Advertisement

கட்டுமான பணிகளில் உண்டாகும் பிரச்னைகளும் தீர்வுகளும்


கட்டுமான பணிகளில் உண்டாகும் பிரச்னைகளும் தீர்வுகளும்

₹ 130

எழுத்துரு அளவு:

கட்டுமான துறை சார்ந்த தொழில் நுட்ப அனுபவ அறிவை வெளிப்படுத்தும் நுால். கட்டுமான பணிகளின் போது ஏற்படும் பிரச்னைகளை கண்டறிந்து தீர்வுகள் சொல்லப்பட்டு உள்ளன. நுட்பமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.கட்டடம் அமைக்கும் நிலத்தில் ஏற்படும் பிரச்னைகளை அலசி ஆலோசனைகளை முன் வைக்கிறது. கட்டடம் அதன் அருகே அமையும் கிணறு என சின்னச் சின்ன விஷயங்களையும் தொட்டுக்காட்டி ஆலோசனைகளை பகிர்கிறது. கட்டுமான பணியின் போது ஏற்படும் நீர் கசிவை சரி செய்தல், மணலால் ஏற்படும் பிரச்னைகளை காட்டுகிறது. குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கான ஆலோசனையையும் தருகிறது. கட்டுமானப் பணி பற்றிய பயிற்சி நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் 40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு) த.பை.எண்:1040தியாகராஜ நகர், சென்னை - 600 017தொலைபேசி : 24313646, 24 313647

  • வன்னி விநாயகர் புத்தக நிலையம்58-ஏ, அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை - 625 001,மொபைல் : 98942 80132இல்லம் : எண் 3ஏ, குருசாமி கோனார் ‌சந்து,(பூ மார்க்கெட் பின்புறம்)வடக்குமாசி வீதி, மதுரை - 625 001போன் : வீடு : 0452-2629512

  • உலக அதிசயங்களில் தலை சிறந்ததும், காலத்தால் அழியாததுமான கிரேட் பிரமிடு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கிரேட் பிரமிடு அளவு கடந்த ஆற்றல்களையும் ஏராளமான மர்மங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பிரமிடுகளில் ஏராளமான சக்தி அலைகள் உருவாகின்றன என்பதை கண்டுபிடித்துள்ளனர்.பிரமிடுகளை எந்தெந்த விதங்களில் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் அதன் பலன்களையும் இந்த நூலில் விஞ்ஞானப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.பிரமிடுகள் என்பது அறிவியலும் ஆன்மிகமும் கலந்த அற்புத சாதனம். எனவே, இதன் சக்திகள் நம் வாழ்க்கையை நிச்சயம் பலப்படுத்தும். வாங்கிப் பயனடையலாமே.-எஸ்.திருமலை.

  • இயற்கை பேரழிவைத் தாங்கும் கட்டுமான வடிவமைப்பு பற்றியும், கட்டடங்களை கரையான்கள் அரிக்காமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும், தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஏதுவாக கட்டடங்கள் வடிவமைக்க வேண்டிய முறைகள் பற்றியும் கூறுகிறது.கான்கிரீட் விரிசல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து படங்களுடன் மிக எளிமையாக, அழகாக எடுத்துரைக்கும் இந்நுால், கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  • பரந்து காணப்படும் பவுத்த சமய வரலாற்றில், ‘கொங்கு மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு’ என்ற பகுதியை எடுத்து, ஆசிரியர் நீலகண்டன் கொங்கு நாட்டில் பவுத்த மத வளர்ச்சியை சிறப்பாகவும், மிக நுணுக்கமாகவும் காட்டியுள்ளார். புத்தரது பெயரைக் கொண்ட புலவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழ்ந்தனர் என்பதையும் இவரது நுாலின் மூலம் அறியலாம். கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக அழைக்கப்படும் கரூர் என்னும் கருவூர்ப் பற்றியும், கரூரில் வாழ்ந்த சங்கப் புலவர்கள் கருவூர் கண்ணம்பானனார், கரூர் கதப்பிள்ளை சாத்தனார், கரூர் கலிங்கத்தார் போன்ற புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருவூர் கிழார், கருவூர் கோசனார், கரூர் சேரமான் சாத்தன், கருவூர் நன்மார்புனார், பவுத்திரனார், பூதஞ்சாத்தனார், கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனாதனார் போன்ற புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் பவுத்தத் தடயங்கள் என்னும் இயல் மூலம் நுாலாசிரியரின் கடின முயற்சி வெளிப்படுவதை அறியலாம். கொங்கு மண்டலத்தில் வரலாற்று கண்ணோட்டம் என்னும் பகுதியில், தமிழகத்திற்கு பவுத்தம் எப்பொழுது யாரால் கொண்டு வரப்பட்டது என்ற செய்தியை தெளிவாக பதிவு செய்து, பவுத்தத் தத்துவங்களையும் விரிவாக விளக்கிஉள்ளார். பொதுவாக பவுத்த சமயம் தொடர்பான வரலாற்று ஆய்வு நுால்கள் குறைவாக உள்ள இக்காலகட்டத்தில், நீலகண்டன் எழுதிய இந்நுால், பவுத்தம் குறித்து ஆய்வு செய்வோர்களுக்கும் மற்றும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த ஆவணமாக விளங்கும் என்பது உறுதி. – பன்னிருகை வடிவேலன்

