இந்தியாவின் பாரம்பரிய குரு – சிஷ்ய பரம்பரை, இந்த விஞ்ஞான உலகிலும் அழிந்து போய்விடவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம், இந்த நூலின் ஆசிரியரான ஜஸ்டின் ஓ பிரையனும், அவரது குருவான சுவாமி ராமாவும். சுவாமி ராமா, வட இந்தியாவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே, ‘பெங்காலி பாபா’ என்று அழைக்கப்பட்ட இமயத்து யோகியால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர். தன் ஆசானின் வழிகாட்டலில், பல மடாலயங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு முனிவர்களையும், யோகிகளையும், திபெத்தின் தொலைதூரப் பகுதியில் வசித்த பரமகுருவையும் சந்தித்து, அவர்களிடம் பயின்றவர். சுவாமி ராமா, தீவிரமான ஆன்மிகப் பயிற்சியோடு இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் உயர்கல்வி கற்றவர். 1969ல் அமெரிக்கா சென்று ‘இமாலய கழகம்’ என்ற அமைப்பை நிறுவினார். இந்த கழகம், இந்த நூலின் ஆசிரியரான, ஜஸ்டின் ஓ பிரையன், சிகாகோவில் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்று, அங்குள்ள லயோலா பல்கலைக்கழகத்தில், இறையியல் கற்பிக்கும் பேராசிரியர். இவருக்கு மிகச்சிறிய வயதிலிருந்தே, ஆன்மிக தேடலில் இயல்பாகவே நாட்டம் இருந்திருக்கிறது. ஆறு வயது ஆவதற்குள்ளாகவே மூன்று முறை வீட்டை விட்டு, ‘உலகை ஆராய்ந்து அறிய வேண்டும்’ என்ற ஆவலில் ஓடியிருக்கிறார். பின், வீட்டிற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறார்.விஸ்கான்சில் உள்ள பிளைமவுத் நகரில் நடந்த, ‘நோய் தீர்க்கும் கருத்தரங்கு’ பற்றிய விளம்பரத்தை பார்த்துவிட்டு, தன் மனைவி தெரசாவின் தூண்டுதலால், அங்கு சென்று கலந்து கொள்கிறார் ஜஸ்டின். அதில், சொற்பொழிவாற்றியவர் சுவாமி ராமா. முதலில், சுவாமியின் சொற்பொழிவில், இவர், கவனம் காட்டவேயில்லை. உணவு இடைவெளிக்கு பின் நடந்த அமர்வில், சுவாமியின் பேச்சைக் கேட்ட ஜஸ்டின், வேறு உலகிற்கே போய் விடுகிறார். சுவாமியிடம் ஏற்பட்ட முதல் மோதல், பின்பு அவர் மீது பெரும் காதலாக மாறி விடுகிறது. சுவாமியும் இசைய, ஜஸ்டின், அவருடனேயே, 25 ஆண்டுக்காலம் இருந்திருக்கிறார். தன், 25 ஆண்டுக்கால அனுபவங்களை, தன், ஆசான் அளித்த பல்வேறு பயிற்சிகளை, இட்ட சோதனைகளை, இந்த, 632 பக்க நூலில் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஜஸ்டின் ஓ பிரையன். தன் ஆசான், சுவாமி ராமா தனக்கு அளித்த பலவிதப் பயிற்சிகளைப் பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறார், ஜஸ்டின். சுவாமி, பாரம்பரிய யோகா உடன், தாந்த்ரீக பயிற்சி மற்றும் ஸ்ரீவித்யா முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்தார். அவரது ஹோமியோபதி, ஆயுர்வேத கல்வி மாணவர்களுக்கு, இந்த கூடுதல் விஷய ஞானத்தையும் சேர்த்து வழங்கினார். மனம் மற்றும் உடல் சார்ந்த பல வித்தைகளை, அவ்வப்போது சுவாமி செய்து காட்டிய செய்திகளை படிக்கும்போது, ஜஸ்டின் ஓ பிரையனுடன் நாமும் வியப்பில் ஆழ்ந்து விடுவோம்.