Advertisement

தாய்வீடு


தாய்வீடு

₹ 170

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யுளைப் பற்றியெல்லாம் தெரிந்த தலைமுறை இல்லை இப்போது. வசனகவிதை என்று கேள்விப்பட்டிருந்தால் அபூர்வம். நவீன கவிதைகளின் ஆயுளை ‘சமீப கவிதைகள்’ முடித்துவிட்ட காலமோ இது...? சமூக இணையதளங்களின் கைங்கரியத்தில் தானே எழுதி, தானே வாசித்து, தானே பயனடையும் சமீப கவிதைகள் தெருவெங்கும் இறைந்திருக்கும் அகாலம். இதற்கு மத்தியில் தானும் கிடக்கிறது, ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதைகளின் மொத்தத் தொகுப்பான, ‘தாய்வீடு’.வெவ்வேறு கால கட்டங்களில் தொகுப்புகளாக வெளியான, ‘உயிர்மீட்சி, முகவீதி’ ஆகிய நூல்களில் உள்ள கவிதைகளையும் உள்ளடக்கி வந்த தொகுப்பு என்பதால் ஒரு விமர்சன வசதியும் இருக்கிறது. அப்போதே, வாசகர்கள் தம்மில் பேசிக்கொண்ட சில கவிதைகளைப் பார்க்கலாம். அவற்றிலேயே தெரியும், கவிஞரின் சில மனங்கள். கர்ப்பிணியாய் அலையும் மனநிலை பிறழ்ந்த பெண்ணை நாம் பார்த்திருக்கக் கூடும். செலவில்லை என்பதால், பரிதாபமும் பட்டிருப்போம். அதே பெண்ணை ராஜ சுந்தரராஜன் பார்க்கிறார் இப்படி…கிறுக்குப் பிடித்த பெண்ணை / கர்ப்பவதியாக்க / எவன் மனம் துணிந்தது/ இப்படி / அதற்கு முன் இவளை / புஷ்பவதியாக்க / இறை மனம் துணிந்ததே/ எப்படி?நாம் பைத்தியக் கர்ப்பிணியை என்றோ பார்த்தபோது அதிராமல் இருந்ததற்கு இன்றைக்கு வருத்தப்பட வைக்கும் வரி. அதிரடியான சோகத்துக்குத் தான் வருந்த வேண்டும் என எண்ணாது கவி மனம்.கண் பரிசோதனை செய்து கொள்ளப் போகிறான். சிறிதும் பெரிதுமான அட்சரங்களைக் காட்டிச் சோதிக்கிறார்கள். அந்தப் பரீட்சையை வெற்றி கண்டு கண்ணாடியை மாட்டிக்கொண்டு வந்து நிறையப் படிக்க, எழுத வேண்டியதுதானே… அது எல்லோரும் செய்வது. ராஜசுந்தரராஜனுக்கு அங்கே எழுத்துகளைப் பார்ப்பது உபாதையாகத் தெரிகிறது. கவிதையைத் தூண்டும் உபாதை.ஓவியம் எழுதவோ தூரிகை / ஒட்டடை அடித்தால் என்ன? / வீணையின் நரம்பை / துணி உலர்த்தும் வேலைக்கு எடுத்தால் / என்ன / எழுத்துகள் / சொல்லாகி பொருள் குறித்தல் விடுத்து / பார்வையை நிறுத்துக்காட்டும் / படிக்கற்கள் ஆகிறதை / கண்டேன் / கண் மருத்துவ மனையில். என்று எழுத நாடி நரம்பெல்லாம் மொழிக்காதல் கொண்ட மனம் தேவைப்படுகிறது.காதல் மட்டுமா படுத்தும்? காமமும்தான். அதைச் சொல்வதிலும் ஒரு அவலம்.குளிர் கண்டிருந்தது காற்றில் / என்னவோ செய்தது என் உடம்புக்கு /கட்டுக்கயிற்றில் நிம்மதியற்றுப் / பரபரத்தது வீட்டு நாய்; / கட்டற்றுப் புணர்ந்தன தெருநாய்கள். / விடலை என் / எதிரே தோன்றி / ஒரு விற்பனைக்காரி / வேண்டுமோ என்கிறாள், / முழம் மல்லிகை.