தேர்தலால் சூடாகிப் போன தமிழக மண்ணும், மக்களின் மனமும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது. விடுமுறையும் இருப்பதால் எங்காவது ஆனந்தத்தையும், அமைதியையும் தேடிச் செல்ல மனம் விரும்புகிறது.அந்த மனங்களுக்கு வழிகாட்டும் வகையில, இப்போது வந்துள்ள பா.கே.ப., பாகம் – 22ல் ஆரம்ப பக்கங்களிலேயே வழிகாட்டுகிறார், அந்துமணி. நெல்லையப்பர் கோவிலில் கல்துாணை தட்டினால், ‘ச, ரி, க, ம, ப, த, நி’ என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும்.தாயின் கர்ப்பப் பையில் குழந்தை எப்படி ஒவ்வொரு மாதமும் வளர்கிறது என்பதை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நம் முன்னோர் சிற்பமாக வடித்துள்ளதை பார்க்க வேண்டுமா... திருப்பூர் – குண்டடம் வடுகநாதர் கோவிலுக்கு செல்லுங்கள்!ஐந்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான வடசென்னை ரவீஸ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி தினமும் மூன்று வேளை மாலை போல விழும்.ஒசோன் படலத்தின் முக்கியத்துவத்தை ஓவியமாக, 700 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரைந்து வைத்துள்ளனர்.ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் உள்ளே, வெயில் காலத்தில் குளுகுளு என்றும் மழைக் காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும்.இப்படி பெருமையும், அதிசயத்தையும் தாங்கி நிற்கும் கோவில்கள் பற்றி, படத்துடன் பட்டியலை வெளியிட்டுள்ளார். படித்துவிட்டு உங்கள் பயணத்தை துவங்கலாம்!இசை மேதையாக இருந்து போலந்து நாட்டு அதிபரான இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியையும், அவரால் உதவி பெற்று பின்னாளில் அவருக்கே உதவிய ஹெர்பெர்ட் ஹூவர் பற்றிய நீண்ட குறிப்பு, எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்வோம் என்பதை வலியுறுத்துகிறது!நீலகிரி மலைவாழ் படுகர் இனம் பற்றி பலர் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் சொல்லாத பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் நம் அந்துமணி சொல்லியுள்ளார். இதன் மூலம் அவர்களைப் பற்றிய மதிப்பு கூடுகிறது.உதாரணத்திற்கு ஒரு விஷயம்... படுகர்களில் விதவைகளே கிடையாது; காரணம், யாராவது கணவரை இழந்தால், உடனே அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்து விடுவர். பொருத்தமுள்ளவர்கள் தாமே முன்வந்து மறுமணமும் செய்து கொள்வர், இதை அவர்கள் தர்மமான செயலாகவே கருதுகின்றனர்.தேச விடுதலைக்காக போராடியவர்களைப் பற்றி சொல்வது என்றால், அந்துமணிக்கு லட்டு சாப்பிடுவது போல! இந்தப் புத்தகத்திலும் மதுரை சொர்ணத்தம்மாள், ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன் பற்றி மெய்சிலிர்க்க எழுதியுள்ளார். வாழ்க்கை என்பது பந்தயமல்ல; ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல. நம் வாழ்க்கையை நாம் வாழ்வோம்; நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு என்பது போன்ற சிந்தனைகளுடன், ஐம்பதைக் கடந்தவர்கள் வாழத் துவங்கினால், வாழ்க்கை என்பது ஆனந்தமே என்று சொல்லி, பல அருமையான டிப்ஸ்களை தந்துள்ளார்.நடிகவேள் எம். ஆர்.ராதா பற்றி பல அபூர்வ தகவல்கள் உள்ளன. அவரது நாடகத்தை தடை செய்யவேண்டும் என்ற போது, நாடகத்தை பார்த்த நீதிபதி, ‘விதவைகள் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட இந்நாடகம், எல்லா ஊர்களிலும் நடக்கட்டும்; எம்.