கைகளில் கிடைத்தவுடன் உள்ளத்தைத் தொட்டுவிடும் அழகான படைப்பு, சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன், பலர் (சிறப்பாகச் சொல்லப்பட வேண்டுமெனில், பேரா.அ.ஸ்ரீனிவாச ராகவன்; பி.மஹாதேவன்; பெ.நா.அப்புசுவாமி; முனைவர் பிரேமா நந்த குமார் ஆகியோர்) பாரதியின் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், இந்நூலின் சிறப்பு, பாரதியாரின் எல்லாக் கவிதைகளும் ஒரே நூலில் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டிருப்பதாகும். பாரதியின் உரைநடை மற்றும் கதைகள் முதலியவற்றின் மொழிபெயர்ப்பையும் கூடிய விரைவில் காணலாம் என்ற எதிர்பார்ப்பும் உண்டாகிறது. எட்டு சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் கைவண்ணத்தில், சிற்பியாரின் முத்திரையுடன், ஆங்கிலத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது, பாரதிக்கு, தமிழகம் அளிக்கும் சிறந்த மரியாதை. ஏனெனில், உலகெங்கிலும் சரியான முறையில் பாரதி அறிமுகப்படுத்தப்படுவார். கண்கவர் கலையழகு கொண்ட அட்டைப் படத்துடன் உள்ள நூல், பார்த்தவுடன் படிக்கத் தூண்டுகிறது. கவிதைகளை வேற்று மொழியில் தருகையில், மொழிபெயர்ப்பாளர்களின் பிரச்னைகளை நோக்குகையில் முக்கிய அம்சங்களாக, கவிதையின் பொருள் நயத்தையும், அழகியலையும், தொடர்நிலையையும் அறிஞர்கள் எடுத்துரைப்பர். ஏனெனில், மூல மொழியிலிருந்து வேற்று மொழிக்கு ஒரு கவிதையை மாற்றும் போது, கவிஞனின் உணர்ச்சிகளையும் மூலக்கவிதையின் பொருள் நயத்தையும் மொழிபெயர்ப்பாளர், உணர்வுப்பூர்வமாக அறிந்திருக்க வேண்டும். இரு மொழிகளிலும் தேர்ச்சி மட்டுமின்றி அவற்றின் சொல்வள நேர்த்திகளையும் மொழியியலையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான், மொழிபெயர்ப்பில் உயிரோட்டம் காணப்படும். அவ்வகையில் பார்க்கையில், இந்நூலின் மொழிபெயர்ப்பாளர்கள் எல்லாரும் பாரதியை உணர்ந்து படித்தவர்கள். ஆதலால், தமிழில் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், வேற்றுமொழியிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாயிருப்பதாலும் கவிதைகளின் தரம் குறையாமல், பாரதியை தமிழில் படிக்கும் உணர்வே ஆங்கிலத்தில் படிக்கையிலும் வாசகர்கள் ஏற்படுமாறு செவ்வனே தம் பணியை நிறைவேற்றி உள்ளனர். எளிமை நிறைந்த பாரதியார் கவிதைகள் பாமர மக்களும் படித்து ரசிக்கக் கூடியவை; ஆனாலும், பொருள் பொதிந்தவை. பொருள் நயம் குறையாமல் ஆங்கிலத்தில் அவற்றை அளித்திருப்பது இந்நூலின் மற்றொரு சிறந்த வெற்றி. முக்கியமாக, தொகுப்பாளர் சிற்பி, பாரதியை பக்தியுடன் பார்ப்பவராகையால் இந்நூல், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் புனிதத்துவமும் பெறுகிறது எனலாம். தொகுப்பாளர் தன், 20 பக்க முகவுரையில், பாரதியாரை அவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன், மொழிபெயர்ப்பாளர்களையும் குறிப்பிட்டு அறிமுகம் செய்து விடுகிறார். இம்முகவுரையே நூலின் சுருக்கமும் ஆகும். பாரதியின் பெரும் கவிதை தொகுப்பில், ஒவ்வொரு சிறு தனிப்பகுதியும் அவரது முத்திரையை தாங்கியுள்ளது என, தொகுப்பாளர் சொல்கிறார்.ஏழ்மையிலேயே வாழ்ந்து சாதாரண வாழ்க்கையே, ஒரு போராட்டமாக நடத்திக் கொண்டிருந்த போதிலும், கண்ணனையே தன் சேவகனாக வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு சீமானாகத் தன்னையே மாற்றிக் கொள்ளும் சிந்தனாசக்தி உடையவராயிற்றே!