வெறும் மல்லிகையை வைத்துக்கொண்டு எதை முழம் போடுவது என்று யோசித்துப் பார்த்தால் நமக்கே ஒரு புன்னகை பூத்துவிடுகிறது. கைத்த புன்னகை. தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் இந்தக் கைப்பு பரவிக்கிடக்கிறது. அதை உணர்ந்தேதான் கவிஞர் வாக்குமூலம் தருகிறார்:‘அளவுக்கு மீறிக் கவலை கொண்டு அனத்தினால் அது கவிதை.’இந்த வாழ்க்கையில் ஓர் உலகாயதக் கவலை, ஒரு வீடு வேண்டும் என்பது. அதுவும் இவரது மனதுக்கு வேறு ஒரு காரணத்தோடு கூடிய கவலை ஆகிறது.வீடொன்று வேண்டும் / வெயிலையோ மழையையோ / பகைப்பதற்கு அல்ல /காக்கையும் கூடுகட்டும்/ அடைகாக்க அடுத்த தலைமுறைக்கு தலைசாய்க்க வசதி செய்துதந்துவிட முடியாதா என்கிற ஆதங்கத்துக்குப் பக்கத்திலேயே, வாழும் வகை இப்படி ஆயிற்றே என்கிற கேலியும் கிடக்கிறது.நாக்கு தொங்க வாய்நீர் வடிய / நாறுகிற திசையெல்லாம் ஓடுது / நாய்.கரணம் போட்டுக் கட்டிய வீட்டில் / இருந்து தின்னுது சிலந்தி.சின்ன காரியங்களைப் பற்றி மட்டும் கேலி செய்துவிட்டுத் தப்பித்துப்போகும் ஏழை மனம் அல்ல கவிஞருடையது. வானத்தை முட்டும் அளவு பிரம்மாண்டமான விமர்சனங்களையும் வைக்கிறது அவரது துணிவு.வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி / இல்லை என்று கைவிரித்து நிற்கிறது / சிலுவை இந்தக் கேள்விக்கு எந்த மதம் அல்லது கோட்பாடு பதில் சொல்லிவிடும்? பதில் இல்லாத கேள்விகள் எல்லா இடங்களிலும் உண்டு.மண் மீது / ஒரு பறவைப் பிணம் / மல்லாந்து நோக்குது / வானை.அது அங்கே எதை அவாவுகிறது?கண்டெடுத்தோம் / அப்படியும் கவலைப்படுகிறோம் / ஐயோ யார் தொலைத்தாரோ என்று இதற்குக் காரணம் என்ன?அப்படி ஒரு நிலைமை / வரும் என்றால் அக்கணமே / வாழோம் என்றிருந்தோம் / வந்தது. / அப்படியும் வாழ்கிறோம்.இது என்ன கணக்கு? இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது.‘சமீப கவிஞர்கள்’ ஆயிரக்கணக்கானோர், கவிதைகளை, தங்கள் கைவசமுள்ள அடையாளத்தின்படி தேடிக்கொண்டிருக்கிறார்கள். ராஜசுந்தரராஜன் கவிதையாக இருப்பதை கண்டு அடைந்திருக்கிறார்.இரா முழுக்க / தவம் கிடந்தன / வான் நிறைய மீன்கள். / பரிதியை நேர் நின்று கண்டதோ / விடிய வந்த ஒரு வெள்ளி என்பது கவி வாக்கு.தொடர்புக்கு: ramevaidya@gmail.com– ரமேஷ் வைத்யா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • தணிகேசன் பதிப்பகம்,கடலூர் சி.புதூர், சிறுபாக்கம் அஞ்சல், திட்டக்குடி - வட்டம், கடலூர்-606 123. (பக்கம்: 544.) பறவைகளுக்குத் தொழில் பறத்தல்; கவிஞர்களுக்குக் கவிதை. பிறவிக் கவியாக திகழ்பவருக்கு சொல்ல வேண்டுமோ?இறைவன் - தமிழ் - இயற்கை - காதல் - தத்துவம்-நாட்டு நடப்பு - தலைவர்கள் - தேசியம் - சமூகம் - சிறுவர்கள் - சமூகக் கேடுகள் - கொந்தளிப்பு - களிப்பு - அறிவுரை - கனிவுரை என 400 பாடல்களுக்கும் மேல் இந்நூலில் இடம் பெறுகிறது. புதிய கருத்துக்கள் - புதிய நோக்கு - நூதன உரசல் - அலசல் சற்று தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நல்ல மரபுக்கவிதை நூல்.

  • குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. ( பக்கம்:88)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள். இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.

  • குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்:80)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள்.இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.

  • அகிலா பதிப்பகம், "அங்கப்பா இல்லம்,' 36, காந்தி நகர், கணபதி, கோவை-641 006. (பக்கம்: 144.)நல்ல மரபுக் கவிதைகள் இடம் பெற்றுள்ள சிறந்த கவிதைத் தொகுப்பு. தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் தம் பெருமை காதல்- என்றெல்லாம் பல பொருட்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கவிதைகள் பலரின் கவனத்தைக் கவர வேண்டியவை. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பதை சில கவிதைகளில் காண்கிறோம். பேரவையின் சீற்றத்தைக் கண்டு சினந்தெழுந்து எழுதுகையில் (ஆண்டவனா?) கவிஞர் கடவுளையே சபித்து தீர்த்து விட்டார். குழந்தைகளுக்கும் இதில் சில மரபுக் கவிதைகள். உள்ளபடியே இவர் தன்னை கவிஞர் எனக் கூறிக் கொள்ள எல்லாத் தகுதியும் இவருக்கு இருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை நூல் கட்டியம் கூறுகிறது.

  • இளந்திரை பதிப்பகம், 2/78, ஜி.ஆர்., நகர், மதுரை-625 007. (பக்கம்: 104). ஆசிரியரின் 48 புதுக்கவிதைகள். பொறுமையும் நேரமும் இருந்தால் வாசித்து மகிழலாம்.

  • பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்:96)அருட்செல்வரின் கழனியில் விளைந்த ஆல விழுதின் ஆணிவேர் இக்கவிஞர். கவிஞர் பெ.சிதம்பரநாதனின் கவிதைப் படைப்பான "பொய்கை' பழனியப்பா பிரதர்ஸ் வழி முகிழ்ந்து வந்திருக்கிறது. பல்வேறு மலர்கள் பிறந்து, வளர்ந்து, மணம் பரப்பி, உளம் மகிழ வைக்கும் நீர்ப்பரப்பு தான் பொய்கை. அங்கே அல்லியும், ஆம்பலும்; கமலமும் குவளையும், குமுதமும் மலர்ந்து விரிந்து கிடக்கும் மலர்ப்படுகை. அது போலவே இந்நூலில் கம்பனின் ராமாயணத்தில் துவங்கி, வள்ளலார், காந்தி, பாரதி, புத்தர் என இம்மண்ணில் வாழ்ந்து, வள்ளுவன் வாய்மொழிந்த வாழ்வியல் நெறிகளை, தங்களது வாழ்வின் வேள்வியாய்க் கொண்டு, வாழ்ந்து காட்டிய சரித்திரமாய் நிற்கின்ற பெருமக்களது போதனைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு ஞானக்களஞ்சியம் இக்கவிதை நூல்.இதில் ஆசிரியரது பரிவு, வேட்கை, கோபம், துணிவு, சொல்லாட்சி, கவிதை இன்பம் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பல கவிதைகளில் விரவி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

  • ஜெயச்சித்ரா, 6.தாளமுத்துப் பிள்ளை சந்து,வடக்குமாசி வீதி, மதுரை-1 (பக்கம்-84). கவி அரங்குகளில் தான் வாசித்தவற்றையும், தனது மனம் கவர்ந்த தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றி எழுதியவற்றையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர், காமராஜர், கலாம் ஆகியோரை பற்றி எழுதப்பட்டுள்ள கவிதைகள் இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. நாடு, மொழி, சமத்துவம் ஆகியவற்றை பெரிதும் விரும்புவோருக்கு இந்நூல் மிகப் பெரிய பரிசு.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.பக். 96. மனிதன், மனிதனுக்கு கூறியது குறள் என்று குறிப்பிடுவர். திருக்குறள் மனித வாழ்க்கையின் வழிகாட்டி நூல். அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளை விளக்கியுள்ளார் திருவள்ளுவர். இன்றைய காலகட்டத்தில், பாலியல், சமூகத்தில் பல கோரமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதற்கெல்லாம் காரணம், பாலியல் பற்றிய அறியாமையும், தவறான புரிந்து கொள்ளலுமே! காமத்துப்பாலில், கணவன்-மனைவி உறவு எப்படி இருப்பது சிறப்பு என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை அறிந்துகொண்டால், பாலியல் சம்பந்தமான பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.காமத்துப்பாலில் உள்ள 250 குறள்களுக் கான விளக்கத்தை புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் கவிஞர் தெய்வச்சிலை. இதைப் படித்தால், பாலியல் பற்றிய தவறான பார்வை மாறுவது உறுதி!

