பக்கம்: 236 நூலாசிரியர், சிறந்த ஆயுர்வேத மருத்துவர். சஞ்சீவினி ஆயுர்வேத அறக்கட்டளை மருத்துவமனையில், சிகிச்சை அளித்து வருபவர். தற்போது, அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவமுறை கோலோச்சி இருக்கும் நிலையில், ஆயுர்வேதம் என்பது காலம் காலமாக நிற்கும் சிறந்த வைத்திய முறை, அதைப் பின்பற்றுவது நோயைத் தீர்ப்பதுடன், ஆரோக்கியத்துடன் ஆயுளைத் தரும் என்பதை, ஆதாரங்களுடன் ஆங்கிலத்தில் முன்வைக்கிறார் ஆசிரியர்.குறிப்பாக, பெண்களுக்கு கர்ப்பகாலத்தில், தேவைப்படும் உணவு, எளிய மருத்துவ நடைமுறைகள் ஆகியவை பற்றி, இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன.காரம் அதிகம் நிறைந்த உணவு, ஊறுகாயை அதிகம் பயன்படுத்தும் போக்கு, ஒரு பெண்ணுக்கு "வாயுதோஷத்தை அதிகரிக்கும். அதே போல, ஐஸ்கிரிம் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. அதனால், மாதவிடாய் கால உதிரப்போக்கு அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கிறார். நெய், பால், அரிசி அல்லது மாமிச சூப் சாப்பிட்டு, இக்குறையை தவிர்க்கலாம்.ஐந்து மாத கால கர்ப்பத்தில், நெய் சாப்பிடலாம். அதனால், கொலஸ்டிரால் என்ற கொழுப்பு சக்தி அதிகரிக்கும் என்ற கருத்தை ஆதாரத்துடன் நிராகரிக்கிறார் (பக்கம் 52). கர்ப்பகாலத்தில் ஒரு தாய் எட்டு முதல் 15 கிலோ எடைவரை அதிகரிக்க, நெய் உணவில் தேவை என்பதும், இதில் தரப்பட்ட முக்கிய தகவல்.இயற்கையாக பிரசவம் நடக்கவழி, கர்ப்பகாலத்தில் ஏற்படும், சிறுசிறு பிரச்னைகளுக்கு தீர்வு என்று, பல விஷயங்கள் எளிய ஆங்கில நடையில் தரப்பட்டிருக்கின்றன.கர்ப்பிணி மட்டும் அல்ல, பொதுவாக மாதவிடாய் காலத்தில், பெண்கள் படும் பல்வேறு பிரச்னைகளுக்கும், ஆயுர்வேதம் எளிய தீர்வுகளை தருகிறது. அதற்கான சில எளிய மருந்துகள், நடைமுறை சிகிச்சைகளும் தரப்பட்டிருக்கின்றன. அதே போல, தண்ணீர் அளவுக்கதிகமாக தேவையின்றி குடிக்க வேண்டாம் என்று (பக்கம் 167)ல் விளக்கப்பட்டிருக்கிறது.குழந்தை பராமரிப்பு பற்றியும், குறிப்பாக சிறந்த ஆயுர்வேத மருந்துகளில் "புஷ்யானுக சூர்ணம் என்ற எளிய ஆனால், அபூர்வ மருந்து எந்த அளவில், மாதவிடாய் நிற்கும் காலத்தில், பெண்கள் படும் தவிப்பை போக்கும் என்ற கருத்தும், ஆசிரியரின் சிறந்த அணுகுமுறைக்கு அடையாளம் ஆகும்.தாய்மைப் பேறை அடையும் அல்லது அடைய விரும்பும் அனைவரும் இந்த நூலைப் படித்து பயன்பெறலாம்.
Jeevani Ayurveda for women
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்