Advertisement

தமிழ் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும்


தமிழ் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும்

₹ 115

எழுத்துரு அளவு:

மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், ‘பாட்டுப் பாடட்டுமா’ என்று கேட்கிறார்.‘இப்போது பாடக் கூடாது. தூங்கும் போது தான் பாட வேண்டும்’ என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது.குழந்தைக்குப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்க வேண்டும். வாள் வீசும் வல்லபங்களுக்கு அங்கே இடமில்லை. குழந்தையின் பாஷையிலேயே தொடர வேண்டும். குழந்தையின் ஆச்சரியத்தோடு அல்லது கேள்வியோடு நிறைவு செய்ய வேண்டும். அப்போது தான் அது பூர்ணமான குழந்தை இலக்கியமாகும்.பாப்பா ஒன்று எங்க வீட்டில் முழிச்சிருக்குது – அதுபடுத்துக்கிட்டே என்னைப் பார்த்துப்பார்த்துச் சிரிக்குதுபாப்பா புதுப் பாப்பா – அதோபடுத்திருக்குது – ஆசுபத்திரிக்குப் போய் அம்மா தான்வாங்கி வந்ததுஎன்று எழுதினார், கவிஞர் தமிழழகன். இது பாப்பாவுக்கான பாட்டு; கலப்படமில்லாதது.‘தமிழ் குழந்தை இலக்கியம் – விவாதங்களும் விமர்சனங்களும்’ என்ற நூலில், இது தொடர்பாகப் பல கோணங்களில் பார்வையை செலுத்தியிருக்கிறார் சுகுமாரன்.பால விநோதினி, பாலர் முரசு, பாப்பா மலர், அணில், சங்கு, டமாரம், டிங் – டாங், கரும்பு, பார்வதி, அம்பி, முத்து, கண்ணன், சின்னக் கண்ணன், முயல், மயில், கிளி, பூஞ்சோலை, சிறுவர் உலகம், ஜில்ஜில், மத்தாப்பு, ரத்னபாலா, பூந்தளிர், தமிழ்ச் சிட்டு, அம்புலி மாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள், பத்தாண்டுகளுக்கு முன் இருந்தன என்கிறர் அவர் (பக்.3).ஆனால் இப்போது? குழந்தைகளின் கவனம் எங்கே இருக்கிறது?‘சூப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகளால், சினிமா பாடல்களைத் தான் குழந்தைகள் பாடுகின்றனர். பாடல்களுக்கு இடையே வரும் முக்கல், முனகல் ஒலியையும் சேர்த்து, யார் நன்றாக முனகுகின்றனர் என்பதைப் பொறுத்து, அதிக மதிப்பெண்கள்’ என்கிறார், நூலாசிரியர் (பக்.10)கற்பித்தலில் குழந்தை இலக்கியம், குழந்தை இலக்கியத்தில் வாழ்க்கை வரலாறு, குழந்தைகளும் நாடகமும் என்றெல்லாம் விரிவாக எழுதியுள்ளார். அவசியமான நூல் இது.சுப்பு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 198).கல்விக் கொள்கை, ஊறும் அறிவு, குழந்தைகளின் வளர் சிறப்புகள், குடும்பம் தரும் அறிவு, சுற்றுப்புறம் தரும் அறிவு, பள்ளி நடைமுறை, கல்விப்படி நிலைகள், குழந்தைகள் கல்வியில் மூத்தோர் பொறுப்பு என அத்தியாயங்களில் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர்களும், கல்வி போதித்திடும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் உதவும்.

  • அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை-49. போன்: 2650 2086. (பக்கம்: 128).ராமாயணம் பிறந்த கதை முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை அழகுற சொல்லப்பட்டு உள்ளது.ராமரை போன்ற பிள்ளை, பதி, மன்னன் இன்றைய அத்தியாவசிய தேவை. இன்றைய பிள்ளைகள், ராமர்களாக நாளை உருவாக உதவும் நூல்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 128).அமெரிக்காவின் முக்கிய இடங்களான ப்ளோரிடா, வாஷிங்டன், சவுத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றி எளிய நடையில் பிஞ்சுகளுக்குப் புரியும்படி எழுதியிருக்கிறார் கமலநாதன்.அமெரிக்காவில், கென்னடி விண்வெளி மையம், டிஸ்னி வேர்ல்டு, அருங்காட்சியகம் போன்ற விந்தைமிகு உலகங்களுக்குக் குழந்தைகளை உல்லாசப் பயணம் அழைத்துச் செல்கிறார்.குழந்தைகள் இலக்கியம்!

