Advertisement

பிரபஞ்ச இரகசியங்கள்


பிரபஞ்ச இரகசியங்கள்

₹ 200

எழுத்துரு அளவு:

துறை தோறும் புது நூல்கள் தமிழில் வரவேண்டும். அந்த வகையில் ஒரு புது நூல் இது. பிரபஞ்சம் என்ற சொல்லின் பொருளை முழுதும் அறிந்தவர் யார்? பிரபஞ்சத்தை அண்டம், பேரண்டம் என்று சொல்லுகிறோம். அதன் ரகசியம் என்றால் படிக்க ஆர்வம் வரத்தான் செய்யும்.1370 கோடி ஆண்டுகளுக்கு முன் அண்டம் என்பது அணுவிலும் அணுவைப் போன்று கண்ணுக்கே புலப்படாத ஒன்றாக இருந்தது. இந்த அணுத்துகளில், ‘பெருவெடிப்பு’ (Big Bang) ஒன்று நிகழ்ந்தது. ‘பிக்பேங்’ என்பது இதற்கு அறிஞர்கள் சூட்டிய பெயர், இதில் பல துகள்கள் தெறித்து விழுந்தன. அதன் ஒரு துகள் தான் பிரபஞ்சம்.சூரியனும், பூமியும், சனியும், செவ்வாயும், புதனும், வியாழனும், வெள்ளியும் அடங்கியது பிரபஞ்சம். பூமியில் நிகழ்ந்த வெடிப்பில் சிதறி விழுந்து உருவானது தான் சந்திரன் என்னும் திங்கள். பல பிரபஞ்சங்கள் உள்ளன. பல சூரியன்கள் உள்ளன. விந்தையிலும் விந்தையானது பிரபஞ்ச ரகசியம்.படிக்கப் படிக்க வியப்பும் மலைப்பும் ஏற்படுகின்றன. பேரண்டத்தில் அடங்கி உள்ள கோடிக்கணக்கான அண்டங்களில் ஒன்று பால்வெளி (milky way) அண்டம். இது சுருள் போன்ற அமைப்பை உடையது. இந்தப் பால்வெளி அண்டத்தில்தான் சூரியக் குடும்பம் உள்ளது. சூரியக் குடும்பத்தில் தான் நாம் வாழும் பூமி உள்ளது.பால்வெளி மண்டலம் போல் ஏறத்தாழ நானுாறு அல்லது ஐந்நூறு கோடி மண்டலங்களை உடையது நாம் சொல்லும் பிரபஞ்சம். அப்படியானால் பிரபஞ்சம் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்தால் கற்பனைக்கும் எட்டாத பிரமாண்டமாக இருக்கும் என்பது உறுதி.பிரபஞ்சம் எனும் சொல்லே இவ்வளவு விளக்கம் பெற வேண்டியிருந்தால் அதன் ரகசியங்கள் சொல்லக் கூடுமோ! அவற்றை அறிய நூலுக்குள் போகத்தில் வேண்டும். விஞ்ஞானம்-அறிவியல் என, அயர்ந்துவிட வேண்டாம். படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும்.வீட்டிலும் நூலகங்களிலும் இருக்க வேண்டிய நன்னுால் இது.–கவிக்கோ ஞானச்செல்வன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்