ஆர். ராதா நீடு வாழட்டும்’ என்று கூறினாராம்.எப்போது பார்த்தாலும் சரக்கு அடித்து விட்டு லென்ஸ் மாமா தத்துபித்து என்று உளறுவதாகக்கூறும் வாசகர்கள், இந்த புத்தகத்தில் அவரைக் கொண்டாடுவர். காரணம், ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி லோக்கல் பாைஷயில் விளக்கம் தந்திருக்கிறார் பாருங்கள்... வேற லெவல்!தனிநபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியம், மக்களின் ஆயுட்காலம், சுதந்திர மனப்பாங்கு, ஊழல் இல்லாமை என்பது போன்ற காரணிகளை வைத்து, உலகில் மகிழ்ச்சியான நாடு எது என்று பட்டியல் தயாரித்த போது, அதில், இந்தியாவிற்கு, 136 வது இடம் தான் கிடைத்துள்ளது. நமக்காவது, 136 வது இடம்... மகிழ்ச்சியே இல்லாத நாடு என்று ஒரு நாட்டை பட்டியலிட்டுள்ளனர். அது எந்த நாடு என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!பெண்கள் தொழிலதிபர்களாவது மிக எளிது. கவனம் சிதறாமல், எடுத்த முடிவில் திடமனதுடன், கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்று கூறும் பெண் தொழிலதிபரான ேஹமா அண்ணாமலையின் அனுபவங்களை தொகுத்து தந்துள்ளார், படிக்கும் பெண்களுக்கு தெளிவு கிடைக்கும், வழி பிறக்கும்.இன்றைக்கு முக்கிய பிரச்னை ‘சைபர் கிரைம்’ தான். படித்தவர்கள் பலரே அன்றாடம் எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை தினமலர் நாளிதழில் வரும் செய்திகள் வாயிலாக அறிந்து, அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த சைபர் கிரைம் பிரச்னையில் இருந்து எப்படி தப்புவது என்பதை, மிகுந்த சமூகப் பொறுப்புடன் விலாவாரியாக விளக்கி எழுதியுள்ளார். நிச்சயம் அனைவருக்கும் பயன்படும்.மனிதனுக்கு ஆறறிவு; விலங்குக்கு ஐந்தறிவு என்பர். ஆனால், உண்மையில் ஐந்தறிவிடம் இருந்து ஆறறிவு பல விஷயங்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகிறார். அவர் சொல்லும் விஷயங்களைப் படிக்கும் போது, ‘ஆமாம் சரி தானே’ என்றே தோன்றுகிறது.பிரபலங்களின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைப்பதால் ஏற்படும் பிரச்னைகளை, நிஜமான சம்பவங்களின் அடிப்படையில் வேடிக்கையாக சொல்லிஉள்ளார். சிரிப்புக்கு கியாரண்டி!வறுமையோடு பிறப்பது நம் கையில் இல்லை. ஆனால், வறுமையோடு வாழ்வது நம் கையில் தான் உள்ளது என்று, வறுமையோடு பிறந்து, வளமையாக வாழ்ந்தவர்கள் பட்டியலை படத்துடன் வெளியிட்டுள்ளார்; படிக்கும் யாருக்கும் உற்சாகம் பிறக்கும்!அந்துமணியைப் போல புத்தகத்தை தேடித்தேடி படிப்பவர் யாருமில்லை என்றே சொல்லலாம். பழைய புத்தகக் கடை ஒன்றில் தேடிப்பிடித்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கிறார்... ‘ஜீவபிரம்மையாக்கிய வேதாந்த ரகசியம்’என்ற அந்த நுாலில் சத்துள்ள உணவுகள் பற்றியும், அதன் தயாரிப்பு பற்றியும் விளக்கி எழுதப்பட்டுள்ளது.ஸ்ரீ பரஹம்ச சச்சிதானந்த யோகீஸ்வரரால், 1925 ல் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில், ‘அன்னரச அமிர்த சஞ்சீவி’ என்று ஓர் உணவைப் பற்றி பிரமாதமாக விவரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பலன்களை தரும் இந்த உணவின் தற்போதைய பெயர் பற்றி அறிந்தால் வியந்து போவீர்கள். எளிதில் தயாரிக்கக் கூடிய இந்த உணவு பற்றிய விபரம் புத்தகத்தில்!