பல விஞ்ஞானிகள் முன்னிலையில், தன் உடலின் மீது பலவித கருவிகளைப் பொருத்த அனுமதி அளித்து, சீராக நிமிடத்திற்கு, 72 முறை துடித்துக் கொண்டிருந்த இதயத்துடிப்பைச் சட்டென்று மாற்றி, அதை நிமிடத்திற்கு, 306 முறை துடிக்க வைத்தார். பின் இதயத்துடிப்பை, 16.2 விநாடிகளுக்கு நிறுத்திக் காண்பித்து, பின் பழைய சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். இத்தனைக்கும் அவர், தன் ஸ்தூல உடலில் உள்ள இதயத்தை கட்டுப்படுத்த முயலவில்லை. சூட்சும உடலைக் கட்டுப்படுத்தியதாகவும், சக்தி வடிவமாக உள்ள அது, ஸ்தூல உடல் உறுப்புகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்றுள்ளது என்றும் அவர் விளக்கியபோது, விஞ்ஞானிகள் ஆச்சரியத்தால் அசந்து போயினர். அவரது இந்த செயல்கள் யாவுமே, அவர் உடலில் பொருத்தப்பட்டிருந்த கருவிகளில், துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.புற்றுநோய் பற்றிய சுவாமியின் கருத்து, இன்றைய மருத்துவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு மருத்துவ குழு, அதன் இயக்குனர் ஆகியோர் முன்னிலையில், தன் உடலில் இரண்டு நிமிடங்களில், புற்றுநோய் கட்டியை உருவாக்கிக் காட்டினர். கண் இமைக்கும் நேரத்தில் அதைக் கரைந்து போகவும் வைத்தார். அந்த மருத்துவ குழுவும், அதன் இயக்குனரும் அசந்து போய்விட்டனர். ‘‘புற்றுநோயின் ஆணிவேர் மனதில் வேரூன்றி கிடக்கிறது. ஆனால், புற்றுநோய் குறித்த ஆய்வுகள் வேறு திசையில் சென்று கொண்டிருக்கின்றன,’’ என்று வருத்தப்பட்டார், சுவாமி.தான், தன் ஆசானுடன் சேர்ந்து இருந்த ஆண்டுகளில், பதிவு செய்து வைத்திருந்த நாட்குறிப்பேடுகள், பல நாடுகளுக்கு சென்றபோது எடுத்த ஏராளமான புகைப்படங்கள், பல குறிப்புகள் ஆகியவற்றை, ஒருசேர ஆராய்ந்தபோது, 20ம் நூற்றாண்டின் நம்ப முடியாத ஒரு விந்தை மனிதருடன், தனக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும், மீண்டும் அசை போட்டதன் விளைவே, இந்தப் பெரிய நூல் என்கிறார். தெளிவான மொழிபெயர்ப்பில் இந்த புத்தகத்தை படிக்கும்போது, நாமும் அந்தப் பனி சூழ்ந்த இமாலயத்தில், சுவாமி ராமாவுடன் மெல்ல பேசியபடியே நடந்து செல்வது போன்ற உணர்வு ஆட்கொள்கிறது. ஒருமுறை அல்ல, பலமுறை ஆழ்ந்து அனுபவித்து படிக்க வேண்டிய நூல்.பக்கம் 510ல், இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த ஜே.பி.பிரகாஷ் என்று இருக்கிறது. பாபு ராஜேந்திர பிரசாத்திற்கு இப்படி, வேறு பெயர் ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. தவறாக இருந்தால், அடுத்த பதிப்பில் அது திருத்தப்பட வேண்டும்.– மயிலை சிவா
இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்
-
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96) சென்னையிலிருந்து, கனடா நாட்டிற்கு சமீபமானதும், அமெரிக்காவின் ஓர் அங்கமுமான அலாஸ்காவிற்கு முறையாகத் திட்டமிட்டுப் புறப்பட்டது முதல் சுகபத்திரமாகத் தாயகம் திரும்பும் வரையிலான நிகழ்வுகள் யாவும் "வீடியோ' வில் பதிவு செய்ததற்கு ஒப்பாக நினைவலைகள், இந்நூலில் ஓடவிட்டுள்ளார் ஆசிரியர். இதன் பிரதான அம்சம் பசிபிக் கடலில், 14 தளங்களைக் கொண்ட மிதக்கும் சொகுசுக் கப்பலில் "ஸெரினேட் ஆப்த ஸீஸ்' எனும் பெயருடைய இரண்டாயிரம் மைல்கள் 12 நாட்கள் பிரயாணம் செய்த புதுமையான அனுபவம், 2,500 பயணிகளையும், 900 பணியாளர்களையும் ஏற்றிச் செல்லவல்ல, பிரமிக்க வைக்கும் நட்சத்திர ஓட்டலைப் போன்ற இக்கப்பல் சாப்பாட்டு வசதிகள், திறந்தவெளி நீச்சல் குளம், பல்பொருள் அங்காடிகள், அனைத்து கேளிக்கைகள், சூதாட்ட அரங்கங்கள் கொண்டவை! மேலும், இரண்டு மணி நேர ஹெலிகாப்டர் பயணத்தின் போது 14 ஆயிரம் அடி ஆழமான "கிளேசியர்' எனப்படும் உறைபனிப் பள்ளத்தாக்கினை வெகு அருகில் பார்த்த அபூர்வ அனுபவமும் உண்டு.