Kaveri’s Children is a collection of short stories based in early 20th century rural Tamil Nadu, written by Shankar Ram (real name T L Natesan or Natesiah), who wrote in both Tamil and English. They reflect the author’s love of his people and his region, the Tanjavur district, watered and nourished by the river Kaveri. These stories have been edited by Prof. William Jackson, Department of Religious Studies at Indiana University-Purdue University, Indianapolis, USA, famous for his books on the great composer of Carnatic music, Tyagaraja, e.g., Tyagaraja: Life and Lyrics, (1991) and Tyagaraja and the Renewal of Tradition: Translations and Reflections (1994)), and other saint composers of south India like Purandaradasa, Annamacharya and Kanakadasa. The short stories in this collection are unique tales of everyday life, ‘intriguing, psychologically believable and well-crafted, with shrewd knowledge of people and the ways of the world.’ In the words of Prof. Jackson, ‘The soul’s journey itself is also the soul’s homeland, and in the soulful stories of Shankar Ram we learn about our humanity and the earth, our journey-filled home.’
-
ஜெய் சக்தியின் நாவல்களில் ஒரு மென்மையும், இதமும் உண்டு!காதலிக்கும், பெண்ணின் சகோதரருக்கும் பல சலுகைகளை வழங்கிவிட்டு, அதனால் பல சங்கடங்களுக்கு ஆளாகும் ஒரு தொழில் அதிபரின் கதையை நன்றாகச் சொல்லி இருக்கிறார்.பழைய பீம் சிங் திரைப்படத்தைப் பார்ப்பது போல், இதமளிக்கும் குடும்பச் சித்திரம்!ஸ்ரீ செல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14.
-
துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. விலை: ரூ.100. பக்கம்(2): 288.
-
கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 248)பிரபல நாடக எழுத்தாளரான விக்டர் தனது மனைவி, குழந்தை, வேலைக்காரன் மற்றும் நாயுடன் பண்ணை வீட்டில் தங்கி தனது அடுத்த படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.ஒரு நாள் காலை விக்டர் எழுந்து பார்த்தபோது வேலைக்காரனையும், நாயையும், துப்பாக்கிகளையும் காணவில்லை. தொலைபேசி வேலை செய்யவில்லை. காரின் ஸ்பார்க் பிளக்குகளும் காணவில்லை. ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் மர்ம நாவலின் ஆரம்பமே இப்படி நெஞ்சை உறைய வைக்கிறது. நூலைப் படித்து முடித்து விட்டுத்தான் கீழே வைக்கத் தோன்றும்.மர்ம நாவல் பிரியர்களுக்கு தமிழில் ஜேம்ஸ் ஹார்ட் சேஸின் நாவல்களைப் படிக்கும் வாய்ப்பை கண்ணதாசன் பதிப்பகம் ஏற்படுத்தித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.
-
கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: (1)328. பக்கம்; (2) 288) துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு.
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.பணக்காரரான லியோனைட் எனும் எண்பது வயதைக் கடந்த தாத்தா இல்லாமல் இருக்கவே முடியாது என்ற பாசப் பிணைப்பான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். எதிர்பாராது லியோனைட் மரணிக்கிறார். இயற்கையாய் அல்ல, விஷம் வைத்து. யார், எதற்காக அத்தனை முதியவரைப் போய் ஈவிரக்கமின்றி கொன்றது? இக் கேள்வியைத் துரத்திக் கொண்டு துப்பறிதல் சூடு பறக்கத் துவங்குகிறது. எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத ஓர் அற்புத த்ரில்லர்தான் குரூர வீடு.
-
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 177). "நவீன ஓவியம்' படைப்பு, படைப்பாளர், பார்வையாளர், நிலைப்பாடுகளை முன்னிறுத்தி நவீன ஓவியர்களிடமும் படைப்பு - படைப்பாளர் குறித்து கலை இலக்கிய விமர்சகர்களாக அறியபட்டவர்களிடமும் நேரில் சந்தித்தும் விடைபெற்றதும் நூல் வடிவம் பெற்றுள்ளது. முனைவர் பட்ட ஆய்வாளரின் இந்த கலை விமர்சனக் கட்டுரைகள் தமிழுக்குப் புதிது; தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இதற்கு நிதி வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது. இந்தப் புத்தகம் ஓவியக் கலைஞர்களைப் பற்றியது. சிறப்பான தகவல்களின் பெட்டகம். படித்துப் பாருங்கள். பாராட்ட வார்த்தைகளைத் தேடுவீர்கள்
-
ஸ்ரீ செண்பாக பதிப்பகம், 34 பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை- 17நாமக்கல் கவிஞர் சிறந்த தேசியக் கவிஞர் என்பது எல்லாரும் அறிந்த செய்தி. கவிஞரவர்கள் சிறந்த கதையாசிரியரும் ஆவார். "மலைக் கள்ளன்' என்ற இவரது கதை சிறந்த திரைப்படமாக வெளிவந்து பெரு வெற்றி பெற்றது.இந்நூலுள் கவிஞர், தம் தந்தையார் சொல்வது போலவும், தாயார் சொல்வது போலவும் கதைகள் படைத்துள்ளார். சங்கிலிக்குறவன், கோவில் திருட்டு, இலுப்ப மர பிசாசு எனும் கதைகள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள், கேட்டறிந்த சுவையான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். உணர்வும், உற்சாகமும் தரும் தமிழ் நடை. யாவரும் படித்துச் சுவைக்க வேண்டிய நூல் இது.
