அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு, தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல், அவற்றைத் தமிழ் அன்னையின் அழகிய ஆபரணமாக வடித்துத் தந்தவர் தமிழ்த் தாத்தா. உ.வே.சா., 87 ஆண்டு காலம் (1855 – 1942) வாழ்ந்தபோதிலும், ‘என் சரித்திரம்’ நூல் மூலம், தம் வாழ்நாளின், 44 ஆண்டு கால (1889 முடிய) வரலாற்றை நயம்பட ஒரு புதினம் போல சுவைபட எழுதி, ‘தன் வரலாற்று நூல்களுக்கு முன்னோடியாக முத்திரை பதித்துள்ளதோடு, தன்னுடைய ஆசிரியர் மகாவித்வான், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சரித்திரத்தையும் பதித்த பெருமகனாவார். ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்கள் சிலரின் நிதி உதவியோடு, 10ம் பதிப்பாக வெளிவந்துள்ளது.கடந்த, 1940 முதல், 1942 முடிய ஆனந்த விகடனில் வெளியான இச்சுயசரிதம், 122 அத்தியாயங்களைக் கொண்டது. பதிப்புத் துறையில், 1874ல், நீலி இரட்டைமணிமாலை முதல், வித்துவான் தியாகராஜ செட்டியார் (1942) வரலாறு ஈறாக, 100 நூல்களைப் பதிப்பித்த, உரை எழுதிய பெருமைக்குரிய தமிழ் முன்னோடி உ.வே.சா., தஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசன் ஏகாதசி விரதத்திற்குப் பங்கம் விளைவித்ததற்குப் பரிகாரமாக உருவாக்கிய தம் ஊரான, ‘உத்தமதானபுரத்தில் துவங்கி, தன் முன்னோர், குழந்தைப் பருவம், இளமைக் கல்வி, சங்கீதப் பயிற்சி, தமிழ்ப்பாடம் கற்றல் என, மணிமேகலை பதிப்பு வெளியீடு வரை நூல் விரிந்துள்ளது.தமிழிலும், இசையிலும் வல்ல, அரியலூர், சடகோப அய்யங்காரின் மாணக்கரானதை ‘அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பில் புகுந்தவனானேன்’ (பக்.71) என்றும், உபநயத்தின் போது சூட்டிய, ‘வேங்கடராமன் சர்மன்’ பெயரை பின்னாளில் ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்வான், மீனாட்சிசுந்தரம் பிள்ளையால், ‘சுவாமிநாதன்’ (பக்.188) என, நாமகரணம் சூட்டப்பட்டதையும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டும் என்ற அவாவில், சமஸ்கிருதம், தெலுங்கு, இங்கிலீஷ் இவற்றுள் ஒன்றேனும் என் மனத்தைக் கவரவில்லை. சிலசமயங்களில் அவற்றில் வெறுப்பைக் கூட அடைந்தேன் (பக்.156) என்னும் ஆசிரியர், 1868ல், மதுராம்பாளைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வை, சுவைபட வர்ணித்துள்ளார். செங்கணம் விருத்தாசல ரெட்டி ரெட்டியாரிடம் யாப்பெருங்கலக்காரிகை பாடம் கேட்டதும், காலையில் கோபால கிருஷ்ணன் பாரதியாரிடம் சங்கீதமும் மாலையில் மகாவித்வான் பிள்ளையிடம் தமிழ்ப் பாடம் பயின்றதுமான சில சுவையான பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. ‘திருவாவடுதுறை மடம் ஒரு சர்வகலாசாலை போல் விளங்கியது. வயிற்றுப் பசியும், அறிவுப் பசியும் போக்கி, வாயுணவும், செவியுணவும் அளிக்கும் அது, கலைமகள் களிநடம் புரியும் திருக்கோவிலாகவே விளங்கியது’ (பக். 303) என, சிறப்பித்திருப்பதும், சுப்ரமணிய தேசிகரிடமும் பயின்றார்.பின் பெரும்புலவர் தியாகராஜ செட்டியார் பணிஇடத்தில், அவருக்குப் பின் கும்பகோணம் கல்லூரியில், 1880ல் பணியேற்றதும், ‘சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா... மணிமேகலை, சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா...’ (பக். 