ஐந்து திமிங்கலங்கள் ஒன்று சேர்ந்து, அணி வகுத்து மீன் வேட்டையாடியதைக் கண்டுகளித்தல்.இத்துடன் அலாஸ்கா குறித்த பூகோளம், வரலாறுகள் மற்றும் இந்த சொகுசுக் கப்பல் பற்றிய பல்வேறு தகவல்கள், யாவும் நூலாசிரியர் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையைக் குழைத்தும் வழங்கியுள்ள பாணி வாசகர்களை வெகுவாக ஈர்த்து விடும்!இந்நூலைப் படித்த பின்னர் "ஆஹா... அலாஸ்கா மீது காதல் வந்திருச்சு'ன்னு நமக்கும் பாடத் தோன்றுகிறது.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. (பக்கம்: 96). சோமசுந்தரம் தன் குடும்பத்துடன் எட்டு நாட்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்த்து ரசித்தவைகள் நூல் உருவம் பெற்றுள்ளது. லேனா தமிழ்வாணன் நூலுக்கு அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். 16 பக்க வண்ணப் புகைப்படங்களும் உள்ளன.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 264). சுவைபட எழுதியுள்ள மேனாட்டுப் பயண நூல். பாரீஸ், சுவிட்சர்லாந்து, லண்டன், இத்தாலி முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்ததைப் பயண நூலாக்கியுள்ளார் ஆசிரியர். பயண நூலைத் தொடங்கும்போது தனது தாயாரைப் பாரீசுக்கு அழைத்துச் சென்ற அனுபவத்துடன் தொடங்கியிருப்பது புதுமையை வழங்குவதால் தொடர்ந்து படிக்கத் தோன்றுகிறது.பயணம் சென்ற ஒவ்வோர் ஊரிலும் உள்ள கலைச் சிறப்புகளையும், தொழில் வளத்தையும் தெரிவித்திருப்பதுடன் அங்கங்கே நடைபெறும் திருட்டு முதலான குற்றங்களைத் தெரிவித்திருப்பதும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. பயண இலக்கிய நூல்களில் படிக்கப்பட வேண்டிய நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.இயல்பாக அமைந்துள்ள கொங்குத் தமிழ் ஒரு நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை தருவதுடன் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
-
நடனாலயா பப்ளிகேஷன், 17, எட்வர்ட் தெரு ஸ்டிராத் பீல்டு சவுத், ஆஸ்திரேலியா. (பக்கம்: 182.) "தமிழ் மொழியையும், அதன் பண்பையும், பாராட்டத்தக்க அதன் கலாசாரத்தையும் அதிகம் மதித்து, அதைப் போற்றிப் பாதுகாப்பவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்' என்னும் கசப்பான உண்மைக்குச் சான்றானவர், இந்த நூலின் ஆசிரியர்! இலங்கையில் பிறந்து, வளர்ந்து, தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கந்தையா அவர்கள் ஓய்வுக்குப் பின் ஆஸ்திரேலியா சென்று அருந்தமிழில் நூல்கள் எழுதி வருகிறார்.நான்கு இயல்களில் 49 தலைப்புகளில் அருமையான "ஆஸ்திரேலியா' நாட்டையே நம் கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். இங்கு 20 இந்துக் கோவில்களும், 31 தமிழ்ப் பள்ளிகளும் 24,067 தமிழர்களும் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் பலவற்றை அள்ளித் தெளித்துள்ளார்.பரதநாட்டியம், கர்நாடக இசைக்கு அவர்கள் தரும் மதிப்பு மிகப் பெரியதாக உள்ளது. இடை இடையே வண்ணமிகு படங்கள், வார்த்தைகளுக்கு உயிர் தருகின்றன. நம்மை அங்கேயே அழைத்துச் சென்று விடுகின்றன. விசா இல்லாமல் காசில்லாமல் ஆஸ்திரேலியாவைக் கண்டு ஆனந்தம் பெற வைக்கும் நூல்.
