சர்க்கரை நோய், நீரிழிவு நோய் என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தாலும், அதன் தன்மை பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவே. இந்த நோய் இரு வகைப்படும். டைப் – 1 மற்றும் டைப் – 2. இதில், டைப் – 2 நோய் மாத்திரைகள் மூலமும், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றால் கட்டுப்படுத்தக் கூடியது. ஆனால், டைப் – 1 நோய் இன்சுலின் என்ற ஊசி மருந்தால் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடியது. இந்த புத்தகம் டைப் – 1 நோய்க்கான இன்சுலின் ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை விவரிக்கிறது. நோயாளிகளின் அனுபவங்களை இடையிடையே விவரித்துள்ளதால், நாவல் படிப்பது போன்ற உணர்வை தருகிறது.சர்க்கரை கோளாறு சிகிச்சை வரலாற்றில், 1921 திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு. கனடா, டொரான்டோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரட்ரிக் பேன்டிங், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சார்லஸ் போஸ் இருவரும், பேராசிரியர் ஜே.ஜே.ஆர்.மேக்லியோடு, உடலியல் துறை, டாக்டர் ஜேஸ் கோலிப், உயிர் வேதியியலாளர் உதவியுடன் இன்சுலினை கண்டுபிடித்தனர். இன்சுலின் கண்டுபிடிப்பதற்கு முன், டைப் – 1 சர்க்கரை கோளாறுடன் பிறக்கும் குழந்தைகள், பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இந்தக் கோளாறுக்கு பலியாகி விடுவர். சர்க்கரை கோளாறு சிகிச்சையில் வல்லுனரான டாக்டர் வி.மோகன், இந்த புத்தகத்தில், நம் நாட்டில் சர்க்கரை கோளாறு ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் மிகச் சிறப்பாக பணியாற்றுபவர். நாட்டின் முதல் சர்க்கரை கோளாறு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தை, 1920ல் கல்கத்தாவில் துவக்கிய டாக்டர் ஜே.பி.போஸ் போன்றோர் பற்றி எழுதியுள்ளார். சர்க்கரை கோளாறு உள்ளவர்களின் நிஜ அனுபவங்களான காதல், அன்பு, சோகம், ஏமாற்றம், நிராகரிப்பு என்று பதிவு செய்துள்ளார்.நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டு, இன்சுலின் எடுத்துக் கொள்வதில் பல வசதிகள் வருகின்றன. பேன்டிங், போஸ், டாக்டர் மோகனின் தந்தை விஸ்வநாதன் என இந்த துறையில் சாதித்த முன்னாள் ஹீரோக்கள் இன்று இருந்திருந்தால், அவர்கள் அடித்தளம் இட்ட பல விஷயங்கள் எந்த அளவு மேம்பாடு அடைந்து, சர்க்கரை பாதிப்பு சிகிச்சையில் பலன் தந்திருக்கிறது என்பதை கண்டு நிச்சயம் மகிழ்ந்திருப்பர்.– இளங்கோவன்
பேன்டிங், போஸ், இவர்களுக்கு பின்னும்...!
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்