/ ஆன்மிகம் / காஞ்சியின் கருணைக்கடல் பாகம் – 2
காஞ்சியின் கருணைக்கடல் பாகம் – 2
பக்தர்களால் கருணைக்கடல் என வணங்கப்படும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கூறுபவராக இருந்தார் என்பதை எடுத்துரைக்கும் நுால்.உதாரணத்துக்காக சில முத்துக்கள்...* கலை என்பது உழைப்பால் மட்டும் வருவதில்லை. சகலகலாவல்லியான அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு வேண்டியிருக்கிறது* அன்பால் உலகிலுள்ள வேற்றுமை மறையும். இதனால், உலகம் முழுதும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வலுப்படும். உடல் உபாதையைப் போக்க, இயற்கை வைத்தியப்படி உணவே மருந்து என எடுத்துக்கொள்ள வேண்டும். காஞ்சிப் பெரியவர் முற்றும் அறிந்த ஞானி என்றே சொல்லத் தோன்றுகிறது.– இளங்கோவன்