(கண்ணன் பாட்டு: முனைவர் சுப்பிரமணியம் மொழிபெயர்ப்பு) அதே போல, பாரதியின், எந்தையும் தாயும் என்ற கவிதையின் மொழிபெயர்ப்பையும் (முனைவர் ஆர்.கணபதி) முகவுரையில் அறிமுகம் செய்து வைக்கிறார். காரணம், பாரதியின் விரிந்த, நாட்டைப் பற்றிய சிந்தனையைத் தெரிவிக்க வேண்டுமென, குறுகிய பிராந்திய, மொழிசார்ந்த பிரிவினை எண்ணங்கள் இல்லாதவர் பாரதி என்பதை, அதன் மூலம் எடுத்துரைக்கிறார். இது, இன்றைய சமுதாயத்தின் இன்றியமையாத தேவை!இந்நூலின் மாபெரும் சிறப்பு, நூலைத் திறந்து, எப்பக்கத்தையேனும் வாசகர் எடுத்துப் படிக்கலாம். உதாரணமாக, முகவுரையில் பாஞ்சாலி சபதத்தை குறிப்பிடுகையில், உடனே அதைச் சென்று காண வேண்டுமென்ற ஆவலெழுகின்றது. அதிசயமாக, ஒரு மாணவனுக்கும், ஆய்வாளனுக்கும், ஆவலுக்காக படிப்பவருக்கும், இந்நூல் ஒரே மாதிரியான திருப்தியை அளிக்க வல்லது. தொகுப்பாளரும் பல கவிதைகளை மொழிபெயர்த்து உள்ளார். பதிமூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தலைப்பிற்கேற்ப கவிதைகள், பக்தி, தேசியம், தமிழ்மொழி, உலக நிகழ்வுகளில் அக்கறை, புகழ் கூறும் பாடல்கள், தத்துவம், சுயசரிதை, கவிதை வளம், புராண இதிகாச வகை மற்றும் இதர வகையிலானவை வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. பாஞ்சாலி சபதமும், குயில் பாட்டும் தனி இடத்தைப் பெற்றுள்ளன. இதிகாச வகையைச் சேர்ந்த இப்பெரும் பாடல்கள், முதன்மைக் கவிதை வரிகளின் சுவை சிறிதும் குன்றாது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, இந்நூலின் பெரும் சாதனை. விஷயமல்ல. வீமன் சொல்லும் கடின வார்த்தைகளான, ‘எரிதழல் கொண்டு வா தம்பி கதிரை வைத்திழந்தான் அண்ணன் கைதனை எரித்திடுவோம்’ எவ்வாறு ஆங்கிலத்தில் அளிக்கப்படும் என்ற பதற்றத்துடன சென்று பார்க்கையில், முனைவர் சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மிக எளிமையாக அதை பொருள் மாறாது அளித்திருப்பது வியக்க வைக்கிறது. இதே போல படிப்பவரைச் சிலிர்க்கச் செய்யும் பகுதிகள் உள்ளன.‘ஆன்ற தமிழ்ப்புலவீர், கற்பனையே யானாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே யிடமிருந்தாற் கூறீரோ?’ என்ற வரிகள், ஆங்கிலத்தில் எளிமையாகக் கூறப்பட்டிருப்பது, மொழிபெயர்ப்பாளரின் திறமையைக் காட்டுகிறது. மொத்தத்தில் பாரதிக்கும், தமிழுலகத்திற்கும் இந்நூலோர் பெரும் அஞ்சலி; ஆங்கில நூலகங்களுக்குச் செழுமையான சேர்மானம்.கல்லுாரிகளுக்குப் போற்ற வேண்டிய பொக்கிஷம்.கே.ஆர்.ஏ.நரசய்யா
சுப்பிரமணிய பாரதி தொகுப்பு – 1 (கவிதைகள் ஆங்கில மொழிபெயர்ப்பு)
-
தணிகேசன் பதிப்பகம்,கடலூர் சி.புதூர், சிறுபாக்கம் அஞ்சல், திட்டக்குடி - வட்டம், கடலூர்-606 123. (பக்கம்: 544.) பறவைகளுக்குத் தொழில் பறத்தல்; கவிஞர்களுக்குக் கவிதை. பிறவிக் கவியாக திகழ்பவருக்கு சொல்ல வேண்டுமோ?இறைவன் - தமிழ் - இயற்கை - காதல் - தத்துவம்-நாட்டு நடப்பு - தலைவர்கள் - தேசியம் - சமூகம் - சிறுவர்கள் - சமூகக் கேடுகள் - கொந்தளிப்பு - களிப்பு - அறிவுரை - கனிவுரை என 400 பாடல்களுக்கும் மேல் இந்நூலில் இடம் பெறுகிறது. புதிய கருத்துக்கள் - புதிய நோக்கு - நூதன உரசல் - அலசல் சற்று தேடித் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நல்ல மரபுக்கவிதை நூல்.
-
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. ( பக்கம்:88)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள். இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.