மாவீரன் ராஜேந்திர சோழன் பற்றி மிக விரிவாக உணர்ச்சி பொங்க விவரித்துள்ளார். இப்படி ஒரு மன்னன் ரத்தமும், சதையுமாக இருந்து நம் நாட்டை ஆண்டிருக்கிறார் என்பதை, அவரது எழுத்து மூலம் அறியும் போது பெருமை பொங்குகிறது!ஒரு மனிதனின் குணநல பண்புகளை உயர்த்தி, துாய்மைப்படுத்தி, சிந்திக்கச் செய்து, சிறந்த முறையில் வாழச் செய்பவை புத்தகங்கள்தான்.புத்தகங்களை வாசித்ததன் வாயிலாக, மனக்கதவுகள் திறக்கப்பட்டு, மகான்களாக, மஹாத்மாக்களாக மாறியவர்கள் பலர்.மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை, மஹாத்மா காந்தியாக மாற்றியது ஜான் ரஸ்கின் எழுதிய, ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற புத்தகமே!வெங்கட்ராமனாக இருந்தவரை, மகான் ஸ்ரீ ரமண மகரிஷியாக மாற்றியது சேக்கிழார் எழுதிய, ‘பெரிய புராணமாகும்!’உலக சமுதாயத்தை, உழைக்கும் வர்க்கத்தை துாக்கிப் பிடித்தது காரல் மாக்ஸ் எழுதிய, ‘மூலதனம்’ புத்தகமாகும்.டால்ஸ்டாய் எழுதிய, ‘போரும் அமைதியும்’ உலக இலக்கிய வரலாற்றையே புரட்டிப் போட்டது.காளிதாசன் காலத்திய எந்த அரண்மனையும் இப்போது இல்லை. ஆனால், அவர் எழுதிய, ‘சாகுந்தலம்’ இப்போதும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.‘புத்தகங்கள் காலத்தின் விதைநெல்’ என்று பாரதிதாசன் கூறியது போல, ஒவ்வொரு விதைநெல்லும் பலரை உயர்த்துகிறது. அந்துமணியின் இந்த புத்தகமும் அப்படித் தான். வாசிக்கும் உங்களை வாழ்வின் உயரத்தில் வைக்க ஆசைப்படுகிறது!– எல்.முருகராஜ்நீலகிரி மலைவாழ் படுகர் இனம் பற்றி, பலர் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் சொல்லாத பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் நம் அந்துமணி சொல்லியுள்ளார். இதன் வாயிலாக அவர்களைப் பற்றிய மதிப்பு கூடுகிறது. உதாரணத்திற்கு ஒரு விஷயம்... படுகர்களில் விதவைகளே கிடையாது. காரணம், யாராவது கணவரை இழந்தால், உடனே அவர்களுக்கு மறுமணம் செய்து வைத்து விடுவர். பொருத்தமுள்ளவர்கள் தாமே முன்வந்து மறுமணமும் செய்து கொள்வர். இதை அவர்கள் தர்மமான செயலாகவே கருதுகின்றனர்இன்றைக்கு முக்கிய பிரச்னை சைபர் கிரைம் தான். படித்தவர்கள் கூட அன்றாடம் எப்படி எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை, ‘தினமலர்’ நாளிதழில் வரும் செய்திகள் வாயிலாக அறிந்து, அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த சைபர் கிரைம் பிரச்னையில் இருந்து எப்படி தப்புவது என்பதை, மிகுந்த சமூகப் பொறுப்புடன் விலாவாரியாக விளக்கி எழுதியுள்ளார் நிச்சயம் அனைவருக்கும் பயன்படும்!,
பார்த்தது, கேட்டது, படித்தது (பாகம் – 22)
-
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 112).புகழ் மிக்க இஸ்லாமியர் பெருமக்கள் வரலாறுகளிலிருந்து அவர்களது தூய்மை, மதிநுட்பம், வீரம், தியாகம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை போன்ற மிக உயரிய பண்புகளைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைக் கட்டுரை வடிவில் சுவையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சன்னை-02. (பக்கம்:222)ஜூனியர் விகடன் இதழில் ஜென்ராம் எழுதிய 47 செய்தி விமர்சனக் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 196). இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும்,"கடி தோச்சி மெல்ல' உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.
