Advertisement

உங்கள் ‘ஈ.எஸ்.பி’ ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்


உங்கள் ‘ஈ.எஸ்.பி’ ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்

₹ 100

எழுத்துரு அளவு:

அசாதாரணமான விஷயங்களை உள்ளுணர்வுகளால் தெரிந்து கொள்ளும் சக்தியை பெருக்கிக் கொள்ள யோசனை கூறும் நுால்.உள்ளுணர்வின் சக்தி எல்லாரிடமும் இருக்கிறது. ஆனால், அதை முறையாக தெரிந்து பயன்படுத்த வழி தெரியவில்லை. இந்த அதிசய சக்தியால் பின்னால் நிகழக்கூடியதை உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர் எண்ணம், உணர்வுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய படிநிலைகளை அடையும் வழிகளை விளக்குகிறது. ஐம்புலன்களாலான வெளி உலகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டால், மனதின் ஆற்றல்களை உணர முடியும். அதை வளர்த்துக்கொள்ள தியான முறைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆற்றல்களைப் பெற்றவர்களின் விபரங்களும் கூறப்பட்டுள்ளன. மூளை வெளியிடும், ஆல்பா, பீட்டா, தீட்டா, டெல்டா அலைகளால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அமைதி நிலையை அடைய, தியான முறைகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. பொறுமையுடன் செயல்பட்டால் இன்பமுடன் வாழலாம் என உணர்த்தும் நுால்.– புலவர் சு.மதியழகன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்