இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கால்மாட்டில், விளக்கேற்றி வைத்து விட்டதால், ஆங்கில மருத்துவ முறைகள், அரியணையில் அமர்ந்து விட்டன. பெரும்பாலான பிரசவங்கள், அறுவை சிகிச்சையில் முடிகின்றன. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமானதற்கு, கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்ததும் ஒரு காரணம். இன்றைய நிலையில், மீண்டும், மரபு வழி மருத்துவ முறைகளின் மேல், கவனம் திரும்ப துவங்கி உள்ளது. ஊடகவியலாளர் கலாநிதி, மரபு வழி மருத்துவரின் வழிகாட்டுதலால், தன் மனைவிக்கு தானே சுகப்பிரசவம் செய்ததை, உயிர் உருக எழுதியுள்ளார். முன்னுரையில் நூலாசிரியர் எழுதியதை போல், ‘இது மருத்துவ நூலோ அல்லது ஆய்வு நூலோ அல்ல; ஒரு பெண்ணின் கணவனாக, ஒரு குழந்தையின் தகப்பனாக, 12 மாதங்களில் கண்டுணர்ந்த விஷயங்களின் அனுபவ தொகுப்பு’.நூலாசிரியருக்கு ஆறு மாதமாக, உயிரே போய்விடும் அளவிற்கு கடும் இருமல். பல்வேறு அலோபதி மருந்துகளால் சரிப்படுத்த முடியாததால், தற்கொலை எண்ணமும் துளிர் விட்டிருக்கிறது. இறுதியில், மரபு வழி மருத்துவர் ஏங்கெல்ஸ்ராஜா மூலம், இரண்டு வாரத்தில் ஒட்டுமொத்த இருமலும் குணமானதை, முதல் அத்தியாயத்தில், கண்ணீர் வழிய எழுதி இருக்கிறார். இதிலிருந்து இயற்கை வழி மருத்துவத்தின் தேவை துவங்குகிறது.தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, பிரசவத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என, அலோபதி மருத்துவமுறை கூறி வரும் நிலையில், அதை முன் வைத்து, பெரிய அளவிலான வர்த்தகம் நடந்து வருவதை, இந்நூல் வெளிச்சப்படுத்துகிறது. அதேநேரம், கிராமப்புறங்களில், 200 ரூபாய் செலவில், சுகப்பிரசவங்கள் நடந்து வருவதும் மேற்கோள் காட்டப்படுகிறது. பிரசவ அறுவை சிகிச்சையில் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும், நூலில் விளக்கப்படுகிறது.இயற்கை வழியில் குழந்தை பெற்றுக் கொள்ள பெற்றோர் விரும்பினால், கருவுறுதலுக்கு முன்னதாக செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்தும், நூலில் வழிகாட்டப்பட்டுள்ளது. குழந்தையை பெற்றெடுத்த சவீதா கலாநிதியும், தன் அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். பிரசவத்தின் போது, கொடி சுற்றிக் கொண்ட குழந்தையை, அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டும் என்ற அலோபதி மருத்துவ முறையின் கோட்பாட்டை, இந்த நூல் தகர்த்துள்ளது. மரபு வழி மருத்துவத்தில், ஆர்வம் உள்ளோர், கட்டாயம் இந்த நூலை படிக்கலாம்.– அ.ப.இராசா
இயற்கை வழியில் இனிய பிரசவம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்)
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்