‘மருத்துவம் என்றால் மருத்துவம் மட்டும் தெரிந்தால் போதாது; சரிவிகித உணவை, எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை தெரிந்து வைத்திருக்கவும் வேண்டும்’ என்ற கொள்கையில், தீராத பற்று உடையவர் போலும்; புத்தகத்தில் புகுந்து விளையாடி விட்டார் மருத்துவர் சிவராமன்.மருத்துவத்தினூடே, உணவு பொருட்களின் பயன்பாட்டையும், அதை பக்குவப்படுத்தும் விதத்தையும் சொன்னவர், மேலை நாட்டு நாகரிக மோகத்தில் விழுந்து, மக்கள் புரள்வதை கண்டு சகியாதவராய், தன் முழு கோபத்தையும், நகைச்சுவை உணர்வுடன் வெளிக்காட்டி இருப்பது, இனிமையாய் இடித்துரைப்பதில், இவருக்கு நிகர் இவரே என சொல்ல வைக்கிறது.தாய்ப்பால் துவங்கி, முதுமையில் உட்கொள்ளும் உணவு வரை, அனைத்தையும், வகை வகையாய் பிரித்து, இந்த நேரத்தில், இதை தான் சாப்பிட வேண்டும் என்பதையும், அதிலும், நம்மூர் காய்கறிகளும், தானியங்களும் தான், உலகிலேயே மிக சிறந்தவை என்பதையும், பட்டியல் போட்டு, அறிவியல் ரீதியாக, அலசி ஆராய்ந்து, கொடுத்திருக்கிறார்.‘ஆஸ்திரேலிய ஓட்சும்; முத்து முத்தாய் மலர்ந்ததால் கண் பட்டதோ, என்னவோ, மிஷினுக்குள் இறக்கி, தட்டையாக்கி, பல ரசாயனங்கள் கலந்து பதப்படுத்தி, அட்டை பெட்டியில் புகுத்தி, வெளிவரும் மக்காச்சோளமும் இன்று கொடிகட்டி பறக்கின்றன. நம்மூர் கேழ்வரகுக்கும், தினைக்கும், கைக்குத்தல் அரிசிக்கும் இவை ஈடாகுமா’ என, அறிவியல் ரீதியாக தர்க்கிக்கிறார். அதுவே, புத்தகத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது.‘கிர்ணி பழ பெரிசில் கொய்யா; கொட்டை இல்லாத, நம்மூர் கொய்யா அளவில் திராட்சை, கண்ணை கவரும் நிறத்தில் ஆரஞ்சு என, வெளிநாட்டு இறக்குமதிகளை, வாயில் ஈ புகும் வகையில் பார்க்கும் நாம், அதில் என்ன சத்து இருக்கிறது என்பதை யோசிக்கிறோமா? ஒட்டு இனங்களான அவற்றில், இனிப்பு மட்டுமே மிஞ்சும் என்பதை அறிந்துள்ளோமா? இல்லையே!’ என, வேதனைப்படுகிறார். கீரையையும், மிளகையும் ஒதுக்கி தள்ளும் நம் வீட்டு குழந்தைகள், ‘டபுள் சீஸ் மார்கரிட்டா வித் மெக்சிகன் பெப்பர்’ என, பிட்சா கடைக்கு ஆர்டர் கொடுப்பதைப் பார்த்து, கொதித்து போகிறார். கடலுப்பு, கீரை உட்பட சில பொருட்களில் அடங்கிய சத்துக்கள் பற்றி, இன்னும் விளக்கி இருக்கலாம். நோயற்ற வாழ்வுக்கு, இந்த புத்தகம் ஒரு மருந்து.மீனாகுமாரி
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்