  • நிலம் அதை உடைமையாக்குவது பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஆவணப் பதிவு முறையில் இருந்து துவங்குகிறது. அந்த நடைமுறையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மிக எளிமையாக தொகுத்து உள்ளார் ஆசிரியர். அடுத்து, நிலம் தொடர்பான அங்கீகார அமைப்புகள் பற்றிய விபரம் தரப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தில், மனைக்கான அங்கீகாரம் பெறுவது பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. பத்திர ஆவணங்கள், கிரயப் பத்திர மாதிரிகளும் தரப்பட்டுள்ளன.நிலத்தை பாகம் பிரிக்கும் வகை முறை, கிரய ஒப்பந்தத்தில் கவனம் செலுத்த வேண்டியவை, பவர் ஆப் அட்டர்னி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை உள்ளிட்ட தகவல்கள் சிறப்பாக தொகுத்து எழுதப்பட்டுள்ளன.நில உடைமையாளர்களும், நிலத்தை உடைமை கொள்ள விரும்புவோரும் வைத்திருக்க வேண்டிய கையேடு இந்த நுால்.– ராம்

  • தமிழ்நாடு கட்டடம், மனைமுறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் விதிகளை அறிமுகப்படுத்த எழுதப்பட்டுள்ள நூல். சின்னஞ்சிறு தலைப்புகளில், புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.நிலம் விற்பனையை முறைப்படுத்துவது, ரெரா அலுவலக முகவரி, தமிழ்நாடு ரெரா ரூல்ஸ், கட்டடம், மனை திட்டம், கட்டட மேம்பாட்டாளரால் தெரிவிக்கப்படும் தகவல்கள், திட்டப்பதிவு பற்றிய விவரங்கள், குடியிருப்போர் சங்கம் அமைத்தல், கட்டட மனை விற்பனை செய்யும் முகவர் என பல தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. பல மாதிரி படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நிலம் வாங்குவோர், விற்போர், நில உடைமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய கையேடு.–ஒளி

  • பட்டா என்ற நில உரிமை ஆவணம் குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 100 அரசாணைகளின் உண்மை நகல்களுடன் பதிப்பிக்கப் பட்டுள்ளது. விழாக்களில் தமிழ்,தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடுவது குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணை பற்றிய அறிமுகத்துடன் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள நில வகைகள் குறித்து விளக்கம் தருகிறது.தொடர்ந்து பட்டா தொடர்பான அரசாணைகளும், சுற்றறிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றின் நகல் ஒளிப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆணை விபரங்கள் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளன. முக்கிய நில ஆவணமான பட்டா குறித்து முழுமையான அறிவைத் தரும் நுால். நில உரிமையாளர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டியது.– ஒளி

  • ஆவிகளுடன் தியானம், பிரார்த்தனையால் பேச முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகள் அடங்கிய நுால். ஆவியுடன் பேசி பிரச்னைகளுக்கு பரிகாரம் சொல்ல முடிந்திருக்கிறது என நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ளது. தெய்வபக்தி மிகுந்ததால் ஆறுமுகன் அருள் கிடைத்தது என்றும், கேட்கும் கேள்விகளுக்கு பதிலை எழுத வைக்கிறான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எல்லாம் இழந்த நிலையில் ஒருவனை பங்குச் சந்தையில் கொஞ்சம் ஷேர் வாங்கச் சொல்லி உத்தரவு வந்ததையும், ஹர்ஷத் மேத்தா ஊழல் பங்குச்சந்தையில் கொடிகட்டி பறந்த போது, அந்த சில ஷேர்கள் மூலமே மிகப்பெரிய பணக்காரர் ஆகி விட்டதையும் குறிப்பிடுகிறது. ஆற்றோட்டமான நடை அழகு, கர்ம வினையின் அழுத்தத்தை புரிய வைக்கிறது.– சீத்தலைச் சாத்தன்

  • நில உடைமை பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். பிரிக்கப்படாத பாகத்துக்கான பட்டா பற்றி விபரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வகை பட்டாவில் திருத்தம் செய்வது எப்படி; நிலத்தை பிரித்து அளப்பது எப்படி? இந்த பட்டா தொடர்பான முக்கிய அரசாணைகள் இந்த புத்தகத்தில் உள்ளன.பிரிக்கப்படாத நிலத்தின் பட்டா பற்றி விளக்கமான கருத்துக்களை தரும் நுால்.– ஒளி

புதிய வெளியீடுகள்