமைக்க முடியும் என்னும் சிந்தனையையும் விதைத்துள்ளார். தேர்தலை எப்படி நடத்த வேண்டும், ஓட்டுச்சாவடிகளை எப்படி அமைக்க வேண்டும், ஓட்டுச்சீட்டுகள் எப்படி அச்சடிக்கப்பட வேண்டும் என்பது போன்ற புதிய பார்வை கொண்ட திட்டங்களை முன்வைத்துள்ளார். வரவேற்கத்தக்க ஆலோசனைகளை நாட்டுக்கு வழங்கும் அற்புத நுால்.– முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • தமிழில்: ந.முத்துமோகன் (ஆங்கிலத்தில்: து.ராஜா).நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.(பக்கம்: 96). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா "Dalith Question The Way Forward' என்று எழுதிய நூலின் தமிழாக்கம்.தலித் ஜாதிகளை பிரத்யேகமான அரசியல் சமூக சக்தியாகத் திரட்டிக் காட்டுவதும் அவர்களை மதச் சார்பற்ற முற்போக்கு ஜனநாயக இயக்கத்தோடு சேர விடாமல் தடுப்பதும் தலித்துகளின் போராட்டங்களையும், தலித் லட்சியத்தையும் பலவீனப்படுத்தவே செய்யும் (பக்.38) என்றுரைக்கும் நூலாசிரியர் "கயிர்வாஞ்சி போன்ற சம்பவங்களில் இருந்து தலித் இயக்கங்கள் பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் (பக்.39) என்றும் அறிவுறுத்துகின்றார்.சமூகநீதி - ஜாதி ஒழிப்பு போன்ற சிந்தனையுள்ளவர்களுக்குப் பெரிதும் பயனுள்ள நூல்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, சென்னை-14. (பக்கம்:200). அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு தனி இடம் கொண்ட பத்திரிகையாளர் சோலை எழுதிய சுமார் 48 அரசியல் விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம்.ராஜ்ய சபையில் ஒரு குறிஞ்சிப்பூ (மன் மோகன் சிங்), விதவிதமான அரசியல் அம்மணிகள், வாரிசு அரசியலை அகற்ற முடியுமா? ஆணிவேரைத் தோண்டியெடுங்கள், நேபாளத்தில் ஒரு பூபாளம் போன்றவை படிக்கச் சுவை கூட்டுபவை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியரின் பரந்த அரசியல் அனுபவ அறிவு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. அரசியல் மேடைப் பேச்சாளர்களுக்கும் பயன்படக் கூடிய நூலிது

  • '1967 ஜனவரிக்கு முன்பிருந்தே எம்.ஆர்.ராதா - எம்.ஜி.ஆர் பனிப்போர் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. 1967 ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை சுமார் ஆறு மணிக்கு, 'எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டார்' என்ற செய்தி, காட்டுத் தீயாகச் சென்னை நகரில் பரவி, தமிழகமெங்கும் எதிரொலித்தது. பல இடங்களில் கலவரம், பஸ் மறியல், எரிப்புச் செய்திகள்.அடுத்த நாள் காலை, 'எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொள்ள முயன்றார் எம்.ஆர்.ராதா; இருவரும் மருத்துவமனையில் அனுமதி; இருவர் உயிருக்கும் ஆபத்தில்லை' என்ற பத்திரிகைச் செய்திகள்தான் அமைதியைக் கொண்டு வந்தன.நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றபோது நடந்த குறுக்கு விசாரணைகள் மட்டுமே பத்திரிகைகளில் வந்தன. ஆனால் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பின் முழு விவரங்கள் வெளிவரவே இல்லை. அந்தத் தீர்ப்புகளில் பல உண்மைகள் பதிவாகி உள்ளன. இரு பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட கொலை முயற்சி வழக்கு மட்டுமல்ல. ஆதாரபூர்வமான சரித்திரக் குறிப்பு இது.'