532) என்று சேலம் ராமசுவாமி முதலியார் வினவியதும், ஆசிரியர் வாழ்வில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமுதல், சீவகசிந்தாமணியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதையும், ஜைன சமயத்தவர் தொடர்பும் வெகு விரிவாக எழுதப்பட்டுள்ளது.நூல் முழுவதும் எடுத்தாளப்பட்டுள்ள செய்யுட்கள் உ.வே.சா., இயற்றிய செய்யுட்கள் யாவும் கவி இயற்றும் திறனையும், அவரது சங்கீத வித்வத்துவத்தையும் பறை சாற்றுகின்றன.‘எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டுக் சிதிலமுற்றிருந்த இந்நூலுரைப் பழைய பிரதிகள் பலவற்றையும், பலகால் ஒப்பு நோக்கி இடையறாது பரிசோதனை செய்து வந்த போது கவிகளின் சுத்த வடிவத்தையும் உரையின் சுத்த வடிவத்தையும் கண்டுபிடித்ததற்கும், உரையினுள் விசேஷ உரை இன்னது, பொழிப்புரை இன்னது என்று பிரித்தறிதற்கும், மேற்கோள்களின் முதலிறுதிகளைத் தெரிந்து கோடற்கும், பொழிப்புரையை மூலத்தோடு இயைத்துப் பார்த்ததற்கும், பிழையைப் பிழையென்று நிச்சயித்துப் பரிகரித்ததற்கும், பொருட்கோடற்கும் எடுத்துக் கொண்ட முயற்சியும், அடைந்த வருத்தமும் பல. அப்படி அடைந்தும் சில விடத்துமுள்ள இசைத் தமிழ் நாடகத் தமிழின் பாகுபாடுகளும் சில பாகமும் நன்றாக விளங்கவில்லை. அதற்குக் காரணம் அவ்விசைத் தமிழ் நாடகத் தமிழ் நூல் முதலியவைகள் இக்காலத்துக் கிடையாமையே’ (பக்.611) என, அவர் பட்ட கஷ்டங்களை விவரித்திருப்பது, அவர் பதிப்பித்த ஒவ்வொரு சங்க இலக்கிய நூலுக்குப் பொருந்துவதோடு, பிற்காலப் பதிப்புத் துறையில் ஈடுபடுவோர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது.அரியலூர் (அரி–இல்), குன்னம் (குன்றம்), பட்டீஸ்வரம் (சத்திமுற்றம்), ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை), கதிர்வேய்மங்கலம், மிதிலைப்பட்டினம் இப்படி ஒவ்வொரு ஊரைக் குறிப்பிடும் போதும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் பயனடையும் வகையில் பதிவு செய்துள்ளது அருமை.சிறு வயது முதல் தன் முன்னேற்றத்திற்குப் பலவகையிலும் ஆதரவளித்த தமிழறிஞர்கள், புரவலர்கள், சக மாணவர்கள், பதிப்பக்கத்தார், தமக்குப் பலவகையிலும் பாதகம் செய்தவர்கள், இப்படி எல்லா பிரிவினரையும் நினைவு கூர்ந்துள்ளார்.சிந்தாமணி பதிப்பித்தபோது, ‘பவ்ய ஜீவன்’ என, அழைத்த போது ஜைனனாகவோ, மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்றவற்றைப் பதிப்பித்ததற்கு ‘பவுத்த சமயப் பிரபந்தப் பரவர்த்தனாசாரியார்’ என்ற பட்டமளித்தபோது, பவுத்தனாகவோ மாறாமல், நிலையில் திரியாமல், திருவாவடுதுறை சைவ மடத்தின் ஆசியோடு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநநானூறு, பெருங்கரை என்பனவற்றில் கருத்தைச் செலுத்தினேன் என, எழுதியுள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சா.,, ‘கும்பமுனி எனத் தோன்றும் சாமிநாதப் புலவன்’ என, பாரதியே சிறப்பித்து வாழ்த்திய பின் பிறர் வாழ்த்தத் தேவையில்லை.பாரதியைப் போல தமிழ்த் தாத்தாவின் புகழைப் பரப்ப இத்தகைய நூல்களை அனைத்து நூலகங்களிலும், கல்விக் கூடங்களிலும் இடம் பெறச் செய்வதோடு, பாடத் திட்டத்திலும் சேர்த்து மாணவர்கள் பயன் பெறச் செய்ய வேண்டியதும் அவசியம்.– பின்னலூரான்
தமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்!
