/ கதைகள் / அருண் சரண்யா சிறுகதைகள் (பாகம் – 1)
அருண் சரண்யா சிறுகதைகள் (பாகம் – 1)
வீட்டுக்கு வீடு வாசற்படியாக நிலவும் பிரச்னைகளை கருவாக்கி அமைத்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வியாபாரி துாண்டிலுக்கு தப்பியவர், மருமகனிடம் சிக்கிய பரிதாபம்; அண்டை வீட்டுப் பெரியவரிடம் பாசத்தை பெற்ற மகளை சந்தேகித்த தந்தை; மெடல் பெறச்சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல் சொன்ன சிறுவன் என சமூகத்தை பிரதிபலிக்கின்றன.மனைவிக்கு தைரியம் அளித்த அதிர்ச்சி சம்பவம்; மற்றவர்களுக்கு பாலிசி மூலம் நம்பிக்கை ஏற்படுத்தும் இன்சூரன்ஸ் ஏஜன்ட் தனக்கு செய்து கொள்ளாத துயரம்; மகன் சொன்ன மருமகளை தேடி அலைந்த தாய் போன்ற பாத்திரங்களால் நிரம்பிய நுால்.– இளங்கோவன்