இணைய வழியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடிய போது, தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு நுால். மாணவர்களுக்கு ஏற்படும் பதற்றம், கவலை, மனச் சோர்வு, மன அழுத்தம், பெற்றோரின் எதிர்பார்ப்பு, ஆசிரியர் பங்களிப்பு என அளித்த விளக்கமான பதில்கள் நிரல் படுத்தப்பட்டுள்ளன. போட்டியிடுவதை விட, சிறப்பாக என்ன செய்யலாம் என்று முயற்சிப்பதே சிறப்பு என கருத்துரைத்துள்ளார். பெற்றோரின் நிறைவேறாத கனவுகளை, குழந்தைகள் வாயிலாக நிறைவேற்ற முயலக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.வளர்ச்சிக்காக, மக்களால், மாணவர்களால், ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு முறையான கல்வி அளிப்பதை உறுதி செய்யாமல், சமுதாயம் முன்னேற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்வுகளுக்காகப் படிப்பது தவறானது; பாடத் திட்டத்தை முழு மனதையும்செலுத்தி படித்தால், தேர்வு எழுதுவது ஒரு பிரச்னையே அல்ல என குறிப்பிட்டுள்ளார். உயர்ந்த எண்ணத்தை தந்து மாணவர்களை நெறிப்படுத்த உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்
- மாணவருக்காக
- மாணவர்களுக்கு நரேந்திரமோடி
மாணவர்களுக்கு நரேந்திரமோடி
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் மாணவருக்காக
பள்ளி மாணவர்களுக்கான குவிஸ்
சுரா பதிப்பகம்
மாணவருக்காக
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. போன்: 2616 2173. தேசப்பற்று, பொது அறிவு, பழமொழி, இலக்கியம், கலை, பிரபலம், விளையாட்டு, விஞ்ஞானம், அரசியல் என 1000 குவிஸ் பதில்களுடன் இருக்கிறது
Dictionary of Mathematics
ஆசிரியர்
மாணவருக்காக
First Edition. 1620, J Block, 16th Main Road, Anna Nagar, Chennai 40.(பக்கம்:396). கணிதம் பயிலும் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் கணிதக் கையேடு
கல்வி உளவியல் துணைவன் பகுதி
சுரா பதிப்பகம்
மாணவருக்காக
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக் 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 140) கல்வி உளவியல் பாடப்பொருள் முழுமையும் ஒரு மதிப்பெண் வினா - விடை வடிவங்களில் தெளிவாகப் பிரித்தும் மாணவர்கள் குழப்பமின்றி எளிதாகப் புரிந்து, அதிக மதிப்பெண்கள் பெற உதவும் வகையில் அமைந்துள்ள இந்நூல் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற...?
தமிழ் புத்தகாலயம்
மாணவருக்காக
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
பழகத் தெரிந்து கொள்வோம்?
தமிழ் புத்தகாலயம்
மாணவருக்காக
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
வளரும் உள்ளம் (மாணவர் உளவியல்)
தமிழ் புத்தகாலயம்
மாணவருக்காக
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
இன்தமிழ்க் கட்டுரைகளும், கடிதங்களும்
தமிழ் புத்தகாலயம்
மாணவருக்காக
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
ஐ.ஏ.எஸ்., வெற்றியின் ரகசியம்
ஆசிரியர்
மாணவருக்காக
கிடைக்கும் இடம்: மாவட்ட மைய நூலகம், 125 ஏ, பழைய புறவழிச் சாலை. கரூர்-1 போன்: 04324 -248500 இந்திய நிர்வாகப் பணிகளில் பங்கேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க விரும்புகிறவர்களுக்கு எழுதப்பட்ட நூல். கிராமப்புற மாணவர்கள், வழிகாட்டுதல் இல்லாத மாணவர்களுக்குச் சிறந்த கையேடு. தமிழகத்தில் இருந்து அதிக மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறார் ஆசிரியர். ஆசிரியர் கடலூரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்து மாணவர்களுக்கு உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உற்சாகம் உங்களுடன்...:
விஜயா பதிப்பகம்
மாணவருக்காக
விஜயா பதிப்பகம், கோவை. போன்: 0422- 2394614. (பக்கம்: 108). "எது முக்கியம்?,' "கூட்டணி வேண்டும்,' !மனசே... மனசே,' "அதே நேரம்,' " புத்தாண்டு தீர்மானம்,' "போதும்', "ஒவ்வொரு நாளும் ஒரு மனிதனின் பலம் என 24 தலைப்புகளில் சிறு சிறு கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.கவிஞரின் வரிகளில் "உற்சாகமாக உங்களுடன் சில இதோ...உண்மை முக்கியம் உயர்வுடன் வாழ (பக்.10), உயர்வுகள் முக்கியம் உதாரணமாய் வாழ (பக்.5), வியர்வை முக்கியம் வெற்றியாய் வாழ (பக்.9), வெற்றி முக்கியம் வாழ்வாங்கு வாழ (பக்.8), ஒரு தோல்வி போதும் எப்போதும் ஜெயிக்க (பக்.91).ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு வார்த்தையைக் கொண்டு வடம் பிடித்துச் செல்கிறது. கவிதை ஓசை நயம் என்பதை விட கருத்து வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.சிறுவர்கள் கூட படித்து சிலவற்றை பின்பற்றலாம்.