-
புதுச்சேரி வரலாற்று சங்கம், 86, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 312).புதுச்சேரி, வரலாற்று நாயகர்கள், புலவர்கள், இலக்கியம், காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர், என்ற தலைப்புகளில் ஆற்றிய பேருரைகள் 52 கட்டுரைகளாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் மணி மணியான கட்டுரைகள். ஆழ்ந்து வாசித்து அசை போட வேண்டியவை. குறிப்பாக "புதுவையில் பாரதி' என்ற கட்டுரையின் இறுதியில் "புதுவை அந்தப் பாட்டுப் பறவையை (பாரதி) பத்தாண்டுகள் பாதுகாத்துப் படைப்பிலக்கியம் பல படைக்கச் செய்தது. பறந்து சென்ற மூன்றாண்டுகளில் (பாரதி மீண்டும் தமிழகம் வந்து) அதன் சிறகொடித்துச் சாகடித்து தமிழ்நாடு' என்ற வரிகள் தமிழர் நெஞ்சை கனக்கச் செய்யும்.
-
ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 190)."சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று முன்பு விளங்கியது. அரசியலில் மட்டும் அன்று; கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலும் தான். சமணர் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று மொழி அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது.கொல்லாமை, புலால் மறுத்தல், பிறரைத் துன்புறுத் தாமை, சமூக சமத்துவம், பெண் சமத்துவம், சமய சகிப்பு, கல்வி வளர்ச்சி, தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சி ஆகிய இந்தத் தடங்களில் தமிழகத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் முன்னேற்றியது சமணம் என்பதை இந்நூலின் கட்டுரைகள் சான்றுகளுடன் சாதிக்கின்றன.சிந்து சமவெளி நாகரிகம் சமணமே என்றும், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நீலகேசி முதலிய தமிழ் இலக்கியங்கள் சமண இலக்கியங்களே என்றும் உறுதி செய்கிறார். எண்குணத்தான், ஐந்து அவித்தான், இருள் சேர் இருவினை, போன்ற குறள் பகுதிகளுக்குச் சமணத்திலிருந்து விளக்கம் தந்துள்ளார்.பள்ளிக்கூடம் என்று இன்றும் நாம் அழைக்கும் கல்விச் சாலையின் பெயரை தந்தது சமணம். சைன மதத் துறவியர் இருந்த இடமே "பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன. அங்கிருந்து அவர்கள் கல்வி தானம் செய்ததால் தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது. சமணராகிய தமிழ் ஜைனர்களின் மதச் சடங்குகள், கலை வளர்ச்சிகள், பண்பாடு ஒழுக்கங்கள், இவை இன்று நம் கண் முன் வாழும் வடநாட்டு வட்டி வாங்கும் சேட்டுகளாகிய ஜெயின்களிடமிருந்து மாறுபட்டது. தமிழுக்கே உரித்தான தமிழ்ச் சமணத்தின் பழமையும், பெருமையும் இந்த நூலைப் படித்தால் உணர்ந்து போற்றலாம்.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
தமிழாய்வு: கடந்த காலமும் வருங்காலமும் என்னும் பொதுப் பொருளில் நிகழ்ந்த முதன் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. (ஒவ்வொன்றும் 256 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ.80) மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்-608 001.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து நிறுவியுள்ள கல்விசார் அமைப்பு தமிழாய்வு மன்றம், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் கருத்தரங்கக் கட்டுரைகள். அவற்றைத் தொகுத்து "ஆய்வுகளாக ஐந்து தொகுதிகளாக உருப் பெற்றிருக்கிறது.தமிழிலும் ஆங்கிலத்திலும் 460 ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லா தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை அளித்து அசத்தி விட்டனர் ஆய்வாளர்கள்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை மாணவர்கள் பன்னாட்டு மாணவர்களைக் கொண்டு மாணாக்கர்களுக்கு நடத்தும் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒளிவீசும் மணிக் கதிர்களின் அணிவகுப்பாக அழகுற வருகிறது இந்த ஆய்வுக்கதிர்- என சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் வ.ஜெயதேவனால் பாராட்டப் பெற்ற தொகுதிகள் இவை.இத்தொகுதிகள் ஆய்வுக் கடல். அனைவரும் இத்தொகுதியில் மூழ்கி முத்தெடுக்கலாம்.