  • 'விறுவிறுப்பு. சுவாரசியம். வித்தியாசம். ஆனந்த விகடனில் வாரம்தோறும் வெளியான இக்கட்டுரைகள், உலக அளவில் 2005ம் ஆண்டு நடைபெற்ற மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை விரிவாக அலசுகின்றன.இந்தக் கட்டுரைகள் விவாதிக்கும் விஷயங்கள் அனைத்தும் 2005ம் ஆண்டு உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டவை. பல தளங்களில் காரசாரமான விவாதங்களை உண்டாக்கியவை. மேலாக, மக்களை மிக நேரடியாக பாதித்தவை.பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்து ஆலயங்களைக் குறித்து நமக்கென்ன அக்கறை என்றோ, ஆப்பிரிக்க மக்களின் உணவுப் பிரச்னை குறித்து இங்கே என்ன கவலை என்றோ, பாலஸ்தீன் யூதக் குடியிருப்புகள் கலைக்கப்பட்டது குறித்து நமக்கென்ன பாதிப்பு என்றோ யாரும் கருதுவதில்லை. உலகம் ஒரு பெரும் கிராமமாகிவரும் சூழலில், நம்மைச் சுற்றி நடப்பவை குறித்த கவனமும் அக்கறையும் இயல்பாகவே தமிழ் வாசகர்களுக்கு உண்டாகியிருப்பதன் விளைவுதான், இக்கட்டுரைகள் வெளியான போது கிடைத்த வரவேற்பும் பாராட்டுகளும்.சர்வதேச அரசியல் நிகழ்வுகள் குறித்த அக்கறையும் ஆழமும் மிக்க இக்கட்டுரைகளின் இன்னொரு சிறப்பு, இதில் கையாளப்பட்டிருக்கும் நகைச்சுவை ததும்பும் மொழிநடை.

  • குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்த பாகிஸ்தானின் அரசியல் வரலாறு. முகம்மதலி ஜின்னா தொடங்கி பர்வேஸ் முஷாரஃப் வரை நீளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் குறித்த துல்லியமான அறிமுகம் இதில் கிடைக்கிறது. பாகிஸ்தானில் நிலைகொண்டு, காஷ்மீரில் தீவிரவாதம் வளர்க்கும் அனைத்து இயக்கங்கள் குறித்தும் ஆதாரபூர்வமான தகவல்கள், புள்ளிவிவரங்கள், காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது. காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது என்கிற நிலையில், அந்நாட்டின் அரசியல் குறித்த முழுமையான, ஆதாரபூர்வமான பதிவு தமிழில் முதல்முறையாக வெளிவருகிறது.

  • பவன் குப்தா, அனுராதா ஜோஷி, கீதா தரம்பால் - ப்ரிக்

  • மருதன், முகில், ச.ந. கண்ணன், இரா. முத்துக்குமார்'காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள்.சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள். பிரிவினை கோரும் இந்த இயக்கங்களைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும்போது மட்டும் தினசரிகளில் வெளியாகும். எப்போதாவது சமரசப் பேச்சுகள் நடக்கும். பேச்சு முடியுமுன் மீண்டும் உயிர்ப்பலிகள் தொடங்கி விடும்.அச்சமூட்டும் ஆள்பலம், மிரளவைக்கும் செயல்திட்டங்கள், கவலை தரத்தக்க வெளிநாட்டுத் தொடர்புகள், பணபலம், ஆயுதபலம் என்று இயங்கும் இத்தகைய இயக்கங்களைப் பற்றிய முழுமையான, விரிவான தகவல்கள் அடங்கிய நூலொன்று தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை.அஸ்ஸாம் தொடங்கி, தமிழகம் வரை செயல்படும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய பல நுணுக்கமான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இவை அனைத்துமே இந்திய மண்ணில் தோன்றி, இங்கேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்கள். இதே காரணத்தால்தான் பாகிஸ்தானில் வேர்கொண்டு காஷ்மீரில் செயல்படும் இயக்கங்கள் குறித்த தகவல்கள் இந்நூலில் சேர்க்கப்படவில்லை.

  • கேஜிபி - சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு தயார் செய்தாலும் சரி, அவரைக்காய் பயிர் செய்தாலும் சரி, இவர்களது பார்வைக்குத் தப்பாமல் எந்தவொரு நாடும் எதுவொன்றையும் செய்துவிட முடியாது.சிலிர்க்க வைக்கும் செயல்திட்டம், அதிர வைக்கும் ஆள்பலம், படு நேர்த்தியான கட்டமைப்பு. அத்தனையும் இருந்தது இவர்களிடம். இவர்கள் எப்படி ஆள்களைச் சேர்த்தார்கள், எங்கே வைத்துப் பயிற்சிகளை அளித்தார்கள்? எப்படிப்பட்ட பயிற்சிகள் அவை? இது வெறும் உளவு அமைப்பு மட்டும்தானா?பரம ஜாக்கிரதையாக இயங்கிக்கொண்டிருந்த இந்த அமைப்பைப் பற்றிய ரகசியங்கள் எப்படி வெளியே கசிந்தன? யாரால்? கேஜிபியின் வரலாறைப் படிப்பது, ஒரு மர்மநாவலைப் படிப்பதைவிட சுவாரசியமானது.