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை-17. * எளிய உரையுடன், அதிக பக்கங்கள், குறைந்த விலை பதிப்பு, 1330 குறளுக்கும் எளிய சொற்களால் கருத்துக்கள் சுருங்கச் சொல்லப்பட்டுள்ளது.
-
காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: ௨௩௫). * இலக்கியம், சிற் பம், ஓவியம், விளம்பரம், திரைப்படம், நாடகம் என்றாற் போல பல மொழித் தளங்களிலும் குறியீடு ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலக்கியக் குறியீடு பற்றி, `இலக்கியத்தில் ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ குறிப்பிட வரும் ஒரு சொல் அல்லது சொற்குறி தன் இயல்பான பொருளைத் தவிர்த்த பிறிதொன்றினைக் குறிப்பிடுவதே குறியீடு' என்பார் வை.சச்சிதானந்தம்.இந்நூலில் மருதப் பாடல்களில் அமைந்துள்ள உள்ளுறை வெளிப்பாடுகளை குறியீடுகள் எனும் தளத்தில் வைத்து விளக்கியுள்ளார் நூலாசிரியர்.குறியியல் கோட்பாடு பற்றி முதல் பகுதியிலும், இலக்கியக் குறியீட்டியம் பற்றி இரண்டாம் பகுதியிலும், குறியியலும் சங்கப் புலப்பாட்டு நெறிகளும் குறித்து மூன்றாம் பகுதியிலும், குறியியல் வாசிப்பில் மருத இலக்கியம் என நான்காம் பகுதியிலும் தம் ஆய்வின் முடிவுரையை ஐந்தாம் பகுதியிலும் விளக்கியுள்ளார்.ஆய்வுக்கு அணுக முடியாத `குறியியல்' குறித்து மிகவும் சிறப்பாக ஆய்வு செய்துள்ள இளம்பரிதியின் துணிச்சல் வரவேற்கத்தக்கது.
-
ஆசிரியர், எண் 1. முதல் குறுக்குத் தெரு, கணேஷ் நகர் (டெலிபோன் காலனி) ஆதம்பாக்கம். சென்னை-600088.* ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்று அல்லது இரு குறளுக்கு வெண்பாப் பாடலில் விளக்கம் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இரண்டடிப் பாடலுக்கு நாலடி விளக்கம்.
