சங்ககாலத்தில், கற்றவராகவும், கவிஞராகவும், காதல் சமத்துவம் உடையவராகவும் பெண்கள் இருந்தனர் என்பதை, பல அகச்சான்றுகளோடு நிறுவுகிறார், நூலாசிரியர் தாயம்மாள் அறவாணன். சங்ககால மகளிர், அனைத்து நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு, நூலின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது.பிற்காலத்து பெண்டிர் கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழலில், சங்ககாலப் பெண்டிர், ஒரு தடையும் இல்லாமல், ஆணுக்கு நிகராக கற்றிருந்தனர். பொருளாதார ஏற்ற தாழ்வின்றி, எளிய பெண்டிரான வெண்ணிக்குயத்தியும், அரச மகளிரான ஆதிமந்தி, பாரிமகளிர், பெருங்கோப்பெண்டு போன்றோரும் புலவர்களாய் இருந்தனர். ஆண்பாற் புலவருக்கு நிகராக, பெண்பாற் புலவராகிய முடத்தாமக் கண்ணியார், 248 அடிகளையுடைய பொருநறாற்றுப் படையை இயற்றியுள்ளார். இலக்கியங்களேயன்றி, இலக்கண நூல்களையும் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்பதற்கு, ‘காக்கைப் பாடினியம்’ எனும் இலக்கண நூலே உரைகல்.‘எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்’ என்று, உரிமையோடு துணைவரை தேர்ந்தெடுக்கும் காதல் மணமும், சோழ இளவரசி ஆதிமந்தியார், சேர இளவரசனாகிய ஆட்டனத்தியை காதலித்து மணந்த கலப்பு மணமும், அக்காலச் சமுதாயத்தால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.உடன்போக்கு உரிமை, காதலை முன்மொழியும் உரிமை ஆகியவற்றால், பெண்டிர் தமக்குரிய தகைமையை இழக்காதிருந்தனர். பெண்களும், இசையறிவுடன் திகழ்ந்தனர் என்பதற்கு, ‘பாழனி’ எனும் சொல்லும், ‘பல்லியம்’ எனும் இசைக் கருவியின் பெயர் தாங்கிய, ‘நெடும்பல்லியத்தை’ எனும் பெண்பாற் புலவரின் பெயரும் சான்று பகர்கிறது. மனைவியை முன்னிறுத்தி கணவரை, ‘ஆன்றோள் கணவ’ தாயை முன்னிறுத்தி, ‘தேவி ஈன்ற மகன்’ எனும் சொற்றொடர்களும், அரண்மனைப் பேரவையில் அரசனும், அரசியும் ஒருசேர அமர்ந்திருக்கும் வழக்கமும், பெண்களுக்கு வழங்கப்பட்ட தகைமையையும், தலைமையையும் எடுத்துக் காட்டுகிறது.போர்களால் பெண்டிர் பாதிக்கப்படக்கூடாது எனும் போர் அறம், ‘பூட்கை மறம்’ என, போற்றப்பட்டாலும், சங்ககாலப் பெண்டிர் வீரம் குன்றாதவர்களாக விளங்கினர் என்பதற்கு, பொன்முடியார், அவ்வையார் போன்றோரின் புறப்பாடல்களே சான்று.சங்ககாலத்தைத் தொடர்ந்து, கணவனால் வணங்கும் பேறு பெற்ற காரைக்கால் அம்மையாரின் வரலாற்றையும், காதலைப் பெண்களும் வெளிப்படுத்தலாம் என, ‘பாவை’ இலக்கியங்களுக்குப் பாடடு அமைத்த ஆண்டாள் வரலாற்றையும் அழகுற சொல்லப்பட்டுள்ளதோடு, அவர்தம் படைப்புகளும் இந்நூலுள் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.மறுமணம் பற்றி கூறப்படாத சங்ககாலத்தில், கைம்பெண் நோன்பின் கடுமையைவிட, கணவனுடன் தீப்பாய்ந்து மாய்த்துக் கொள்ளுதலே மேலானது என்ற நிலை இருந்துள்ளது. சங்ககால பெண்பாற் புலவர்கள் பற்றிய எண்ணிலடங்கா செய்திகளைக் கூறும் இந்நூல், பெண்ணியம் பேசுகின்றவர்களுக்கு கொழுத்தத்தீனியாக அமைவதோடு, பெண்மையை போற்றும் பெட்டகமாக திகழ்கிறது.– சு.மதியழகன்
மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம்
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்: 198, விலை: ரூ. 60)லண்டனில் உள்ள கீழ்த்திசை இலக்கிய சங்கத்தின் ஒரு லட்ச ரூபாய் பரிசாகப் பெற்ற நூல். இந்நூல் என்பதே இதன் பெருமைக்குச் சான்று.எழுத்தை ஒரு தொழிலாக அல்லாமல் தவமாகச் செய்து வரும் ஆசிரியருக்கு கிடைத்த பரிசு தன்னலம் கருதாத இலக்கியப் பணிக்கு, கிடைத்துள்ள வெற்றியாக கருதலாம்.துணை மயிலும் மனைவியும் ஒவ்வொரு குடும்பமும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய உன்னதமான நூல்கள் என வைரமுத்துவின் பாராட்டுப் பெற்ற நூல்.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
லஷ்மி விஸ்வநாதன். வெளியீடு: நியூ ஹாரிசன் மீடியா (பி) லிமிட், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்:128.)இந்நூலில் பெரும்பாலான அனைத்து இந்து உட்பிரிவினரும் வீடுகளில் செய்யும் பாரம்பரியமான சுமங்கலி பூஜை என்கிற மூதாதையர் வழிபாடு விளக்கப்பட்டுள்ளது. வழிபடும் முறைகள், சமையல், பின்பற்றக்கூடிய வழிமுறைகள் அவற்றில் முதல் நாளே செய்து கொள்ள கூடியவைகள் என தெளிவாக ஆராய்ந்து எழுதியிருப்பது ஆசிரியரின் சிறப்பு. வெளிநாடுகளில் வாழ்வோரும் கூட இந்நூல் உதவியால், வீட்டில் பெரியவர்கள் இருந்து சொல்லித் தந்தால் எவ்வாறு செய்வார்களோ, அவ்வாறு வழிபடலாம்.இது ஒரு பயனுள்ள, கலாசாரம் அழியாமல் காக்கும் முயற்சி. இவ்வகையில் திருமண சம்பிரதாயங்கள், வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வழிமுறைகளோடு நூல்கள் வந்தாலும் நன்மையே.