நினைவுத்திறன் வளர்த்தல்
பால வசந்த பதிப்பகம்,
மாணவருக்காக
பால வசந்த பதிப்பகம், 483, 24வது தெரு, கொரட்டூர், சென்னை-80.
COLLEGES ADMISSIONS GUIDE
ஆசிரியர்
மாணவருக்காக
IInd Floor, New No.11, CIT Colory 1st main RD, Mylapore, Chennai 600004. ஆங்கில நூல்.மருத்துவம், பொறியியல், கட்டடக்கலை, ஓட்டல் நிர்வாகம், சட்டம் ஆகிய துறைகளில் படிக்க விரும்பும் மாணவர்களும், பெற்றோர்களும் பின்பற்றக்கூடிய நயமான கையேடு, ஆசிரியர்களும் இந்நூலைப் பார்த்தால், பிரமித்துவிடுவர். கல்லூரிகள், படிப்பு விவரம் உட்பட எல்லாத் தகவல்களும் கோர்வையாக ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கிறது.
INCREASE YOUR BRAINPOWER
ஆசிரியர்
மாணவருக்காக
Wiley India Pvt Ltd, 44 35/7, Ansari Road, Daryaganj, New Delhi110002. (Price: Rs.149.) Contact Ph: 98410 22399.(ஆங்கில நூல்) புத்திசாலித்தனத்தால் திறமையும், வாழ்வு வளமும் அமைகிறது. தற்போதைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும், அதற்கான வேலை வாய்ப்புகளும் இவற்றை உறுதி செய்கின்றன. மூளையின் செயல் என்ன, அதன் திறனை அதிகரிப்பது எப்படி? என்பதற்கு பல்வேறு அறிதிறன் பயிற்சிகளும், விளக்கங்களும் கொண்ட சிறப்பான நூல்.
குழந்தைகளே, கலாமைக் கேளுங்கள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மாணவருக்காக
நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 120). மரியாதைக்குரிய ஜனாதிபதி அப்துல் கலாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களை சந்தித்து கேள்வி கேட்கச் சொல்லி பதில் அளிப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருப்பவர். இந்த கேள்வி - பதில்களை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தி தொகுத்து வழங்கியுள்ளார். குழந்தைகளின் கேள்விகளில் ஆர்வத்தின் வெளிப்பாடும், ஜனாதிபதியின் பதில்களில் தெளிவான அறிவுரையும் பளிச்சிடுகின்றன. கலாமின் கவிதை முன்னுரைக்கு முன் நம்மை வரவேற்கிறது. வண்ணப் படங்களுடன் மிக நேர்த்தியாக புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மங்காப் புகழ்பெற்ற மக்கள் தொண்டர்கள்
சுவாமி நிலையம்
மாணவருக்காக
சுவாமி நிலையம், பிளாட் எண்.10, கிருஷ்ணமணி நகர், அனுப்பானடி, மதுரை-9. (பக்கம்: 168). அன்பு, தொண்டு, இரக்கம் ஆகிய அருங்குணங்கள் நிறைந்த சிறந்த 9 பண்பாளர்களைப் பற்றிய புத்தகம். அன்னை தெரசா உட்பட ஆசிரியர் தேர்வு செய்துள்ள மனிதர்களின் பட்டியலில் ஆபிரகாம் லிங்கனும், பிளாரென்ஸ் நைட்டிங்கேளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடைய வாழ்க்கை, ஆற்றிய சமூகப் பணி பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற புத்தகம்.
வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி?
வசந்த் பதிப்பகம்
மாணவருக்காக
வசந்த் பதிப்பகம், 151, 6வது தெரு, கம்பர் நகர், சென்னை-600 099. மொபைல்: 98404 36250 நல்ல மதிப்பெண்கள் பெற்று மேல்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வழிகாட்டியாக இந்த நூல் பெரிதும்< உதவும். வெளிநாடுகளில் படிக்க விரும்புவோரும் எப்படி வங்கிகளில் நிதியுதவி பெறலாம் என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. வங்கி வாரியாக இப்பட்டியல் அமைந்திருப்பது நூலின் சிறப்பு, அதிலும் விளிம்புத் தொகை எவ்வளவு என்பதையும் விளக்கியிருப்பது மாணவர்களுக்கும்,பெற்றோருக்கும் பெரிதும் உதவிடும். இம்மாதிரி 45 வங்கிகளுக்கான பட்டியல் அமைந்திருப்பது சிறப்பானது.