-
மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256). தனது அமெரிக்கப் பயணத்தில் கண்டவைகளையும்; கேட்டவைகளையும்; படித்துணர்ந்தவைகளையும் தொகுத்து ஒரு நாவல் வடிவில் தந்துள்ளார் ஆசிரியர். ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்கால் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராக இருந்து பல நல்ல அறச்செயல்களை தொடர்ந்து தொய்வில்லாது சேவை புரிபவர். ரோட்டரி சங்கம் துவங்கிய இடம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ என்ற நகரத்தில் தான். அங்குள்ள அடுக்குமாடி ஒன்றின் 711ம் எண் அறையில் தான் முதன் முதலில் ரோட்டரி சங்கம் துவக்கப்பட்டது. அந்த அறையை ஒரு தெய்வீக திருத்தலமாகவே கருதி, அந்த அறையை காண வேண்டும் என்ற வேட்கையின் விளைவு தான் இந்த அமெரிக்கப் பயணம் என மனம் லயித்துச் சொல்கிறார்."அமெரிக்கர்கள் யாரையும் எதிலும் நம்பக் கூடிய சுபாவம் கொண்டவர்கள்' (பக். 222), "முதலாளித்துவம் என்றால் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்' (பக். 205) என்ற பல செய்திகளைக் காணலாம்.
-
தாய்லாந்து தேவதைகள் ; இனிக்கும் 21 இரவுகள் : நூலாசிரியர்: புஷ்பா தங்கதுரை. வெளியீடு: ஆர்.எஸ்.வி., பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜானிகான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96).உலகத்துப் பெண்களிலேயே பேரழகிகள் தாய்லாந்து தேசத்து நங்கையர். பொதுவாக கீழை நாடுகளில் இரவுக் களியாட்டங்களில் கிறங்க வைப்பவை. "இனிக்கும் 21 இரவுகள்' பற்றி தான் கண்ட அனுபவங்களை தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
-
வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 220). ஆனந்த விகடன் ஆசிரியராக கல்கி பணியாற்றியபோது இலங்கை பயணத்தை மேற்கொண்டார். உடன் சென்றவர் இப்போது போல் போட்டோகிராபர் அல்ல. பிரபல ஓவியர் மாலி. இலங்கையை பொற்சித்திரமாக கல்கி தீட்டினார் என்றால் - ஓவியர் மாலி இலங்கை மக்களின் உருவங்களை ஓவியமாகத் தீட்டித் கொண்டு வந்து விட்டார். கல்கி பிரியர்களுக்கு ஒரு கற்கண்டு. சுவைத்து மகிழலாம். அந்த நாள் நினைவுகளில் மூழ்கலாம்.