-
நாகா கிராபிக்ஸ், 30, கே.கே.ஜி., பிளாசா, தெற்கு மாசி வீதி, மதுரை-1. (பக்கம்: 152.). * குறள் என்பது ஒரு பா வடிவம். அந்தப் பா வடிவை முதன் முதலில் திருவள்ளுவர் தமது திருக்குறளில் அறிமுகம் செய்தார். அதன் பிறகு அவ்வை குறள் என்று ஒரு நூலை அவ்வையார் எழுதியுள்ளார். தற்காலத்தில் குறள், பா வடிவில் பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுப்பையா எழுதியுள்ள நூல் வள்ளுவர் சுவட்டில் வளரும் மலர்கள்.அறுபத்தேழு அதிகாரங்களில் 670 குறட்பாக்களை ஆசிரியர் படைத்துள்ளார். அவற்றுக்கு அவரே உரையும் எழுதியுள்ளதால் பொருள் மாறுபாடு கொள்வதற்கு வழி இல்லை. பழமையான பா வடிவில் இந்தக் கால அறக்கருத்துக்களைப் படிக்க விரும்புவோர்க்கு இந்த நூல் விருந்து வழங்கும்
-
Institute of Asian Studies, Chemmancherry, Chennai600 119, (பக்கம்: 267). *`வலை வீசின கதை' என்பது திருவிளையாடற் புராணத்தில் உள்ள 64 திருவிளையாடல்களுள் ஒன்றாகும். திருவிளையாடற் புராணத்திற்கும் இத்கதை பாடலுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் வாய்மொழி இலக்கியத்தில் இருந்து எழுதப்பட்ட இலக்கியம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கத்துடன் இச்சுவடி பதிப்பிக்கப்பட்டுள்ளது
-
பிருந்தாவனம், 323/10 கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40. (பக்கம்: 96) * புத்தக பதிப்புத்துறை, எழுத்துத்துறை ஆகியவற்றில் முல்லை முத்தையாவிற்கு நீண்ட அனுபவம் உண்டு. ராஜா பர்த்ருஹரி, காளிதாசன், திருவள்ளுவர் ஆகியோரின் படைப்புக்களில் காணப்படும் சிருங்கார ரசம், ாமத்துப்பாலில் உள்ள இன்ப உணர்வு பற்றிய கருத்துக்களைத் தொகுத்து இந்த நூலில் வழங்கியிருக்கிறார். ஆசிரியர் பர்த்ருஹரியின் சிருங்கார சதகம் என்ற நூலில் பெண்மையின் நுண்மையான உணர்வுகளைப் பற்றிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளதைப் படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இதே போல, காளிதாசனின் மேக தூதம் என்ற நூலிலிருந்து, ஆசிரியர் தொகுத்தளித்தவை அனைத்தும் இளசுகளை கவர்ந்து இழுக்கக் கூடியவை. வள்ளுவரின் காமத்துப் பால் நாமனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ஆசிரியரின் கண்ணோட்டத்தில் சிலவற்றைப் படிக்கும்போது, அவருடைய பார்வை மிகவும் வித்தியாசமாக இருப்பதைப் பார்க்கிறோம். எழுத்தாளர்களை இந்தத் தொகுப்பு நிச்சயம் கவரும்.
-
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 96). * தமிழ் இலக்கியத்தில் இருந்து வழங்கப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்புத் தான் இந்த நூல். காதல் கொண்ட பெண்ணும் ஆணும் செய்யும் செயல்களை யாரும் புரிந்து கொள்ள முடியாது என்ற உண்மையைப் பெண்ணழகும் ஆணழகும் என்ற கட்டுரையில் முனைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் ஒன்றாகக் காணப்படும் சிந்தனைகளைத் தொகுத்துத் தமிழும் சமஸ்கிருதமும் என்று வழங்கியுள்ளார். தமிழ் மொழியின் இனிமைச் சுவையை அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
-
வசந்தா பதிப்பகம், மனை எண்.9, ஜோசப் குடியிருப்பு, குறுக்குத் தெரு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 416. விலை: ரூ.150). * `பளபளப்பான பல நிறச் சலவைக் கற்கள் அழுத்திப் பொன்மினுக்குப் பூசிப் பலபல அடுக்கு மாடங்கள் உடைத்தாய் வான் முகடு அளாய், காண்பார் கண்ணும் கருத்தும் கவரும் நீர்மைத்தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம் போல, ஆசிரியர் நக்கீரனாரது உரை நிவந்து நிற்றலும், அம்மாடத்தின் அருகே புல் வேய்ந்த குடிலும் ஓடு மூடியதொரு சிற்றிலும் ஏழைமைத் தோன்றமும் உடைய வாய்த் தாழ்ந்து நிற்றல்போல் இளம்பூரனார், பேராசிரியர் உரைகள் பீடு குறைந்து நின்றலும்' என மறைமலை அடிகள் இவ்வுரையின் பெருமையைக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் இந்நூலின் சிறப்பை அறிய முடிகிறது.பவானந்தரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட இவ்வுரை நூல் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது வெளிவருகிறது. ச.சீனிவாசனின் முன்னுரையில் `இடைச்செருகல்' பற்றிய கருத்துக்கள் பயனுள்ளவை. மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய நூலிது.