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 115).இந்நூல் ஆசிரியர் எடையூர் சிவமதி சிறுவர்களுக்கான 45 கதைகளை இந்நூலில் சுவையாக தொகுத்து வழங்கியுள்ளார். இவை அனைத்தும் சிறுவர்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் கதை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. படிக்கும் ஆர்வம் வளர, சிறுவர்களுக்கு தாரளமாக வாங்கி பரிசாக அளிக்கலாம்.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701. குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

  • பிராடிஜி புக்ஸ், எண் 33/15 , இரண்டாம் மாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொலைபேசி : 044-4300 9701.குழந்தைகளுக்கான புத்தகங்கள் படைப்பது எளிதல்ல. அதுவும் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப வண்ணப்படங்கள், எளிய விளக்கத்தில் சிறுவ, சிறுமியரைக் கவர "பிராடிஜி புக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. விஞ்ஞானக் கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கின்றன.

  • ஓவியம்: ஸுபா. வெளியீடு: பண்மொழி பதிப்பகம், 2, பேதலா ஹவுசிங், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, சென்னை-4. (பக்கம்: 104). குழந்தைகளுக்கு ஆடிப் பாடுவதில் விருப்பம். ஆடிப்பாடும் போதே அவர்கள் அறிவியலையும் கற்றுக் கொள்ள இந்த கவிதை நூல் பெரிதும் துணை நிற்கும்.பருப்பில்லாமல் கல்யாணமா? படங்கள் இல்லாமல் சிறுவர் நூலா? அந்தக் குறை வைக்காமல், பக்கத்துக்கு பக்கம் புகைப்படங்களாகவும், ஓவியங்களாகவும் வண்ணத்தில் கொடுத்து சிறுவர்களை அசத்தியிருக்கிறார்.ஆடுவோம் பாடுவோம் அறிவியலை நாடுவோம்.

  • அட்சயப் புத்தகாலயம், 2/30, சின்னராஜு தோட்டம், 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 160. விலை: ரூ.70). சிறுவர்கள் படித்து பயன்பெற, பொழுதைப் பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில் இத்தொகுதியில் 36 கதைகள் இடம் பெற்றுள்ளன. அனைவரும் படித்து மகிழலாம்.

  • பண்மொழி பதிப்பகம், 12/59, வைத்தியர் அண்ணாமலை தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:96 விலை:ரூ.60) இயற்கை, விலங்குகள், பறவைகள், வேடிக்கைப் பாடல்கள் என்ற நான்கு பிரிவுகளில் 37 சிறுவர் பாடல்கள் படித்து மகிழத்தக்க வகையிலும் படங்கள் சிறுவர் பாடல்களைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் வகைகளிலும் அமைந்துள்ளன.மயிலே! மயிலே! எனக்கொரு இறகுதரமாட்டாயா? மயிலே மயிலேபோன்ற பாடல்கள் சிறுவர்கள் பள்ளி விழாக்களில் ஆடிப்பாடுவதற்கு ஏற்ற பாடல்கள். அற்புதமான சிறுவர் பாடல்களைக் கொண்ட நூல்.

  • புத்தகப்பூங்கா, 3/1 சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, சென்னை-14. பக்கம்:192 விலை:ரூ.60) பெயர்தான் குட்டி கதைகளே தவிர கதைகள் ஒவ்வொன்றும் 4, 5 பக்கங்கள் கொண்டவையே. வாழ்க்கைப் பயிருக்கான விதைகளாக கருதி எழுதப்பட்ட கதைகள். சிறுவர்கள் படித்து பயன்பெறலாம்.

புதிய வெளியீடுகள்