-
குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்:80)பெருங்கவிகளின் கருப்பொருள் பெண். "பெண்' பிரக்ஞையில் வெளிவந்துள்ளன மூன்று நூல்களுமே. "பா' கவிஞரின் பெயருக்கு முன் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூன்றையும் படித்து முடித்தால் பா (வையரைப் போற்றும்) விஜய் என்றாலும் மிகையாகா.எழுத்துக்கள் மட்டும் கவிதையாகாமல் இடம் பெறும் சித்திரப் படங்களும் எழில் சேர்க்கின்றன. மொத்தமாக 48 கவிதைகள். ஓரிரண்டைத் தவிர அனைத்தும் புதுக்கவிதைகள்.இளைய காதல் வட்டங்களுக்கு இந்த நூல்கள் நல்ல சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். மற்றவர்கள் "மலரும் நினைவுகளாக' மூழ்கி விடுவர்.சிங்கார நளினங்களை, நெளிவுகளை, பிரமிப்புகளை புதுக்கவிதைகளில் பிரகடனப்படுத்தியதற்கும், பரவசப்படுத்துவதற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் இளவட்டங்கள் கவிஞருக்குக் காணிக்கையாக்க வேண்டும்.
-
அகிலா பதிப்பகம், "அங்கப்பா இல்லம்,' 36, காந்தி நகர், கணபதி, கோவை-641 006. (பக்கம்: 144.)நல்ல மரபுக் கவிதைகள் இடம் பெற்றுள்ள சிறந்த கவிதைத் தொகுப்பு. தமிழ் மொழியின் சிறப்பு, தமிழர் தம் பெருமை காதல்- என்றெல்லாம் பல பொருட்கள் பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கவிதைகள் பலரின் கவனத்தைக் கவர வேண்டியவை. ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர் என்பதை சில கவிதைகளில் காண்கிறோம். பேரவையின் சீற்றத்தைக் கண்டு சினந்தெழுந்து எழுதுகையில் (ஆண்டவனா?) கவிஞர் கடவுளையே சபித்து தீர்த்து விட்டார். குழந்தைகளுக்கும் இதில் சில மரபுக் கவிதைகள். உள்ளபடியே இவர் தன்னை கவிஞர் எனக் கூறிக் கொள்ள எல்லாத் தகுதியும் இவருக்கு இருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை நூல் கட்டியம் கூறுகிறது.
-
இளந்திரை பதிப்பகம், 2/78, ஜி.ஆர்., நகர், மதுரை-625 007. (பக்கம்: 104). ஆசிரியரின் 48 புதுக்கவிதைகள். பொறுமையும் நேரமும் இருந்தால் வாசித்து மகிழலாம்.
-
பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்:96)அருட்செல்வரின் கழனியில் விளைந்த ஆல விழுதின் ஆணிவேர் இக்கவிஞர். கவிஞர் பெ.சிதம்பரநாதனின் கவிதைப் படைப்பான "பொய்கை' பழனியப்பா பிரதர்ஸ் வழி முகிழ்ந்து வந்திருக்கிறது. பல்வேறு மலர்கள் பிறந்து, வளர்ந்து, மணம் பரப்பி, உளம் மகிழ வைக்கும் நீர்ப்பரப்பு தான் பொய்கை. அங்கே அல்லியும், ஆம்பலும்; கமலமும் குவளையும், குமுதமும் மலர்ந்து விரிந்து கிடக்கும் மலர்ப்படுகை. அது போலவே இந்நூலில் கம்பனின் ராமாயணத்தில் துவங்கி, வள்ளலார், காந்தி, பாரதி, புத்தர் என இம்மண்ணில் வாழ்ந்து, வள்ளுவன் வாய்மொழிந்த வாழ்வியல் நெறிகளை, தங்களது வாழ்வின் வேள்வியாய்க் கொண்டு, வாழ்ந்து காட்டிய சரித்திரமாய் நிற்கின்ற பெருமக்களது போதனைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு ஞானக்களஞ்சியம் இக்கவிதை நூல்.இதில் ஆசிரியரது பரிவு, வேட்கை, கோபம், துணிவு, சொல்லாட்சி, கவிதை இன்பம் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பல கவிதைகளில் விரவி இருப்பதையும் பார்க்க முடிகிறது.