-
தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. (பக்கம்: 792 ). * திருக்குறள் எனும் தமிழ் வேதத்திற்கு எத்தனையோ உரைகள் வந்துள்ளன. அத்தனையும் ஏதோ ஒரு வகையில் சிறப்பு உடையனவாக உள் ளன. இந்நூல் இக்கால மக்கள் திருக்குறள் கருத் துக்களை இன்னும் தெளிவாக மாறுபாட்டிற்கு ஏற்ப உணர மிக அருமையான முறையில் வெளிவந்துள் ளது.இந்நூலாசிரியர் தம் நுண்ணறிவினாலும், பட்டறிவினாலும் பல நூல்களையும் பகுத்தாய்ந்து இவ்வுரை நூலைத் தந்துள்ளதற்கு, தமிழ் மக்கள் மிகவும் நன்றி கூறுவர் என்பதில் ஐயமில்லை.இந்நூலின் இரண்டாம் பகுதியில் அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், பொருட்பால் 70 அதிகாரங்களையும் இணைத்து, இக்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் கருத்துவழிப் பகுப்பாக 14 இயல்களாகப் பகுக்கப் பெற்றுள்ளதை தமிழறிஞர்கள் மனமுவந்து ஏற்பர் என்று உறுதியாகக் கூறலாம். 1,330 குறட்பாக்களுக்கும் தெளிவுரை தந்துள்ள நூலாசிரியர், சில இடங்களில் சிறப்புரை கூறி நம்மைச் சிந்திக்கவும், புதிய கருத்துக்களை ஏற்கவும் வைக்கிறார். மறப்பினும் என்று தொடங்கும் குறளுக்குச் சிறப்புரையில் `பிறப்பொழுக்கம் எனும் தொடர் ஆழ்ந்த பொருளுடையது.இந்நூலைப் படிப்பதன் மூலம் பரிமேலழகர், பரிபெருமாள், பரிதியார் ஆகியோரின் உரைப் பகுதிகள் சிலவும் படித்த மன நிறைவு அடையலாம். இந்நூல் பல முறை படித்து பாதுகாக்கப்பட வேண்டிய பயனுள்ள நூலாகும்.
-
அபிராமி பதிப்பகம், 17/7, கொடிமரத் தெரு, ராயபுரம், சென்னை-13. (பக்கம்: 206). * நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா' என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள் உணரத்தக்க நிலையில் பிரித்தும், பாடலுக்குத் திரண்ட பொழிப்புரை எழுதி சிறப்பித்துள்ளார்.
