Advertisement

அஸ்தினாபுரம்


அஸ்தினாபுரம்

₹ 380

எழுத்துரு அளவு:

ஜோ டி குரூஸின் கதை மாந்தர்கள் சாதாரண மனிதர்கள்; ஆகையால் எளிதில் இனங்கண்டு கொள்ளப்படுபவர்கள். எங்கோ ஆமந்துரையில் பிறந்த அமுதனுக்கும், சென்னை செம்மாங்குப்பத்து ஆனந்திக்கும் வாழ்வில் இயற்கை சூட்சுமமான முடிச்சு போட்டிருந்தது என்பது தான் அஸ்தினாபுரம் நாவலின் கதை.கதைக்கு அஸ்திவாரமே இந்த உறவுதான். அது உண்டான விதம், விரிந்து பரந்த விஸ்தாரம் எல்லாம் அழகாகச் சொல்லப்படுகிறது. நாவல் சொல்லப்படும் விதத்தில், ஆசிரியரின் முழு வளர்ச்சி அடைந்த நடை தென்படுகிறது.தன்னைத் தானே வெளிப்படுத்தும் வகையில் நெய்தல் சமுதாய உணர்வுகளை, தன் நாவலின் மற்ற கதாபாத்திரங்கள் மூலம் வெளிக்கொணர்கிறார், ஜோ டி குருஸ். ஆழிசூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம் வரை, அவரது சொற்பாங்கின், கதை நடையின் பரிமாண வளர்ச்சியை, வாசிக்கிற நம்மால் நன்கு உணர முடிகிறது. அவர் எடுத்துக் கொண்டுள்ள சமுதாயத்தின் நிலையை, நடப்பியல் முறையில்தான் காண்கிறார். ஒரு வகையில் அஸ்தினாபுரம் நாவலை இன்றைய நிலையில், அவர் தேர்ந்தெடுத்துள்ள சமுதாயத்தின் விமர்சனமாகவே காண்கிறோம். எழுதப்பட்ட மொழியும் அந்த சமுதாயத்தினதே. பாத்திரங்கள் எல்லோருமே நெய்தல் நிலத்து மனிதர்கள்.நாவலின் நாயகன் அமுதனின் செயல்பாடு பற்றி ஆசிரியர் சொல்லிச் செல்கையில் நம்பிக்கையின்மையைத் தாண்டி, கதாநாயகன் திருப்புமுனையைக் காணும் காரணத்தால், ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. நாவலுக்கு விறுவிறுப்பையும் சேர்க்கிறது. கப்பல், கடல் சார் பணியில் சேர்ந்த பிறகு, துறைமுகங்களில் ஆரம்பத்தில் மேலாண்மையால் கதை நாயகன் அமுதன் நடத்தப்படும் விதமும், பின்னர் சற்று மூத்தநிலைக்கு வந்த பிறகு அவனுள் ஏற்படும் மாற்றங்களும், அந்த துறையில் ஈடுபட்டோருக்குத்தான் புரியும். ஆயினும் அதைச் சொல்லும் பாங்கில் மற்றவர்களுக்கும் தெரியுமாறு சொல்வதில், ஆசிரியரது எழுத்தனுபவமும் திறமையும் புலப்படுகின்றன.கடல் வழி வணிகம், ஒரு ‘ராட் ரேஸ்’. துரோகங்கள், சூழ்ச்சிகள், ஏமாற்றுவேலைகள் நிரம்பியுள்ள இடம் துறைமுகம். இந்த நிலையை தனது நாவலில் உருவகப்படுத்துவதில், ஆசிரியர் வெற்றி காண்கிறார்.‘‘தாராளமயமாக்கல்’ கொள்கையின் மூலம், தனியார் நிறுவனங்கள் துறைமுகக் கையாளுமையை எடுத்துக் கொண்டாலும், செயல்பாட்டிற்கான உரிமங்கள் கொடுக்கும் வலுவான பிடி, பிராந்தியத் துறைமுக நிர்வாகத்திடமும் சுங்கத்தினிடமும் இருந்தது. டெர்மினல் தன்னிச்சையாகச் செயல் பட அனுமதிக்கப்பட்டாலும் அது சார்ந்த துறைமுக நிர்வாகத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது’ என்று சொல்கையில், அரசு சாதாரணமாகச் சொல்லிவரும் ‘தாராளமயமாக்கல்’ கொள்கையின் கோட்பாட்டிற்கும் செயல்படுத்துகையில் காணும் பயிற்சிக்கும் உள்ள பெரும் இடைவெளியும் அதனால் பெருகும் ஊழல்களும் தெளிவாக்கப்படுகின்றன. கப்பல்களைச் சரியான துறையில் கொண்டுவர ஏஜன்டுகள் துறைமுக அதிகாரிகளைக் ‘கவனிக்க’ வேண்டிய சீரழிந்த நிலையையும் இன்றைய நிலையிலும் காண்கிறோம் என்பது உண்மை. துறைமுகத்துக்கு வெளியிலிருந்து, வந்து போகும் வெளிநாட்டுப் பெருங்கப்பல்களையும் துறைமுகத்தினுள் நுழையும் வெளியேறும் ராட்சத லாரிகளையும் பார்த்து மலைத்து நிற்கையில், அவற்றை நடத்துவதில் துறைமுகப் பணியாளர்களுக்கு ஏற்படும் பல தொந்தரவுகளையும் ஊழல் விபரீதங்களையும், தெரிந்து கொள்ளாத பலருக்கு இந்த நாவல் உண்மைகளை எடுத்துக் கூறுகிறது. துறைமுகம் ஒரு மாயதேசம்; அங்கு நடக்கும் பல சட்டவிரோதச் செயல்கள் வெளியில் தெரிவதில்லை!