  • பொன்னி, 2/1758, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. (பக்கம்: 80)"வாழ்வின் கட்டமைப்பிலிருந்து அது தரும் அனுபவத்திலிருந்தும் நேரடியாகவும், பூடகமாகவும் சமூகத்தின் அறியாமையில் இருந்து விழிப்புக்காக என் கவிதைகள் உருவாகின்றன என்றால் மிகையில்லை' என்று கூறும் ஆசு என்கிற ஆ.சுப்ரமணியனின் இக்கவிதைத் தொகுப்பில், 62 புதுக்கவிதைகள் உள்ளன.""காவிய நடை முகிழ்ந்தஅவளோர் தீயின் பிறை''என சோதிமிகு பெண்ணையும்,""ஞாபகங்களின் சிக்குடைத்து வெளிறிய முகத்தில்ஒரு கண்ணீர்ப் பெருக்கு''என மவுனம் உடைத்த கவியாகி, இருந்தும் - இல்லாதது போல் எல்லாம் தெரிந்த அனுபவ அறிவைப் பல கவிதைகளில் இழையோடச் செய்துள்ளார். எனினும், கவிதைக் கட்டமைப்பு வாசகனைக் கவருவதாய் அமையவில்லை. பல இடங்களில் இடறச் செய்கின்றன

  • தாழையான் பதிப்பகம், 15 (4), அண்ணாமலை நகர், மூன்றாம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 64). உரைநடை ஒப்பனை செய்து கொள்ளும்போது பாடலாகிறது. அது காலில் சதங்கை கட்டிக் கொள்ளும்போது இசைப் பாடலாகிறது. ஆசிரியர் இசைப் பாடலின் மூலம் இதயத்தில் உள்ளதை நடைபயிலச் செய்துள்ளார். 54 அருமையான கவிதைகள். கவிதைப் பிரியர்களுக்கு கவிதை விருந்து.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தேவி, 4/5, முதல் குறுக்குத் தெரு, ஜானகிராமன் குடியிருப்பு, வில்லிவாக்கம், சென்னை-49, (பக்கம்: 128) நல்ல கவிதைகள் நம் மனத்தைத் தொடும்; மன மாசு போக்கும்; துன்ப நிலையை மாற்றும்; சுகம் பல தரும். அத்தகு வாய்ப்பும், வலிமையும் கவிதைகளுக்கு இருப்பதால் தான் கவிதை நூல்கள் பல தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இக்கவிதை நூலும் அவ்வகையில் ஒன்று"சுட்டும் விரல் நீ சுழற்றிவிடு சுழலும் பூமி கைப்பந்து, நெட்டை விரல் நீ நீட்டிவிடு நிமிர்ந்த வானம் கைவசந்தான்' என்று தன்னம்பிக்கையே, இதற்கு ஓர் உதாரணம். அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்

  • 106/4, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).கண்ணதாசன் ஒரு ஜீவநதியாக இருந்து மற்ற கிளை நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் கற்பனையைத் தந்திருக்கிறார். இந்நூலில் வாழ்வில் கடந்த சுவையான 100 சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா சாலை, சென்னை-600017. (பக்கம்:103)ஆசிரியரின் புதுக்கவிதைகளின் ஊர்வலமாய் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமான ஒரு புகைப்படம் என புத்தகத்தை அமர்க்களமாகத் தயாரித்திருக்கின்றனர். அரசியல் சாக்கடையா? என்று ஒரு கேள்வி எழுப்பிவிட்டு அதற்கு ஆசிரியர் கூறும் பதிலில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. இது போல் ஆழ்ந்த கருத்துக்கள் ஆங்காங்கு தென்படுகின்றன