-
நினைத்தாலே இனிக்கும் மலேசியா - சிங்கப்பூர்
இராமானுஜம் வேளாண்மை மற்றும் மனித ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், ஜி-1, கண்பத் ஆர்கேட், 1, பத்மாவதி நகர், மடிப்பாக்கம், சென்னை குக்கிராமத்தில் பிறந்தவர் ஆசிரியர். மக்களுக்குச் சேவை செய்வதே இவர் தொழில். மலேசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த போது கண்டதைக் கேட்டதை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஊழலில் வலம் வருபவர்களிடையே, எவ்வித பிரதி பிரயோஜனமும் எதிர்பார்க்காமல், சொத்து சேர்க்காமல், பிற்பட்டோரைக் காக்க முயன்றவர் என்று இவரைப் பற்றிய குறிப்பு நூலின் தரத்தை உயர்த்துகிறது.
-
பாபு பப்ளிகேஷன், 106, காமராஜர் சாலை, மதுரை - 625 009. (பக்கங்கள்-50)
-
ஆலயா, 6/11, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை - 600 014. (பக்கங்கள்-160) அழகு என்பது பார்க்கும் பொருளில் இல்லை. பார்க்கப்படும் பொருளில் உள்ளது என்பார்கள். விக்கிரமன் அவர்களின் கண்கள் கண்ட வரலாற்று பெருமைமிக்க கோயில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் இந்த நூல் முழுவதும் எழுத்துக்களாக மின்னுகின்றன.வாசிக்கும்போது அந்த இடங்களுக்கே சென்று வந்த அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.தெளிவாகவும் சுவையாகவும் ஒரு விஷயத்தை எழுதும் மரபு மறைந்து வரும் இந்நாளின் இலக்கியப் போக்கில்,இந்நூல் - ஓர் சிறந்த ஆலய, ஆன்மிக கலை யாத்திரைக்கான கையேடு என்பதில் சந்தேகமில்லை.நமது தொன்மங்களின் வரலாற்றுச் சிறப்பை, அழகியல் நுட்பங்களை நாமறிய வேண்டும் என்னும் உயர்நோக்கில் வடிவமைக்கப்பட்டது இந்த வசீகர நூல்.
-
வெளியீடு:குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார்,தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள்: 136.
-
நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 14. (பக்கம்: 104.)சரித்திரக் கதைகள் எழுத, பல்வேறு சிறப்புமிக்க பெருமைக்குரிய ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு, அவ்விதம் அலர் என்ற ஊர் அழகை, புராதன அழகை, வரலாற்றுப் சின் னங்களை சுவைபட இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.மறைந்த நகரம் ஹம்பி, கங்கை கொண்ட சோழபுரம், தாராகாம், பேலூர், கடம்பூர், எலிபென்டா, மகாபலிபுரம், வாதாபி, கண்டி போன்ற சரித்திரத் தொடர்புடைய இடங்களுக்கு நம்மை அழைத்துச் சென்று அதன் பெருமைகளை சுவையாக எடுத்தும் சொல்கிறார். இந்த கலைப் பயணத்துக்கு நாமும் உடன் சென்று வந்த உணர்வு ஏற்படுவது நிஜம்.
-
சுரா பதிப்பகம், 1620 "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 152.)"சர்வதேச அளவில் குற்றங்களை எதிர்கொள்தல்' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆளுமைத் திறன் பயிற்சிக்கு அமெரிக்க அரசால் தெரிவு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான இந்நூல் ஆசிரியர், தன் அமெரிக்க அனுபவங்கள் பற்றி இந்நூல் மூலம் பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்கா தனி மனித சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரும் நாடு. பயங்கர அதிநவீன ஆயுதங்களைக் கூட தனியார் நிறுவனமே அங்கே தயாரிக்கின்றன! அமெரிக்க நாணயமான டாலரைக் கூட தனியார் கம்பெனி தான் அங்கே அச்சடிக்கிறது. அமெரிக்காவில் சிறிதும் பெரிதுமாய் 19,820 விமான நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 125 விமான நிலையங்கள்தாம்! இப்படிப் பல சுவையான செய்தித் துணுக்குகளுடன் மிக சுவாரஸ்யமாக நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். பலரும் படித்து இன்புறலாம்.
-
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 260;
-
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 216;
-
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 348;
-
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 120;
-
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082;
-
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 272;
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்