‘‘அதிகார மையங்களுக்கு வருவோரும் எப்படி பிரச்னை கொடுத்து, பணமோ, சலுகையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதில் குறியாய் இருக்கிறார்களே அல்லாது, யாருக்கும் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் அக்கறையே இல்லை. கப்பலுக்குக் கிளியரன்ஸ் தராமல் இழுத்தடிக்கும் போர்ட் ஹெல்த் ஆபீசர், பிரச்னையைக் கப்பல் ஏஜன்சி அசோசியேஷன் மூலம் டெல்லி வரை கொண்டு போயும், எந்த நடவடிக்கையும் யார் மீதும் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை,’’ என்று ஆசிரியர் சொல்லும்போது, துறைமுகம் சார்ந்த எவரும் ஒப்புக்கொள்ளத் தான் செய்வர். ஏனெனில் அது உண்மையாக நடக்கும் செயல்தான்!அபாயகரமான சரக்கு கொண்டு வந்திருந்த ஒரு கப்பல் படும் அவஸ்தையும், அதனைக் கையாளும் விதமும் அழகிய முறையில் சொல்லப்பட்டுள்ளது. ‘‘கப்பல் எப்போது வரும், பிரச்னையை எப்போது கிளப்பலாம் என்று ஆவலோடு காத்திருந்த முற்போக்கு பொது சேவைக்காரர்களுக்கு, தம்மளவில் தைரியம் இல்லாததால் ஜெட்டிக்கு வரும் பாதையில், எங்கள் வலைகளை அறுக்கிறார்கள் என்று மீனவர்களை ஒருபுறம் தூண்டிவிட்டு, மறுபுறம் வீ.சி.எம்., (வினில் க்ளோரைட் மானோமர். இது ஒரு வகை திரவம். இதை கையாள்வதற்கு விதிமுறைகளுண்டு) இறக்கப்படும்போது வரும் கசிவால் சூழல் பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்திலும் பொதுநல வழக்குத் தொடர்ந்து விட்டார்கள்,’’ என்று சொல்கையில், இன்றைய அரசியல்வாதிகள், பொதுநல முற்போக்கு சேவையாளர்கள் என்று காட்டிக் கொண்டு எல்லா வேலைகளுக்கும் முட்டுக்கட்டை போடும் செயல்பாட்டின் தோலை உரித்துக் காட்டுகிறார். அதைச் சமாளிக்கும் விதமும் நன்கு விவரிக்கப்படுகிறது. சாகித்ய அகாடமியின் கொற்கை நாவலுக்காக விருது பெற்ற ஆசிரியர் ஜோ டி குருஸ், இந்த நாவலில் கடல் வழி வணிகம், துறைமுகங்கள் சார்ந்த இயல்பியல் கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். ஆசிரியரை அறிந்தவர்களுக்கு, இது அவரது சுயசரிதையின் பிரதிபலிப்பாகவே தோன்றும்.மொத்தத்தில் இந்த நாவல், எல்லா பரிமாணங்களிலும், ஒரு நல்ல நாவலுக்குண்டான தகுதியைப் பெற்று விடுகிறது. இதுவரை தமிழில் இதுபோன்று ஒரு தொழிலைக் கதாநாயகனாகக் கொண்ட எழுத்து வெளிவந்ததில்லை. ஆம். இந்த நாவலில் துறைமுகத் தொழிலே கதாநாயகனாக ஆகிவிடுகிறது.‘இதுதான் எனது கடைசி நாவல்’ என்கிறார் ஆசிரியர். ஆனால் நாவலைப் படிக்கையில் அது சாத்தியமாகும் போல் தோன்றவில்லை!– கே.ஆர்.ஏ. நரசய்யாஎழுத்தாளர்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • ஜெய் சக்தியின் நாவல்களில் ஒரு மென்மையும், இதமும் உண்டு!காதலிக்கும், பெண்ணின் சகோதரருக்கும் பல சலுகைகளை வழங்கிவிட்டு, அதனால் பல சங்கடங்களுக்கு ஆளாகும் ஒரு தொழில் அதிபரின் கதையை நன்றாகச் சொல்லி இருக்கிறார்.பழைய பீம் சிங் திரைப்படத்தைப் பார்ப்பது போல், இதமளிக்கும் குடும்பச் சித்திரம்!ஸ்ரீ செல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14.

  • துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. விலை: ரூ.100. பக்கம்(2): 288.

  • கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 248)பிரபல நாடக எழுத்தாளரான விக்டர் தனது மனைவி, குழந்தை, வேலைக்காரன் மற்றும் நாயுடன் பண்ணை வீட்டில் தங்கி தனது அடுத்த படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.ஒரு நாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது வேலைக்காரனையும், நாயையும், துப்பாக்கிகளையும் காணவில்லை. தொலைபேசி வேலை செய்யவில்லை. காரின் ஸ்பார்க் பிளக்குகளும் காணவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் மர்ம நாவலின் ஆரம்பமே இப்படி நெஞ்சை உறைய வைக்கிறது. நூலைப் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைக்கத் தோன்றும்.மர்ம நாவல் பிரியர்களுக்கு தமிழில் ஜேம்ஸ் ஹார்ட் சேஸின் நாவல்களைப் படிக்கும் வாய்ப்பை கண்ணதாசன் பதிப்பகம் ஏற்படுத்தித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.

  • கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. பக்கம்; (2) 288) துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.

  • கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.பணக்காரரான லியோனைட் எனும் எண்பது வயதைக் கடந்த தாத்தா இல்லாமல் இருக்கவே முடியாது என்ற பாசப் பிணைப்பான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். எதிர்பாராது லியோனைட் மரணிக்கிறார். இயற்கையாய் அல்ல, விஷம் வைத்து. யார், எதற்காக அத்தனை முதியவரைப் போய் ஈவிரக்கமின்றி கொன்றது? இக் கேள்வியைத் துரத்திக் கொண்டு துப்பறிதல் சூடு பறக்கத் துவங்குகிறது. எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத ஓர் அற்புத த்ரில்லர்தான் குரூர வீடு.

  • காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 177). "நவீன ஓவியம்' படைப்பு, படைப்பாளர், பார்வையாளர், நிலைப்பாடுகளை முன்னிறுத்தி நவீன ஓவியர்களிடமும் படைப்பு - படைப்பாளர் குறித்து கலை இலக்கிய விமர்சகர்களாக அறியபட்டவர்களிடமும் நேரில் சந்தித்தும் விடைபெற்றதும் நூல் வடிவம் பெற்றுள்ளது. முனைவர் பட்ட ஆய்வாளரின் இந்த கலை விமர்சனக் கட்டுரைகள் தமிழுக்குப் புதிது; தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இதற்கு நிதி வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இந்தப் புத்தகம் ஓவியக் கலைஞர்களைப் பற்றியது. சிறப்பான தகவல்களின் பெட்டகம். படித்துப் பாருங்கள். பாராட்ட வார்த்தைகளைத் தேடுவீர்கள்

  • ஸ்ரீ செண்பாக பதிப்பகம், 34 பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை- 17நாமக்கல் கவிஞர் சிறந்த தேசியக் கவிஞர் என்பது எல்லாரும் அறிந்த செய்தி. கவிஞரவர்கள் சிறந்த கதையாசிரியரும் ஆவார். "மலைக் கள்ளன்' என்ற இவரது கதை சிறந்த திரைப்படமாக வெளிவந்து பெரு வெற்றி பெற்றது.இந்நூலுள் கவிஞர், தம் தந்தையார் சொல்வது போலவும், தாயார் சொல்வது போலவும் கதைகள் படைத்துள்ளார். சங்கிலிக்குறவன், கோவில் திருட்டு, இலுப்ப மர பிசாசு எனும் கதைகள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள், கேட்டறிந்த சுவையான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். உணர்வும், உற்சாகமும் தரும் தமிழ் நடை. யாவரும் படித்துச் சுவைக்க வேண்டிய நூல் இது.

  • பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104). சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயர்வு என்பர். சிறு வயதிலேயே அவர்கள் மனதில் நல்லதை விதைத்து விட்டால், அது செடியாக, மரமாகி அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கச் செய்யும் என்பது கண்கூடு. இந்நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு நீதியை சொல்கின்றன. சிறுவர்களை நல்வழிப்படுத்த இத்தகைய நூல்கள் பயன்படும் என்பது நிதர்சன உண்மை. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கி, படிக்க கொடுங்கள்.

  • ஸ்ரீசெல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 225)இரண்டு குறு நாவல்கள் அடங்கிய தொகுதி. பாப்புலர் மாத நாவல் இலக்கணத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட நாவல்கள்."பூ ஒன்று பூத்தது' - நாவலின் கதாநாயகன் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியாமல் போனதற்குக் காரணம், மூட நம்பிக்கையே என்று நிறுவுகிறார். "திசை மாறிய பறவை' - என்ற நாவலில் கல்யாணம் ஆகும் முன்னரே கன்னிப் பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதால் நிகழும் கேடுகளைச் சொல்கிறார்.சில இடங்களில் கவிதா பூர்வமான வர்ணனைகள் நாவல்களுக்குத் தனி அழகைத் தருகின்றன.

  • மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447. 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 284)புதினம் பத்தாவது ஆண்டு விழாவை ஒட்டி உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளும், ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகளுமாக இத்தொகுதியில் 23 கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுதியவர்கள், கனடா, சுவிஸ், இலங்கை, தமிழகம் என பல நாட்டவர். எனவே கதைக் களங்களும், உலகளவில் உள்ளது. பல கதைகள் இலங்கைத் தமிழில் இருப்பினும் புரிந்து கொண்டு படித்து ரசிக்க முடிகிறது. பன்னாட்டு சிறுகதை விருந்து.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • மணிமேகலை பிரசுரம், சென்னை-17. (பக்கம்: 332) படைப்பாளியாக தான் உருவாகக் காரணமான சிங்கப்பூர் நகருக்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வித்தியாசமானது. புதுமையானது வாசகராக இருந்து நிறைய நூல்களை படித்து 1995ல் எழுத ஆரம்பித்து, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதி பரிசும் பெற்றுள்ள இவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.சிங்கப்பூர் கதைக்களத்தில் சீனக்கிழவி வருகிறாள். மலாயக்காரர்கள் வருகின்றனர். கலாசாரம் சங்கமம். நமக்கோ வித்தியாசமான கதைகள் கிடைத்துவிட்டன.ஆசிரியையின் எழுத்துப்பணி சிறக்க படிக்கும் வாசகர்கள் நிச்சயம் வாழ்த்துவர்.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (குறிஞ்சி மலர்-பக்கம்: 387)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.

  • சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.(பொன்விலங்கு - பக்கம்: 615)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.

  • சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. ( பாண்டிமா தேவி - பக்கம்:640)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017

  • உஷா முத்துராமன். வெளியீடு: மணிமேகலை பிரசுரம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 186.). 25 குடும்பப்பாங்கான சிறுகதைகள். ராஜேஷ்குமார், தேவிபாலா இச்சிறுகதைகளை பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளதன் மூலம் சிறுகதைகளின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).திருக்குறளின் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் காதல் பாலைக் கலந்து தரப்பட்ட கதைகளின் தொகுப்பு இந்த நூல். 26 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பொருத்தமாகக் காதல் கதைகளை உருவாக்கியுள்ளார் கவுதம். சாதாரணமாக வரும் குறள் நெறிக் கதைகளைப் போல் அல்லாமல் இயல்பான தன்மையுடன் இவை எழுதப்பட்டுள்ளதால் எல்லாத் தரப்பினரையும் கவரும் எனலாம்.

புதிய வெளியீடுகள்