-
ஜெயச்சித்ரா, 6.தாளமுத்துப் பிள்ளை சந்து,வடக்குமாசி வீதி, மதுரை-1 (பக்கம்-84). கவி அரங்குகளில் தான் வாசித்தவற்றையும், தனது மனம் கவர்ந்த தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றி எழுதியவற்றையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர், காமராஜர், கலாம் ஆகியோரை பற்றி எழுதப்பட்டுள்ள கவிதைகள் இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவை. நாடு, மொழி, சமத்துவம் ஆகியவற்றை பெரிதும் விரும்புவோருக்கு இந்நூல் மிகப் பெரிய பரிசு.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.பக். 96. மனிதன், மனிதனுக்கு கூறியது குறள் என்று குறிப்பிடுவர். திருக்குறள் மனித வாழ்க்கையின் வழிகாட்டி நூல். அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளை விளக்கியுள்ளார் திருவள்ளுவர். இன்றைய காலகட்டத்தில், பாலியல், சமூகத்தில் பல கோரமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதற்கெல்லாம் காரணம், பாலியல் பற்றிய அறியாமையும், தவறான புரிந்து கொள்ளலுமே! காமத்துப்பாலில், கணவன்-மனைவி உறவு எப்படி இருப்பது சிறப்பு என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை அறிந்துகொண்டால், பாலியல் சம்பந்தமான பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.காமத்துப்பாலில் உள்ள 250 குறள்களுக் கான விளக்கத்தை புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் கவிஞர் தெய்வச்சிலை. இதைப் படித்தால், பாலியல் பற்றிய தவறான பார்வை மாறுவது உறுதி!
-
பொன்னி, 2/1758, சாரதி நகர், என்பீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை-91. (பக்கம்: 80)"வாழ்வின் கட்டமைப்பிலிருந்து அது தரும் அனுபவத்திலிருந்தும் நேரடியாகவும், பூடகமாகவும் சமூகத்தின் அறியாமையில் இருந்து விழிப்புக்காக என் கவிதைகள் உருவாகின்றன என்றால் மிகையில்லை' என்று கூறும் ஆசு என்கிற ஆ.சுப்ரமணியனின் இக்கவிதைத் தொகுப்பில், 62 புதுக்கவிதைகள் உள்ளன.""காவிய நடை முகிழ்ந்தஅவளோர் தீயின் பிறை''என சோதிமிகு பெண்ணையும்,""ஞாபகங்களின் சிக்குடைத்து வெளிறிய முகத்தில்ஒரு கண்ணீர்ப் பெருக்கு''என மவுனம் உடைத்த கவியாகி, இருந்தும் - இல்லாதது போல் எல்லாம் தெரிந்த அனுபவ அறிவைப் பல கவிதைகளில் இழையோடச் செய்துள்ளார். எனினும், கவிதைக் கட்டமைப்பு வாசகனைக் கவருவதாய் அமையவில்லை. பல இடங்களில் இடறச் செய்கின்றன
-
தாழையான் பதிப்பகம், 15 (4), அண்ணாமலை நகர், மூன்றாம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 64). உரைநடை ஒப்பனை செய்து கொள்ளும்போது பாடலாகிறது. அது காலில் சதங்கை கட்டிக் கொள்ளும்போது இசைப் பாடலாகிறது. ஆசிரியர் இசைப் பாடலின் மூலம் இதயத்தில் உள்ளதை நடைபயிலச் செய்துள்ளார். 54 அருமையான கவிதைகள். கவிதைப் பிரியர்களுக்கு கவிதை விருந்து.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தேவி, 4/5, முதல் குறுக்குத் தெரு, ஜானகிராமன் குடியிருப்பு, வில்லிவாக்கம், சென்னை-49, (பக்கம்: 128) நல்ல கவிதைகள் நம் மனத்தைத் தொடும்; மன மாசு போக்கும்; துன்ப நிலையை மாற்றும்; சுகம் பல தரும். அத்தகு வாய்ப்பும், வலிமையும் கவிதைகளுக்கு இருப்பதால் தான் கவிதை நூல்கள் பல தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இக்கவிதை நூலும் அவ்வகையில் ஒன்று"சுட்டும் விரல் நீ சுழற்றிவிடு சுழலும் பூமி கைப்பந்து, நெட்டை விரல் நீ நீட்டிவிடு நிமிர்ந்த வானம் கைவசந்தான்' என்று தன்னம்பிக்கையே, இதற்கு ஓர் உதாரணம். அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்
-
106/4, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).கண்ணதாசன் ஒரு ஜீவநதியாக இருந்து மற்ற கிளை நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் கற்பனையைத் தந்திருக்கிறார். இந்நூலில் வாழ்வில் கடந்த சுவையான 100 சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
-
திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா சாலை, சென்னை-600017. (பக்கம்:103)ஆசிரியரின் புதுக்கவிதைகளின் ஊர்வலமாய் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமான ஒரு புகைப்படம் என புத்தகத்தை அமர்க்களமாகத் தயாரித்திருக்கின்றனர். அரசியல் சாக்கடையா? என்று ஒரு கேள்வி எழுப்பிவிட்டு அதற்கு ஆசிரியர் கூறும் பதிலில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. இது போல் ஆழ்ந்த கருத்துக்கள் ஆங்காங்கு தென்படுகின்றன
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்