-
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192).பத்திரிகையில் தொடராக எழுதிய 39 கட்டுரையின் தொகுப்பு தான் இந்த நூல். உலக இலக்கியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு அவை கட்டுரையாக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர் அப்துல்காதர் பேச்சாளர் என்பதால் அவரையும் அறியாமல் எழுத்து நடையை விட பேச்சு நடை கைகொடுத்திருப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தலைப்புகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.அன்பே! அந்தக் கொசுவினைச்சாகடித்து விடாதே! அந்தக் கொசுமுதலில்உன்னைக் கடித்தது!
-
வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).பிரபல நாளேட்டில் நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரான இந்தப் பேராசிரியரின் சொல்லாற்றல் நாம் அறிந்தது தான். ஆனால், எழுத்தாற்றலை இந்த நூல் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். 24 கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர் தொடங்கி அம்ருதாபிரீதம் வரை, மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாறுவதைப் பற்றிய ஒரு வழி அனுப்பு உபசாரக் கட்டுரையில் ஆரம்பித்து வரி கட்டுவது சுமையா, சுகமா என்ற கேள்வியை எழுப்பி, விழிப்புணர்வு பிரசாரக் கட்டுரை வரை, பலதரப்பட்ட விஷயங்களை சுவைபட ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் உள்ளவைகளை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் நமக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை ஆசிரியர் சுவைபட எடுத்துச் சொல்லியிருப்பதை உணர முடிகிறது. பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகம்.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 72).வேடர்கள் குலத்தில் உதித்து தங்கள் உறுதியான பக்தி நெறியால் பெரும் சாதனை படைத்த பன்னிருவரது வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் ஜாதி வேறுபாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் நூல்.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
க.தி. அருள்மன்றம், வகுளமாலிகா, மாருதிநகர், மதுராந்தகம்-603306. (பக்கம்: 148)பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக உள்ள இந்நூலில், ராமாயணம் குறித்து பெரும்பாலான கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையின் தலைப்பே, நூலின் பெயராக விளங்குகிறது. பேச்சாற்றல் மிக்க இந்நூலாசிரியர், தம் எழுத்தாற்றலையும் இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.கும்பகர்ணன் உறங்கவில்லை என்ற முதல் கட்டுரையில் "ஆசில் பரதாரம்' என்று தொடங்கும் கம்பரின் பாடலை நன்கு விளக்கியுள்ளதும் (பக்.2), கும்பகர்ணன், வீடணன் இருவரும் முறையே வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவர்கள் என்று ஒப்பிடுவதும் (பக்.4). மூக்கில்லாத தவளும் இடையில்லாதவளும் என்ற கட்டுரையில் கம்பனின் நகைச்சுவையை விளக்குவதும் (பக்.32, 33), இராமபிரானின் சிறப்பை எண்ணி சீதை அழுவதை விளக்குவதும் (பக்.79), நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். படிக்கத்தக்க பயனுள்ள நூல்.
-
தமிழாய்வு மன்றம் எடுத்த இம்முயற்சி அமிழ்தினும் இனிய தமிழைப் பரப்பும் பணியாகும். ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெறுவதையும் வரவேற்கும் செயல் உலகத்தோடு ஒட்ட ஒழுகலைப் படம் பிடிக்கிறது. அதனால் தான் தொல்காப்பியத்துச் செய்யுளியலில் உள்ள "நோக்கு' என்பதற்கு இளம்பூரணர் உரையை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் போலும். திருக்குறள் மூல நூலை சிதைப்பதைச் சாடுகிறார் தமிழண்ணல். அக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக சங்கம் வளர்த்த பெருங்கோமான் பாண்டியத்துரைத் தேவர் பண்பாடு இன்று எல்லாராலும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல். "துவக்கம்' என்ற சொல் சரியல்ல: "தொடக்கம் ' என்பதே இலக்கண வழக்கு என்று வினா -விடையில் தரப்பட்டிருக்கும் தகவல். ஆழமாக தமிழைக் கற்றுத் தெளிய விரும்பும் ஆர்வலர் அனைவரும் விரும்பி இந்த இதழைச் சுவைப்பர் என்பது நிச்சயம்.