-
பழனியப்பா பிரதர்ஸ். கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 104). சிறுவர்களுக்கான இலக்கியமே ஒரு நாட்டின் உயர்வு என்பர். சிறு வயதிலேயே அவர்கள் மனதில் நல்லதை விதைத்து விட்டால், அது செடியாக, மரமாகி அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கச் செய்யும் என்பது கண்கூடு. இந்நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் ஒவ்வொரு நீதியை சொல்கின்றன. சிறுவர்களை நல்வழிப்படுத்த இத்தகைய நூல்கள் பயன்படும் என்பது நிதர்சன உண்மை. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வாங்கி, படிக்க கொடுங்கள்.
-
ஸ்ரீசெல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 225)இரண்டு குறு நாவல்கள் அடங்கிய தொகுதி. பாப்புலர் மாத நாவல் இலக்கணத்திற்கு ஏற்ப எழுதப்பட்ட நாவல்கள்."பூ ஒன்று பூத்தது' - நாவலின் கதாநாயகன் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியாமல் போனதற்குக் காரணம், மூட நம்பிக்கையே என்று நிறுவுகிறார். "திசை மாறிய பறவை' - என்ற நாவலில் கல்யாணம் ஆகும் முன்னரே கன்னிப் பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதால் நிகழும் கேடுகளைச் சொல்கிறார்.சில இடங்களில் கவிதா பூர்வமான வர்ணனைகள் நாவல்களுக்குத் தனி அழகைத் தருகின்றன.
-
மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்.1447. 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 284)புதினம் பத்தாவது ஆண்டு விழாவை ஒட்டி உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளும், ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகளுமாக இத்தொகுதியில் 23 கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுதியவர்கள், கனடா, சுவிஸ், இலங்கை, தமிழகம் என பல நாட்டவர். எனவே கதைக் களங்களும், உலகளவில் உள்ளது. பல கதைகள் இலங்கைத் தமிழில் இருப்பினும் புரிந்து கொண்டு படித்து ரசிக்க முடிகிறது. பன்னாட்டு சிறுகதை விருந்து.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
மணிமேகலை பிரசுரம், சென்னை-17. (பக்கம்: 332) படைப்பாளியாக தான் உருவாகக் காரணமான சிங்கப்பூர் நகருக்கும், அதன் அனைத்து குடிமக்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்திருப்பது வித்தியாசமானது. புதுமையானது வாசகராக இருந்து நிறைய நூல்களை படித்து 1995ல் எழுத ஆரம்பித்து, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதி பரிசும் பெற்றுள்ள இவரது ஆர்வம் வியக்க வைக்கிறது.சிங்கப்பூர் கதைக்களத்தில் சீனக்கிழவி வருகிறாள். மலாயக்காரர்கள் வருகின்றனர். கலாசாரம் சங்கமம். நமக்கோ வித்தியாசமான கதைகள் கிடைத்துவிட்டன.ஆசிரியையின் எழுத்துப்பணி சிறக்க படிக்கும் வாசகர்கள் நிச்சயம் வாழ்த்துவர்.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (குறிஞ்சி மலர்-பக்கம்: 387)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.
-
சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.(பொன்விலங்கு - பக்கம்: 615)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.
-
சீதை பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. ( பாண்டிமா தேவி - பக்கம்:640)நா.பார்த்தசாரதி, நல்ல லட்சியம் சார்ந்த அருமையான பல நவீனங்களை எழுதி, தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர். உயரிய ரசனைக்கு உரமிட்டு வளம் தந்தவை அவருடைய படைப்புகள். அமரர் நா.பா.வின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், தற்போது பரவலாக வெளிவரத் துவங்கியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம். குறிஞ்சிமலர் நவீனம் வாசித்து, அதன் கதாநாயகன் அரவிந்தன், கதாநாயகி பூரணி பெயரை ஏராளம் பேர் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததுண்டு. இவ்வாறு நா.பா.வின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மிச்சிறந்த பதிப்பாக வெளிவந்துள்ளன. நா.பா.வின் இதர படைப்புகளும் தொடர்ந்து வெளிவரவேண்டும். படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாது, பண்பாட்டை வளர்க்கத் தூண்டுதலாகவும் துணை புரிவனவாகவும் உள்ள ஒப்பற்ற இலக்கியப் பேழைகள் இவை.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017
-
உஷா முத்துராமன். வெளியீடு: மணிமேகலை பிரசுரம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 186.). 25 குடும்பப்பாங்கான சிறுகதைகள். ராஜேஷ்குமார், தேவிபாலா இச்சிறுகதைகளை பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளதன் மூலம் சிறுகதைகளின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).திருக்குறளின் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் காதல் பாலைக் கலந்து தரப்பட்ட கதைகளின் தொகுப்பு இந்த நூல். 26 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பொருத்தமாகக் காதல் கதைகளை உருவாக்கியுள்ளார் கவுதம். சாதாரணமாக வரும் குறள் நெறிக் கதைகளைப் போல் அல்லாமல் இயல்பான தன்மையுடன் இவை எழுதப்பட்டுள்ளதால் எல்லாத் தரப்பினரையும் கவரும் எனலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்