/ வாழ்க்கை வரலாறு / மனிதநேய மாவீரர் அலெக்சாண்டர்
மனிதநேய மாவீரர் அலெக்சாண்டர்
அலெக்சாண்டர், உலகத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளை தன் ராஜ தந்திரத்தாலும், மாவீரத்தாலும் பெற்றார்!மாசிபிடோனியாவில் இருந்து இந்தியா வரை கடல்களையும், மலைகளையும், பாலைவனங்களையும், சமவெளிகளையும், காடுகளையும் கடந்து வந்தது சாமான்யமான செயல் அல்ல. தன், 33ம் வயதில் மறைந்த அந்த மாவீரரின் வரலாறு, மிக அருமையாக சொல்லப்பட்டு உள்ளது.போர் முடிந்த பின், சரண் அடைந்த எவரையும் துன்புறுத்த மாட்டார். போர்களில் தோற்ற எந்த நாட்டுப் பெண்களையும் அவர் தொட்டதில்லை; தன் படை வீரர்களையும் தொட விட்டதில்லை. வீரமும், ஈரமும் கொண்ட உள்ளம் அலெக்சாண்டரின் இதயம்! மாணவச் செல்வங்கள் அவசியம் படிக்கலாம்.– எஸ்.குரு