  • '1992 டிசம்பர் 6-ம் தேதி, அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் விளைவாக எழுந்த கலவரங்களில் தேசமே அல்லோலகல்லோலப்பட்டது. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடங்கி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை அயோத்தி விவகாரத்தின் பின்விளைவுகளை இன்றுவரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.பிரச்னையின் வேரை மறந்துவிட்டு விளைவுகளுக்காக மட்டும் கவலைப்படும்படி ஆக்கிவிட்டது காலம்.உண்மையில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு ராமர் கோயில் இருந்ததா? கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதா? இதுவரை அங்கே நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் சொல்லும் முடிவுதான் என்ன? அகழ்வாராய்ச்சி முடிவுகளை அரசியல் பாதிக்கிறதா? என்றால், எத்தனை தூரம் பாதிக்கிறது? இது விஷயத்தில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளின் வாதங்கள் என்னென்ன? அவர்களின் நிலைப்பாடுகள் எந்தெந்த விதங்களில் மாறி வந்திருக்கிறது? நீதிமன்றத்தில் இன்றுவரை தீராததொரு வழக்காகவே இது இருந்துவருகிறது.அயோத்தி பிரச்னையில் எந்தப் பக்கச் சார்பும் எடுக்காமல் உண்மை நிலையை, தக்க ஆதாரங்களுடன் நடுநிலைமையுடன் அலசி ஆராயும் முழுமையான நூல் இது. தீர்ப்பு ஏதும் சொல்வதல்ல இதன் நோக்கம். மாறாக, அவ்வப்போதைய வீரவசனங்களால் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளை எவ்வித ஜோடனையும் இல்லாமல் மக்கள் மத்தியில் மறுசமர்ப்பணம் செய்யும் ஒரு முயற்சி மட்டுமே.

  • சிறுதுளி பெருவெள்ளம். வாஸ்தவம் தான்.ஆனால், எங்கு கிடைக்கும் சிறு துளிகள்? ஏரிகள்,குளங்கள் இருந்த இடங்களில்? அபார்ட்மெண்ட்கள் கான்கிரீட்? கட்டடங்கள். நீர் நிலைகள்? சிறுது சிறிதாகத் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரி வராத நாள்கள் திண்டாட்ட நாள்கள். என்னசெய்யலாம்? இனி வரைபடங்களுக்கு வேலை இருக்காது. இந்தியா, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா - எல்லாமே, பாலைவனங்களாக மாறப்போகின்றன. தண்ணீர் இனி அடிப்படை உரிமை இல்லை. அடிப்படைத் தேவை மட்டுமே. ஐ.நா. சொல்லிவிட்டது. சரிதான். தண்ணீரும் ஒரு பண்டமாகிவிட்டது. பளபள தாளில் பாக்கேஜ் செய்து விற்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கூடிய விரைவில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தோற்கடித்துவிட்டு, முதன்மை இடத்துக்கு வரப்போகிறது தண்ணீர் விற்பனை. காணாமல் போகும் நதிநீர்ப்பரப்புகளை எப்படி மீட்டெடுப்பது? விவசாயத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது? தேசிய நதிகளை இணைத்துவிட்டால் இந்தியா சுபிட்சம் அடைந்துவிடுமா? இன்றைய தேதியில் அணைகளின் நிலை என்ன? பிற நாடுகள், தண்ணீர்த் தேவையை எப்படிச் சமாளிக்கின்றன? பயமுறுத்துவதற்காக அல்ல. தண்ணீரைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட நூல் இது.

  • பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நொடிக்கு நொடி செய்திகளை அள்ளி நம் மீது தெளித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அரசியல், பெரும்பாலும் ஊழல், கட்சித் தாவல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், வசை மொழிகள், சர்ச்சைகள், பிறகு, மத்திய அரசு,மாநில அரசு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர்,பாகிஸ்தான், தீவிரவாதம் இத்யாதிகள்.நிறைய செய்திகள். ஆனால் நிறைவான செய்திகளா? நிச்சயம் இல்லை.எனில், ஒரு செய்தி எப்போது நிறைவடைகிறது? அதைப்பற்றி நாம் சிந்திக்கத் தொடங்கும்போது; கேள்விகளை எழுப்பும்போது; விமரிசனங்களை முன்வைக்கும்போது; கவலைப்படும்போது; கோபப்படும்போது; அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து, விவாதிக்கும்போது. இந்நூல் அதைத்தான் செய்கிறது. மேலோட்டமாக மட்டுமே நமக்கு இதுவரை அறிககமாகியுள்ள பல முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஆழமாகவும் விரிவாகவும் அலசி ஆராய்கிறார் அ.கி. வேங்கட சுப்ரமணியன்.

  • 12/3/1993, 11/7/2006 - மும்பையை மட்டுமல்ல, இந்தியாவையே அதிர வைத்த இரண்டு நாள்கள். இந்த இரண்டு நாள்களிலும் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் மும்பை, இந்தியாவின் தீவிரவாதத் தலைநகரமாகி வருகிறதா என்ற சந்தேகத்தை வேரூன்றியது.இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய மும்பை, இருளாதாரத்துடன் நடக்கும் குற்றங்களின் தலைநகராக மாறியது எப்படி? ஊசிப் பட்டாசு கொளுத்திப் போடுவதுபோல், பயங்கரவாதிகள் வெகு அநாயாசமாக ஆர்.டி.எக்ஸ். வைக்கும் பட்டணமாக மும்பை மாறியது ஏன்? நியூ யார்க்குக்குப் பின், தீவிரவாதிகளின் எளிய இலக்காக மும்பை நகரை சர்வதேச தீவிரவாதப் பருந்துகள் வட்டமிடுவதன் பின்னணி என்ன?கரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியாரில் ஆரம்பித்து தாவூத் இப்ராஹிம், அபு சலீம் என்று தொடரும் தாதாக்கள் மும்பையை என்ன விதமாக மாற்றி இருக்கிறார்கள்? நிழல் உலக தாதாக்களுக்கும், மும்பை சினிமா நட்சத்திரங்களுக்கும் உள்ள உறவின் உண்மை நிலவரம் என்ன?இந்நூல் மும்பையின் கருப்புப் பக்கங்களை முழுதாக உரித்துக் காட்டும் மிரட்டல் ஸ்கேன ரிப்போர்ட். மும்பை, இந்தியா, உலகம் என்று பரந்து விரிந்து மிரட்டும் தீவிரவாத வலையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

  • பா. ராகவன் இராக்கின் முன்னாள் அதிபர் சதாம்ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும்கூட. 24 வருடங்கள் அந்த தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.தாய் வயிற்றில் சிசுவாக உருவான நாள் தொடங்கி, சதாம் மரணத்தின் சொந்தக்காரர். இரான் யுத்தம், குவைத் போர், வளைகுடாப் போர் என்று சதாமின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு அட்சரமும் ரத்தத்தால் எழுதப்பட்டவை. தனது அரசியல் கனவுகளுக்காக இராக்கியர்களையே அவ்வப்போது பலி கொடுக்கத் தயங்காத மனிதாபிமானமற்ற சர்வாதிகாரி அவர்.மறுபுறம், சிதைந்துக் கிடந்த இராக்கை மறுகட்டுமானம் செய்த ஓர் அற்புத சக்தியாகவும் சதாமைப் பார்க்க முடியும். கட்டாயக் கல்வி, கிராமப்புற வேலை வாய்ப்புகள், மதச்சார்பற்ற ஆட்சி நிர்வாகம் என்று தன்னை நினைவுகூர,பல நல்ல காரியங்களும் செய்தவர்.இதனால்தான் சதாம் ஹுசைனை ஒரு ஹீரோவாகவோ,வில்லனாகவோ உடனடி முத்திரைகுத்த முடிவதில்லை.சதாம் ஹுசைன் என்கிற ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் அசத்தலான நடையில் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கில் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும் கூட இந்நூல் விவாதிக்கிறது.

  • இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து அதிரடியாகத் தாக்குதல் நடத்தி, தேசத்தையே ஸ்தம்பிக்கச் செய்த காஷ்மீர் தீவிரவாத இயக்கம் லஷ்கர-ஏ-தொய்பா குறித்த மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல்.ஆப்கனிஸ்தானில் பிறகு, பாகிஸ்தானில் வளர்ந்து, இந்தியாவில் நாசகாரியங்கள் புரியும் இயக்கம் லஷ்கர்-ஏ-தொய்பா. மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் என்னும் பெருங்கனவு இருந்தாலும், லஷ்கரின் பெரும்பாலான செயல்திட்டங்கள் இந்திய எல்லைக்குட்பட்டவைதான். காஷ்மீருக்காகப் போரிடும் இயக்கங்களிலேயே மிகவும் பலம் வாய்ந்தது லஷ்கர். அல் காயிதா முதல் மத்தியக் கிழக்கின் அத்தனை தீவிரவாத போராளி இயக்கங்களுடனும் இவர்களுக்குத் தொடர்பு உண்டு. தவிரவும் பாக். உளவுத்துறை ஐ.எஸ்.ஐயின் பரிபூரண ஆசீர்வாதம்.தனக்கென தனி ராணுவம், அரசியல் பிரிவு, உளவுத்துறை, நிதித்துறை என்று வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஓர் அரசாங்கம் போலவே செயல்படும் இயக்கம் இது.1999-ல் கார்கில் யுத்தம் முதல் 2005-ல் மும்பை ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் வரை பாகிஸ்தான் உளவு அமைப்பு இந்தியாவில் நிகழ்த்தியிருக்கும் அத்தனை திருவிளையாடல்களிலும் முழுமையாகவோ, பகுதி அளவிலோ லஷ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறது.இந்தியாவை மிகவும் அச்சுறுத்தும் தீவிரவாத இயக்கங்களுள் முதன்மையானது லஷ்கர்-ஏ-தொய்பா. அதன் தொடக்கம் முதல் இன்றைய இருப்பு, செயல்பாடுகள் வரை மிக விரிவாக அலசி ஆராய்கிறது இந்நூல். ஆசிரியர் பா. ராகவன், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் சர்வதேச தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.

  • 'ஜூலை 2006 தொடங்கி ஒரு மாத காலம் நீடித்த இஸ்ரேல் - லெபனான் யுத்தத்தின் கதாநாயகனாக நமக்கு அறிமுகமான இயக்கம், ஹிஸ்புல்லா. கடத்துவார்கள், கொல்வார்கள், துல்லியமாகத் திட்டமிட்டு குண்டு வீசுவார்கள், நொடிப்பொழுதில் தற்கொலைப் படையாக மாறி வெடித்துச் சிதறுவார்கள். பீரங்கிகளையும் நவீன துப்பாக்கிகளையும் வைத்துக்கொண்டு நேரடி யுத்தமும் செய்வார்கள். ஒரு தீவிரவாத இயக்கமாக அமெரிக்க, இஸ்ரேலிய ஊடகங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இன்னொரு முகம் உண்டு. லெபனானில் ஹிஸ்புல்லா ஓர் அரசியல் இயக்கமும் கூட. இரண்டு கேபினட் அமைச்சர்கள் உள்பட, நாடாளுமன்றத்தில் பதினான்கு உறுப்பினர்களை வைத்திருக்கும் மிக முக்கியமான அமைப்பு. பி.எல்.ஓ., ஹமாஸ் உள்பட பெரும்பாலான போராளி இயக்கங்கள் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரித்துவிட்ட நிலையில், விடாப்பிடியாக 'இஸ்ரேலை ஒழித்துவிட்டுத்தான் மறுகாரியம்' என்று இன்றுவரை மூர்க்கமாக நிற்கிற விஷயத்தில்தான் ஹிஸ்புல்லா மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது. சித்தாந்த பலம், அதிர வைக்கும் ஆள்பலம், பணபலம், வலுவான சர்வதேச நெட்வொர்க் என்று வளர்ந்து நிற்கும் ஹிஸ்புல்லாவை, அல் காயிதாவுக்கு நிகரானதொரு இயக்கமாகக் கருதுகிறது அமெரிக்கா.

புதிய வெளியீடுகள்