Advertisement

நலம் நம் கையில் பாகம் – 1

₹ 190

எழுத்துரு அளவு:

சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் மருத்துவ நுால்கள் எழுதியவர் டாக்டர் கு.கணேசன். ‘தினமலர்’ நாளிதழ் மதுரை பதிப்பில், ‘என் பார்வை’ பகுதியில் எழுதிய 33 மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நுால். வெளியான போதே பெரும் வரவேற்பை பெற்றது. மாதிரிக்கு சில தலைப்புகளை எடுத்துக்கொள்வோம்...‘செலவில்லாத மருந்து சிரிப்பு, உங்களுக்கு பிரஷர் இருக்கிறதா, உங்களுக்கு கொழுப்பு அதிகமா? இதயத்தின் எதிரிகள் யார்? உங்களுக்கு இரண்டாவது இதயம் வேண்டுமா? இதயம் காக்க 10 கட்டளைகள், சிறுநீரகம் காக்க 10 கட்டளைகள், காக்க... காக்க... கல்லீரல் காக்க, மூட்டுவலிக்கு முடிவு கட்டுவோம், முகத்துக்குப் பரு பாரமா?’ இப்படியான தலைப்புகளில் எழுதினால் யார் தான் படிக்க மாட்டர். இந்த கட்டுரைகள் வாசகர்களுக்கு பீதி தராது; மாறாக மருத்துவ அறிவும், ஆலோசனையும் தரும். நமக்கும் நோய் இருக்குமோ என்ற அச்சம் வராது; மாறாக நோயில் இருந்து காத்துக்கொள்ளும் வித்தையை கற்கலாம். உடலின் மருத்துவ அறிவியல் விந்தைகளை அறியலாம்.குடும்பத்திற்கு ஒரு டாக்டர் என்பது போல, வீட்டுக்கு வீடு இந்த மருத்துவக் கையேடும் இருக்க வேண்டும்.– ஜி.வி.ஆர்.,

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்