-
வள்ளி சுந்தர் பதிப்பகம், எண்.84/14, மீர்பக்சிஅலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 152). "கருவறையின் அதிர்வுகள்' துவங்கி, "இணைய வெளிப்பந்தலில்' ஈறாக சுமார் 16 இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம். "மனித உடலின் வலப்பக்கம், இடப்பக்கம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அதை அந்த உடலின் ஊனம் என்றே கருதுகிறோம். அதுபோல சமுதாயத்தில் "ஆணும் பெண்ணும்' என்று "வெளிச்சத்துக்கு வராத வேதனைக் காட்சி'களைக் கண் முன் நிறுத்தும் இக்கட்டுரையாசிரியரின் "மும்பையில் தமிழ் இலக்கியம்,' "விழி தேடும் விடியல்கள்,' "தீக்குள் விரலை வைத்தால்' போன்ற விமர்சனக் கட்டுரைகள் இலக்கியங்கள் மீதும் அதையும் விஞ்சி சமுதாயத்தின் மீதும் அவர் கொண்டுள்ள நேயம் பற்றி பறை சாற்றுகின்றன. "புதிய மாதவி, அரபிக் கடலோரப் புயல்... அது காயப்படுத்தாது, நியாயப்படுத்தும், அவரது கோபமும் நியாயமானது தான்' என்ற மாலன் கூற்றில் உள்ள உண்மை இந்நூலை வாசிப்பவர்களுக்கு புலப்படும்.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 136).அணில் கடித்த பழங்கள், மரபின் மைந்தன் முத்தையா கட்டுரையும், பஞ்சவடியின் நிழலில்... எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும், தென்காசியில் நடைபெற்ற டி.கே.சி., விழாவின் சிறப்பை விவரிக்கிறது. நாமும் விழாவில் கலந்து கொண்ட உணர்வு டி.கே.சி.,யின் சிவலிங்கம் இருந்த குறிப்பேட்டில் சைவ இலக்கியப் பாடல்களையும் சங்கு முத்திரை கொண்ட பக்கத்தில் வைணவ இலக்கியப் பாடல்களையும் காண முடிகிறது. அவர் சுவைத்த 116 பாடல்கள் நூலில் இடம் பெற்றுள்ளது. நாமும் சுவைத்து மகிழலாம்.
-
வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். (பக்கம்: 112). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இக்காலத்தில் இன்றியமையாதது. இதை 13 கட்டுரைகளாக இந்நூலில் காணலாம்.இயற்கையை காத்தல், கடலோடிகள், பாரம்பரிய தகவல்கள், கடல்சார் குறிப்புகள், கடல் பற்றிய மரபுவழி அறிவு, மீன் பிடிக்கும் முறைகள், முத்துக் குளித்தல், மீனவர் பெற வேண்டிய வளம் என ஆய்வு செய்து சொற்பொழிவாக நிகழ்த்திய கட்டுரைகள் கையடக்கப் பிரதியாக வந்துள்ளது.மீன்களின் விற்பனை, பதப்படுத்தும் முறைகள், இவை சார்ந்த பிரச்னைகள் என எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் அழகு வெகு அருமை! சிறு நூலில் சிறந்த தகவல்கள்.
