பெண்கள் பற்றிய, 30 தலைப்புகளில் தம் வாழ்வியல் அனுபவங்களை இந்நுாலில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார் நுாலாசிரியர். பெண்கள் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பல கோணங்களில் தம் வாழ்க்கைக்கு அனுபவங்களூடே விளக்கிச் சொல்கிறார். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் தம் இருப்பைக் குடும்பச் சூழ்நிலையிலும், வெளியுலகிலும் எவ்வாறெல்லாம் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்ல படிப்பினையைத் தருவதாக இந்நுால் விளங்குகிறது. பெண் உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் இன்றியமையாமை, கண்ணியம், பொறுப்புணர்ச்சி, எதையும் எதிர்கொள்ளும் திறம், குழந்தைகளை ஆரம்ப முதலே எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களைத் தெளிவோடும், நடைமுறை அனுபவ வெளிப்பாட்டோடும், பட்டறிவுடனும், தக்க எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறது இந்நுால்.‘தான் இருக்கும் இடத்தில் தவறு இருக்கக் கூடாது என்பவளே அனைத்து நிலைகளிலும் தன்னை உயர்த்திக் கொண்ட, பெருமைக்குரிய பெண் ஆவாள்’ என்ற கருத்தோட்டத்தில் தம் கட்டுரை ஒவ்வொன்றிலும் பதிவு செய்துள்ளமை பாராட்டுக்குரியது.அதிகாரத்தில் இருக்கும் பெண்களுக்கு இரக்கப் பண்பு இருக்க வேண்டும் என்பதைத் தாம் ஈடுபட்ட பொது வாழ்க்கையில் இருந்து சான்று காட்டுகிறார். ‘ஒரு வீட்டின் நிர்வாகம் பெண்ணால் தான் நேர்த்தி அடைகிறது. குடும்பத்தின் பொருளாதார நிர்வாகம் அவள் கையில் இருந்தால், பூர்த்தியான வளமையோடு சேமிப்பும் நிகழ்கிறது’ என்ற கருத்தை ஆசிரியர் விதைத்திருப்பது, பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.‘கூர்ந்து நோக்கி ஆய்ந்து அறிவதும், குறைவறத் தெரிந்து நிறை அறிவு பெறுவதும், பண்புகள் கொண்டு பயம் நீக்கி இருப்பதும் பெண்களை முன்னிறுத்தும் மந்திரப் பண்புகளாம்’ என்று நுாலாசிரியர் சொல்லியிருக்கும் கருத்து, பாரதியின் புதுமைப் பெண்களை நினைவூட்டிச் செல்கிறது.‘ஆராயவல்ல அறிவைப் பெறாத பெண்ணும், மண்ணால் செய்யப்பட்ட பொம்மையும் ஒன்று தான்’ என்ற கருத்தின் விளக்கமாக, புறத்தோற்ற அழகுக்காகப் பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொள்வதை நளினமாக கண்டிக்கிறார். தங்கத்தில் இருக்கும் மோகத்தைப் பெண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில், ‘தேவையான அளவை விட அதிகமாகச் சேகரிப்பது களையப்பட வேண்டிய பழக்கமாகும். ‘சேகரிப்பை வெளிக்காட்டி நகைக்கடையாக வலம் வருவது நகைப்புக்குரிய வழக்கமாகும். தங்கத்தால் ஆன ஆபரணங்களால் அன்றித் தாம் பெற்ற அறிவால் மிளிர வேண்டும்’ என்ற சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.வேலைக்குப் போகும் பெண்களின் ஊதியத்தைக் கணவன் சுரண்டுவது குடும்பத்தில் களையப்பட வேண்டும் என்று கருத்துரைக்கும் ஆசிரியர், ‘நிதி குறித்த பொறுப்புகளை மகிழ்வுடன் பகிர்ந்து, பெண்ணும் நிர்வகிக்க வாய்ப்புகள் தருவது, அவளை நிறைமனம் கொண்ட திருமகளாக்கும்’ என்கிறார். பணி செய்யும் இடங்களில் பெண்கள் பாலியல் தொல்லைகள் நேராவண்ணம் பாதுகாப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்பதைப் பொறுப்புணர்ச்சியோடு அணுகியுள்ளார். பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால்.– ராம குருநாதன்