வளம் பெற வள்ளுவர் குறள்
அம்சா பதிப்பகம்
மாணவருக்காக
அம்சா பதிப்பகம், 9-ஏ, 4வது தெரு, மேக்மில்லன் காலனி, நங்கநல்லூர், சென்னை-61. (பக்கம்: 128) "அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தறித்த குறள்' என்ற அவ்வையாரின் புகழ்ச்சிக்குத் தக்க நூலாகத் திருக்குறள் என்றும் விளங்கும் என்பது உறுதி. திருக்குறளுக்குப் பலரும் உரை எழுதி மகிழ்வடைந்துள்ளனர். இந்நூல், 384 திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பள்ளி மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படுமாறு எளிய உரையைத் தருகிறது. இந்நூலாசிரியரின் இனிய தமிழ் உரை மிகவும் பாராட்டத்தக்கது ஆகும். 193வது குறளின் பாரித்து உரைத்தல் என்ற சொல்லிற்கு விரிவாகச் சொல்லுதல் என்றும் (பக்.19), 271வது குறளின் படிற்றொழுக்கம் என்ற சொல்லிற்குப் பொய்யான ஒழுக்கம் என்றும் (பக்.24) 689வது குறளின் "வன்கண்' எனும் சொல்லிற்கு "உள்ள உறுதி' என்பதும் (பக்.65) ஆசிரியரின் புலமைக்குச் சான்றாக உள்ளன
வெற்றிக்கு ஏழு படிகள்
விகடன் பிரசுரம்
மாணவருக்காக
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 ; வெற்றி எல்லாருக்கும் பொதுவானது. வாழ்க்கையில் வெற்றி எனும் சுவையை ருசித்து விடத் துடிப்பவர்கள் எல்லாரும் வெற்றிப் பந்தயத்தில் கலந்து கொண்டே தீர வேண்டும். அந்த வெற்றியின் இலக்கை இந்த ஏழு சிறகுகள் இருக்கிற யாரும் அடைய முடியும். இது உங்கள் வெற்றிக்கான ஏணிப்படி.
General Studies Manual
சுரா காலேஜ் ஆஃப் காம்படிசன்
மாணவருக்காக
(For UPSC Civil Services Preliminary Exam & Other Higher Level Competitive Exams)Sura College of Competition. 1620 J Block. 16th Main Road, Anna Nagar, Chennai 600 040. மத்திய அரசின் உயர் பதவிகள் மற்றும் உயர் அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர்களுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட நூல். அரசமைப்புச் சட்டம் துவங்கி பொது அறிவு மற்றும் நடப்பு சம்பவங்கள் வரை ஒன்பது பெரிய தலைப்புகளில், பல்வேறு உட்தலைப்புகளில் விளக்கப்பட்ட விதம் சிறப்பானது. கடந்த 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை ஐந்தாண்டுகளில் இம்மாதிரி போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையாக தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இம்மாதிரித் தேர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறந்த படைப்பு.மத்திய அரசின் உயர் பதவித் தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புப் பெற பங்கேற்கும் அறிவுப் போட்டியில் தகுதி பெற இந்த நூல் ஒவ்வொருவருக்கும் நல்ல வழி காட்டியாக அமையும்
தமிழ்நாடு 1000 கேள்வி - பதில்கள்
அநுராகம்
மாணவருக்காக
அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96) தமிழகத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும், தகவல்களும் கேள்வி பதில் வடிவில். சிவானந்தர் பிறந்த ஊர் பத்தமடை. பத்தமடையில் பாய்கள் புகழ் பெற்றது போன்ற ஆயிரம் பயனுள்ள தகவல்கள். மாணவர்கள் படித்துப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற உதவும் நூல்
I.A.S.,யாரும் ஆகலாம்
ராஜமாணிக்கம்மாள் பப்ளிகேஷன்ஸ்
மாணவருக்காக
ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, 106/4, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 352) ஐ.ஏ.எஸ்., தேர்வு என்பது பூதம், பிசாசு என்று பயந்து கொண்டிருப்பவர்கள் இந்நூலைப் படித்தால் நாமும் கூட ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதலாம் என்ற நம்பிக்கையை நிச்சயம் பெறுவர். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருந்து வெற்றி பெறுவது வரையிலான அனைத்து தகவல்களும் படிப்படியாக பழகு தமிழில் டாக்டர் அகிலன் ராமநாதன் தொகுத்தளிக்கிறார்