-
வெளியிட்டோர் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் அஞ்சல் பெட்டி எண்.8780, அடையார், சென்னை-600 020. மரபியல் வழி வந்த பண்பாட்டுப் பொருள்களைச் சீர் செய்தல், பாதுகாத்தல் ஆகியன மிக நுணுக்கமான பணிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியா போன்ற தொன்மையான நாடுகளில் அகழ்ந்தெடுக்கப்படும் பண்பாட்டுப் பொருள்கள் மற்றும் மரபியல் சார்ந்த தொன்மையான பொருள்களைப் பற்றிய ஆய்வு வேண்டப்படுவதாகும். இவற்றின் மூலமாக அறியப்படும் வரலாறு, பொருளியல், கலை நுணுக்கம், தொழில் நுணுக்கங்கள் ஆகிய பண்பாட்டுக் கூறுகள் சிறப்பானவை. இப்பொருட்களைச் சீரமைத்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றை முறையாகக் காட்சியில் அமைத்து காப்பு செய்தல் பண்பாட்டு ஆய்வாளர்கள் இடையேயும், அறிவியல் அறிஞர்களிடையேயும் முக்கியம் வாய்ந்த பயனீட்டுக் கல்வியாக மலர்ந்துள்ளது. இவ்வகையில், என்.ஹரிநாராயணா அவர்களின் இந்நூல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது கண்கூடு. இந்நூலை ஆக்கித் தந்தமைக்கு அவரையும், வெளியீட்டாளரையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்ட இந்நூலில், 46 ஆய்வுக் கட்டுரைகள் சுவையான ஆங்கிலத்தில் உள்ளன. அருங்காட்சியியல் பற்றிய அனைத்துச் செய்திகளும் முறையாகத் தரப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்களை அமைக்கும் முறைகள், அமைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பன்னாடுகளில் அருங்காட்சியியலில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகிய பல பொருள்கள் பற்றிய முக்கிய செய்திகள் நிறைவாகத் தரப்பட்டுள்ளன.பண்பாட்டுப் பொருள்களைச் சீரமைத்தலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வேதியியல் முறையில் சீரமைத்தல் தனிப் பிரிவாகும். வேதியியல் மேலறிவும், ஆர்வமும், பழம் பொருள் களின் தன்மை சிதைபடா வண்ணம் பாதுகாக்கும் எண்ணமும் முக்கியத் தேவைகள். சீரமைத்தலின் நுணுக்கங்கள் பற்றி விளக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் உள்ளன. பண்பாட்டுப் பொருள்கள் சீரமைத்தலின் வரலாற்று ஆய்வும் இந்நூலில் உண்டு. சீரமைத்தலின் நோக்கங்கள், தேவைகள், சீரமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சி பற்றியும் இந்நூல் விளக்குகிறது. அருங்காட்சியக வேதியியல் அலுவலர்களின் தகுதிகள், முக்கிய பண்புகள், கடமைகள் ஆகிய விவரங்கள் மிகச் சிறந்த பயனளிக்கும். தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய துறை ஆய்வாளர் களுக்கும் வேதி யியல் சீரமைப்பு முறைகள் நன்கு தெரிய வேண்டும் என்று அறிவுறுத்துவது பாராட்டத் தக்கது.தானே முன்னின்று சீரமைத்த பணிகள் பலவற்றை விளக்கி யுள்ளது இந்நூலின் மற்றுமொரு முக்கிய சிறப்பாகும். தஞ்சாவூர் கோவில் பண்டைய ஓவியங் கள், மரச் சிற்பங்கள், பனை ஓலைச் சுவடிகள், செப்புப் படிமங்கள், காகிதப் பொருள்கள் மற்றும் ஓவியங்கள் ஆகிய தொன்மைப் பொருள்களைச் சீரமைத்த முறைகளை விளக்கியுள்ளது மிக்க பயனுள்ளதாகும். இத்துறையைச் சார்ந்த பலருக்கும் இம்முறைகள் பற்றிய தெளிவான அணுகுமுறைகளை இந்நூல் தந்துள்ளது. பழங்காலக் கோவில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை வேதியியல் முறைப்படி சீரமைத்தலும் பாதுகாத்தலும் நிரல்பட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டியில் கிடைத்த ஈயக்காசு களைச் சீரமைத்து காப்பு செய்யப்பட்ட முறையும் சொல்லப்பட்டுள்ளது. சீரமைப்புக்கு தேவையான முக்கிய வேதியியல் பொருள்களின் பட்டியல், அளவுகள் ஆகியன தந்துள்ளமை, இப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக் கும் ஏனைய பொது மக்களுக்கும் மிகத் துணை புரியும்.அருங்காட்சியியல் மற்றும் வேதியியல் சீரமைப்பு, காப்பியல் ஆகிய துறைகளில் பணியாற்றுவோரிடையே மிகவும் நன்கு அறிமுகமானவர் ஹரிநாராயணா. சிறந்த பயிற்சிகளைப் பெற்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், தொன்மையானதுமான சென்னை அருங்காட்சியகத்தில் 30 ஆண்டுகளுக்கு
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்