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்: 198, விலை: ரூ. 60)லண்டனில் உள்ள கீழ்த்திசை இலக்கிய சங்கத்தின் ஒரு லட்ச ரூபாய் பரிசாகப் பெற்ற நூல். இந்நூல் என்பதே இதன் பெருமைக்குச் சான்று.எழுத்தை ஒரு தொழிலாக அல்லாமல் தவமாகச் செய்து வரும் ஆசிரியருக்கு கிடைத்த பரிசு தன்னலம் கருதாத இலக்கியப் பணிக்கு, கிடைத்துள்ள வெற்றியாக கருதலாம்.துணை மயிலும் மனைவியும் ஒவ்வொரு குடும்பமும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய உன்னதமான நூல்கள் என வைரமுத்துவின் பாராட்டுப் பெற்ற நூல்.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
லஷ்மி விஸ்வநாதன். வெளியீடு: நியூ ஹாரிசன் மீடியா (பி) லிமிட், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்:128.)இந்நூலில் பெரும்பாலான அனைத்து இந்து உட்பிரிவினரும் வீடுகளில் செய்யும் பாரம்பரியமான சுமங்கலி பூஜை என்கிற மூதாதையர் வழிபாடு விளக்கப்பட்டுள்ளது. வழிபடும் முறைகள், சமையல், பின்பற்றக்கூடிய வழிமுறைகள் அவற்றில் முதல் நாளே செய்து கொள்ள கூடியவைகள் என தெளிவாக ஆராய்ந்து எழுதியிருப்பது ஆசிரியரின் சிறப்பு. வெளிநாடுகளில் வாழ்வோரும் கூட இந்நூல் உதவியால், வீட்டில் பெரியவர்கள் இருந்து சொல்லித் தந்தால் எவ்வாறு செய்வார்களோ, அவ்வாறு வழிபடலாம்.இது ஒரு பயனுள்ள, கலாசாரம் அழியாமல் காக்கும் முயற்சி. இவ்வகையில் திருமண சம்பிரதாயங்கள், வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வழிமுறைகளோடு நூல்கள் வந்தாலும் நன்மையே.
-
அருண் சரண்யா ; வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, (பக்கம்: 254. விலை: ரூ.80)இல்லற வாழ்வில் எல்லா செல்வங்களும் பல்கிப் பெருக, இனிது வாழ வேள்வி - வழிபாட்டின் நெறிமுறைகளை, விளக்கங்களை எடுத்துச் சொல்வது இப்புத்தகம்.ரிக் வேதத்தில் நம் பொருட்களை தேவர்களிடம் சேர்த்து, குழந்தையிடம் பெற்றோர் காட்டும் அன்போடு அத்தேவர்கள் வரமாக அளிப்பதை அக்னி தேவன் கொண்டு வந்து சேர்க்கிறான் (பக்.16) என்பதை ஆசிரியர் தெளிவாக்குகிறார்.இடையூறு நீங்க, நினைத்த காரியம் கை கூட, நோய் விலக, வீட்டுப் பிரச்னை நீங்க, மண வாழ்க்கை அமைய, குடும்ப ஒற்றுமை ஓங்க என்றுள்ள பட்டியலில் எல்லாருடைய விருப்பமும் அடங்கும்."வேதம் வல்லாரைத் தொண்டு விண்ணோர் திருப்பாதம் வணங்கி' என்ற ஆழ்வாரின் அருள்வாக்குப்படி ஒவ்வொருவரும் முற்பட்டாலும், இந்நூலில் குறிப்பிட்டபடி எல்லாம் திகழ்கிறதா என வாசகர்கள் நெறிப்படுத்தலாம், நிறைவுறலாம்.வேள்வி மாடத்தில் பெண்கள் வரலாமா? படித்த படிப்புக்கேற்ற வேலை அமைய வேண்டாமா? ஹோம மந்திரம் சொல்வது என்ன? இப்படி பல விஷயங்கள் வாசகர்களை ஈர்த்த வண்ணம் உள்ளன.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம்அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 104 விலை ரூ.40)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலைரூ. - 35)
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலை - 200 )
-
விஜயா பதிப்பகம், கோவை. போன்: 0422-2394614. (பக்கம்: 93. விலை: ரூ.70). காதல் - பெண் பார்த்தல் - திருமண புது வாழ்வு - தாம்பத்யம் - முதுமைக் காதல் என பரிமாண வளர்ச்சியில் கவிஞரின் கற்பனை - உவமை - நையாண்டி - நவீன பார்வை நூல் நெடுக பரிமளிக்கின்றன.நூல் முழுவதும் "பெண்' ஒருத்தியின் மொழியாக அமைந்திருப்பது - நளினத்தையும், பெண்களுக்கே இருக்கும்,"கணவனை தானே உரிமையாளும்' செருக்கையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை :ரூ 80.00)
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : ரூ68.00)
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை :ரூ 70.00)
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்