ஒருபுறம் நெடுஞ்சாலை விபத்துகளில் ரத்த ஆறு பாய்ந்தோட, மறுபுறம் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ரத்த வகை கிடைக்காமல் அலறி ஓடுவது நாடெங்கும் காணும் காட்சி. ரத்தமில்லாமல் உயிரில்லை; உலகில்லை. ரத்தம் எல்லா ஜீவராசிகளுக்கும் சிவப்பே என்பதில் இயற்கை மீதொரு வியப்பு தோன்றுகிறது. எந்த ஒரு வியாதியைச் சொல்லி மருத்துவமனைக்குச் சென்றாலும் உடனே ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.பெரும்பாலான உடற்குறைபாடுகளுக்கு ரத்தத்தின் குறைபாடே காரணம். நம் ரத்தத்தின் கூறுகள் என்ன... எப்படி அதைப் பேணிக்காக்க வேண்டும்... ரத்த ஓட்டத்தின் குளறுபடியால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்நூல் விடை தருகிறது.ரத்தம் பிளாஸ்மா மற்றும் உயிரணுக்களால் ஆனது மட்டுமல்ல, ரத்தம் மனித உறவுகளையும், உணர்வுகளையும் கூட இணைக்கிறது; ரத்தம் தீர்ந்தாலும், உறைந்தாலும், குறைந்தாலும், கூடுதலானாலும் கடுமையான நோய் ஏற்படுகிறது.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பிராணவாயுவை எடுத்துச் செல்வது ரத்தமே; ரத்தம் ஒரு திரவ உறுப்பு என்று நூலாசிரியர் குறிப்பிடுவது பெரிதும் சிந்திக்க வைக்கிறது. ரத்தம் உறைவதால் வரும் விளைவுகள், ஹீமோகுளோபின் என்னும் புரதத்தின் இயக்கம், உடல் உறுப்புகள் இயக்கத்தில் ரத்தத்தின் முக்கிய பங்கு, என எல்லாவற்றையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.ரத்தப் புற்றுநோய், ரத்தத்தில் கொழுப்பு செய்யும் சேட்டைகள், பலவித நோய்க்கான மூல காரணங்கள், ரத்தத்தில் சர்க்கரையால் வரும் அவதிகள், ரத்த சோகையால் வரும் பாதிப்புகள், மரபுவழி நோய்த் தாக்குதல்கள் போன்றவற்றிற்கும் விளக்கம் கிடைக்கிறது. பலவிதமான வியாதிகளில் இருந்து தற்காப்பு செய்து கொள்ளும் தியானப் பயிற்சிகள், மருந்தில்லா மருத்துவம், முன்னெச்சரிக்கைகள், ரத்த தான விதிமுறைகள், சமச்சீர் உணவின் அவசியம் ஆகியவற்றையும் விவரிக்கிறது இந்நூல்.இந்தியாவின் சிறந்த மருத்துவருக்கான பி.சி.ராய் விருது பெற்ற ரத்த நோய் துறைப் பேராசிரியர் ராகவ பரத்வாஜ், ரத்தம் தொடர்பான அனைத்து விபரங்களையும் சாமானியரும் புரிந்து கொள்ளும் எளிய தமிழில் எழுதி இருப்பது மிகப்பெரிய சேவையாகும். தேவையான இடங்களில் புரிதலுக்காக மருத்துவப் பதங்களை ஆங்கிலத்தில் தந்திருப்பது வரவேற்கத்தக்கது. இயல்பான நடையில் திருக்குறள், திரைப்பாடல்கள் மேற்கோள்களோடு தெளிவுகள் வழங்கப்பட்டிருப்பது நூலுக்கு கூடுதல் பலம். ஒரு மருத்துவ நூலைத் தமிழில் எளிமையாக வடிக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. – மெய்ஞானி பிரபாகரபாபு
இரத்தமே உயிரின் ஆதாரம்
-
எய்ட்ஸ் நோயின் வரலாறு, எய்ட்ஸ் என்றால் என்ன? நோயின் அறிகுறிகள், கண்டறிவதற்கான பரிசோதனைகள், நோய்க்கு மருந்துகள், வராமல் தடுப்பது எப்படி? என 22 அத்தியாயங்களில் எய்ட்ஸ் நோயைப் பற்றிய சகல தகவல்களும் எளிமையாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.வருமுன் காக்க, இந்த நூல் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
-
பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு, 15, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 344)மருந்தின் உதவி இல்லாமல் நமது உயிர் சக்தியைக் கொண்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இந்த நூலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. காற்று, சூரியன், நிலம், நீர், மரம் போன்றவற்றிலிருந்து சக்தியை கிரகித்து, நோயாளிகளிடம் தேக்கமடைந்துள்ள சக்தியை விடுவித்து, பிராண சக்தியை பாய்ச்சி குணப்படுத்தும் அற்புத முறைகள் அனைவராலும் பின்பற்றும் வகையில் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.மது, புகை, மாமிசம் உட்கொள்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்கள் என நூலாசிரியர் எச்சரித்துள்ளார். அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய அரிய நூல்.
-
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 472) தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது அரிய ஆய்வேட்டை நூலாக்கியுள்ளார். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழஞ் சிறப்புமிக்க தமிழ் மருத்துவச் சிறப்பியல்புகள், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிந்து கிடக்கிறது. தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், சித்தர் நெறி, சித்தர்களின் மருத்துவப் பாடல்களின் அருஞ் சிறப்பு என்று நுண்ணிய ஆய்வின் வெளிப்பாடாக ஏராள நுட்பத் தகவல்களை விரித்துரைத்துள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் ஆழமான செய்திகளை உலகுக்கு உரைத்த சித்தர்கள் பெரும் புலவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்கள் பாடல்களின் சாரங்களைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது இந்நூல். இத்துறையில் மேலும் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் வழிகாட்டி நூலாகவும், அறிஞர்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் படித்துப் பயன் பெறும் விதமாகவும் அமைந்துள்ள நூல் இது. பின்னிணைப்பாக 20 தலைப்புகளில் ஆசிரியர் தொகுத்தளிக்கும் செய்திகள் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய விஷயச் சுரங்கம் எனலாம்.
-
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34B, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.)இரு நோய்களைப் பற்றிய முழுமையான, ஆழமான, தெளிவான அலசல்.
-
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 188)ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்ல வழிகள் எவை எவை என்பதை ஆசிரியர் இந்நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். சித்த மருத்துவத்தின் மகத்துவம், போதைப் பொருட்களால் உடல்நலக் கேடுகள், அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்."சிரிப்பு நோய் தீர்க்கும் மருந்து' என்பதை எடுத்துக்காட்டுவதுடன் மூலிகைகளின் குணநலன்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசனங்கள் எவ்வாறு செய்வது என்பது பற்றிய விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்