-
அருண் சரண்யா ; வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 17.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, (பக்கம்: 254. விலை: ரூ.80)இல்லற வாழ்வில் எல்லா செல்வங்களும் பல்கிப் பெருக, இனிது வாழ வேள்வி - வழிபாட்டின் நெறிமுறைகளை, விளக்கங்களை எடுத்துச் சொல்வது இப்புத்தகம்.ரிக் வேதத்தில் நம் பொருட்களை தேவர்களிடம் சேர்த்து, குழந்தையிடம் பெற்றோர் காட்டும் அன்போடு அத்தேவர்கள் வரமாக அளிப்பதை அக்னி தேவன் கொண்டு வந்து சேர்க்கிறான் (பக்.16) என்பதை ஆசிரியர் தெளிவாக்குகிறார்.இடையூறு நீங்க, நினைத்த காரியம் கை கூட, நோய் விலக, வீட்டுப் பிரச்னை நீங்க, மண வாழ்க்கை அமைய, குடும்ப ஒற்றுமை ஓங்க என்றுள்ள பட்டியலில் எல்லாருடைய விருப்பமும் அடங்கும்."வேதம் வல்லாரைத் தொண்டு விண்ணோர் திருப்பாதம் வணங்கி' என்ற ஆழ்வாரின் அருள்வாக்குப்படி ஒவ்வொருவரும் முற்பட்டாலும், இந்நூலில் குறிப்பிட்டபடி எல்லாம் திகழ்கிறதா என வாசகர்கள் நெறிப்படுத்தலாம், நிறைவுறலாம்.வேள்வி மாடத்தில் பெண்கள் வரலாமா? படித்த படிப்புக்கேற்ற வேலை அமைய வேண்டாமா? ஹோம மந்திரம் சொல்வது என்ன? இப்படி பல விஷயங்கள் வாசகர்களை ஈர்த்த வண்ணம் உள்ளன.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம்அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
-
ராமபிரசாத் பப்ளிகேஷன்ஸ். 106/4, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை.600014.( பக்கம் 104 விலை ரூ.40)செலவு குறைவாகவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சிற்றுண்டி வகைளைத் தயார் செய்யும் பக்குவம் பற்றி எழுதியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கதம்ப அல்வா, கோதுமை பால்பர்பி, எள் கொழுக்கட்டை, ஜீனி வடை என்று பலவகையான சிற்றுண்டிகளை தயாரிக்கும் விதம் எளிமையாகத் தரப்பட்டிருக்கிறது. செர்ரி பழ ஜாம் உட்பட 15 வகைகள், மிளகு அப்பளம், பூண்டு ஊறுகாய், கதம்ப சூப் என்று பலவகை பதார்த்தங்கள் சுவையாக செய்யும் முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலைரூ. - 35)
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. ( விலை - 200 )
-
விஜயா பதிப்பகம், கோவை. போன்: 0422-2394614. (பக்கம்: 93. விலை: ரூ.70). காதல் - பெண் பார்த்தல் - திருமண புது வாழ்வு - தாம்பத்யம் - முதுமைக் காதல் என பரிமாண வளர்ச்சியில் கவிஞரின் கற்பனை - உவமை - நையாண்டி - நவீன பார்வை நூல் நெடுக பரிமளிக்கின்றன.நூல் முழுவதும் "பெண்' ஒருத்தியின் மொழியாக அமைந்திருப்பது - நளினத்தையும், பெண்களுக்கே இருக்கும்,"கணவனை தானே உரிமையாளும்' செருக்கையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை :ரூ 80.00)
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை : ரூ68.00)
-
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17. (விலை :ரூ 70.00)
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்