Advertisement

குட் நைட்!

₹ 100

எழுத்துரு அளவு:

‘சொல்லி தெரிவது தான் மன்மத கலை’ என்பதை, விவரிக்கும் நூல். ‘செக்ஸ் உணர்வு என்பது, மிக இயல்பானது தான்; ஆனால், செக்ஸ் நடவடிக்கை என்பது எளிதானது அல்ல’ என, விளக்கும் இந்நூல், இன்றைய நவீன உலகில், திணறும் தம்பதிகளின், இருள் பக்கங்கள் மீது, வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.‘கன்னித்திரை, கற்பின் சாட்சி’, ‘போதை மருந்துகள் உட்கொண்டால், அதிக நேரம் உறவு கொள்ள முடியும்’ உள்ளிட்ட, பல மூடநம்பிக்கைகளை, உடைத்தெறிந்துள்ளார். குழந்தையின்மைக்கு என்ன காரணம், பலவந்தம் ஆகாது, எண்ணிக்கையில் இல்லை இன்பம், ஆர்வமின்மைக்கு என்ன காரணம் உள்ளிட்ட, பல்வேறு விஷயங்களுக்கு, ஆசிரியர் விளக்கம் தருகிறார். இருபாலருக்கும் இருக்கும் சந்தேகங்கள் பலவற்றிற்கு, எளிய முறையில் விளக்கமும், தீர்வும் தந்திருக்கிறார்.திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களும், திருமணம் முடிந்தவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.சிசு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்