-
பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-600 108. (பக்கம்: ௪௬௪). * தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் உயர்வும், பெருமையும் தருவன சங்க நூல்கள் என்று கூறப்படும் பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகும். அச்சங்க நூல்களின் கருத்தாழமும், தமிழர் பண்பு நலன்களும், இயற்கையோடு இயைந்த வாழ்வு முறையும், உவமை நயங்களும் என்றும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கவையாகும். அத்தகு பழந்தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், திருக்குறள் முதலிய நூல்களில் காணப்படும் இயற்கை அழகையும், இயற்கை வருணனைகளையும், கற்பனைத் திறனையும் அறிஞர் மு.வ., அவர்கள் மிக அருமையாக இந்நூலில் அளித்துள்ளார்.இயற்கையை நுணுக்கமாகப் பாடிய புலவர்களின் பாடல்களின் விளக்கங்களும் (பக்., 54-182), இயற்கையால் பெயர் பெற்ற 27 புலவர்களில் சிலருடைய பாடல்களின் விளக்கங்களும் (பக்.183-211), பயிரினங்கள், உயிரினங்கள் குறித்த சங்கப் பாடல்களின் விளக்கங்களும் (பக்.282-359) புத்தம் புதிய கிளர்ச்சியுடன் தெள்ளத் தெளிந்த எழிலுடன் உவமைகளை அமைத்து நம்மை மகிழ்விக்கும் சங்கப் பாடல்களின் விளக்கங்களும் (பக்.360-402) இயற்கையோடு இயைந்த அக்கால மக்களின் வாழ்வியலையும் (பக்.403-447) டாக்டர் மு.வரதராசனார் விளக்கியுள்ள சிறந்த புலமையின் ஆழ, அகலங்களைத் தமிழர்கள் என்றும் தவறாது படித்தறிவது அவர்களின் கடமையாகும்.டாக்டர் மு.வ.,வின் பி.எச்.டி., என்னும் ஆராய்ச்சிப் பட்டத்தின் ஆங்கில நூலை, மொழி பெயர்ப்பு என்று உணர முடியாத வகையில் மூலநூல் போன்று தந்துள்ள அறிஞர்கள் ம.ரா.போ.குருசாமி, சுப.அண்ணாமலை, கதிர்மகாதேவன் ஆகிய மூவருக்கும் தமிழ் இளைஞர்கள் என்றும் நன்றிக் கடன்பட்டவர்கள் ஆவர். பாரி நிலையத்தாரின் மறுபதிப்பாக 32 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப் பெற்றுள்ள இந்நூல், தமிழ் மக்களுக்கு சீரிய நூல் மட்டுமன்று; மிகச் சிறந்த சொத்தும் ஆகும்.
-
சேகர் பப்ளிகேஷன்ஸ், 66/1, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: ௧௪௪). * தமிழர் வாழ்வின் பெருமையை, தொன்மைச் சிறப்பைத் தெரிந்து கொள்ள சங்க இலக்கியங்களே நம்மிடம் இருக்கும் சான்றாதாரம். சங்க இலக்கியம் அகம், புறம் என இரண்டு பொருட்பாகுபாட்டின் அடிப்படையில் பல அரிய தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுகிறது. இது, தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு. சங்க இலக்கியங்கள் காட்டும் அக மாந்தர்கள், தங்கள் அகஉணர்வுகளை வெளிப்படுத்த எவ்வாறெல்லாம் உயிரினக் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை இந்நூலில் ஆய்வு செய்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நற்றிணையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வு நூலைப் படித்துப் பார்த்தால், பண்டைத் தமிழர்களின் செம்மாந்த வாழ்வும் அவர்கள் இயற்கையைத் தங்கள் வாழ்வோடு இணைத்துக் கொண்ட முறையும் நம்மை அந்தப் பொற்காலத்திற்கு அழைத்துச் செல்லும். ஈடுபாட்டுடனும், மிகுந்த அக்கறையுடனும் படித்துச் சுவைக்க வேண்டிய அருமையான புத்தகம்.
-
தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, சென்னை-90. (பக்கம்: 187). * நான்கு தொகுதிகளை உள்ளடக்கிய இச்சிறியதோர் திறனாய்வு நூல், கடைச் சங்க காலம் தொட்டு கி.பி.19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலான இரண்டாயிரம் ஆண்டுகளில் தோன்றி வளர்ந்த சிறந்த தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள அரிய செய்திகளான தமிழின சமயம் மற்றும் சமூக வரலாறுகள், கோட்பாடுகள், மொழி வளர்ச்சியில் சைவம் ஆற்றியுள்ள போற்றத்தக்க தொண்டுகள் மட்டுமின்றி இலக்கியப் பரப்பையும் விரிவாக எடுத்துரைக்கிறது. தமிழ் மொழிப் பற்றும், ஆர்வமும் இருப்பினும், பழம் பெரும் இலக்கியங்களைக் கற்றுணர்ந்து அறியாத மற்றும் அறிய வாய்ப்பற்ற அன்பர்களுக்கு, அனைத்து இலக்கியச் செய்திகளையும் தன்னுள்ளே அமையப் பெற்றுள்ள பொற்களஞ்சியமாகவே இந்நூல் திகழ்கிறது. இலக்கியச் சுவை நுகர்ந்தோருக்கு தீஞ்சுவைக் கருப்பஞ்சாறு இந்நூல்.நற்றழிழ் உலா வரும் தமிழினம் நேசக்கரம் நீட்டி இந்நூலை வரவேற்பதுடன், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் யாவும் இதைப் பாடநூலாக அங்கீகரிக்க வேண்டும். அரசு நூலகங்களில் இத்தமிழ்ப் பெட்டகம் இடம் பெறுதலும் வேண்டும்.
-
சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: ௧௨௮) * மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி, 1929ல், 500 பக்க அளவில் `திருக்குறள் தீபாலங்காரம்' எனும் உரைநடை நூலை எழுதினார். திருக்குறளுக்கு முதன் முதலாக உரை விளக்கம் எழுதிய பெண்மணி இவராகத்தான் இருக்கும். இவ்வம்மையார் எழுதிய முழுமையான பகுதியிலிருந்து `காத்துப்பால் உரை விளக்கம்' பகுதியை மட்டும் எடுத்துத் தனி நூலக்கியுள்ளார் பதிப்பாசிரியர். ஒரு பெண்மணி அதிலும் ஜமீன்தாரிணி, சுமார் 77 ஆண்டுகளுக்கு முன் இத்தகையதொரு சிறப்பான உரைவிளக்கத்தை எழுதியிருப்பது அதிசயம் ஆனால் உண்மை. உ.வே.சா., திரு.வி.க., பா.வே.மாணிக்கம் நாயக்கர், கா.சு.பிள்ளை, மு.சு.பூர்ணலிங்கம் போன்று 29 அறிஞர்கள் ஆங்கிலம், கவிதை, உரைநடை போன்ற பல வகைகளில் அம்மணியைப் பாராட்டியுள்ளனர் மூலநூலில். அறவழியினாலாய பொருளைப் பற்றுக் கோடுடையதான இம்மை இன்பத்தைச் சொல்லலே `களவியல்' எனப்படும் (பக்.21) முன்னே, ஊழின்படி கலந்த தலைவனும் தலைவியும் முறைப்படி மணம் புரிந்து, இல்லறமாகிய நல்லறத்தை இனிது நடத்தி இன்பம் துய்த்தலே கற்பாம் (பக். 51) என விளக்கும் இந்நூல் திருக்குறளுக்குப் பெண்கள் உரை விளக்கம் எழுதவில்லையே என்ற குறைபாட்டை நீக்கியுள்ளது. இலக்கிய வளமும், நடையோட்டமும் இன்பம் பயப்பதாய் உள்ளது, அரிய முயற்சி, அரிய பதிப்பு.
-
பிரேமா பிரசுரம், சென்னை- 24 தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த மூன்று காதல் பிரபந்தங்கள் இந்த ஒரே புத்தகத்தில் தரப்பட்டிருக்கின்றன. வெறும் பாட்டுகளாக மட்டும் கொடுக்கவில்லை. இனிய தமிழ் நடையில் கோர்வையாக விளக்கமும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
-
பிரேமா பிரசுரம், சென்னை- 24; பக்கங்கள் 780* கண்கவர் சித்திரங்களுடன் எளிய தமிழில் வசன வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ஹார்டுபைண்டிங் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்