சங்க இலக்கிய மாந்தர்களின் மனநிலையை மூன்று நிலைகளில் ஆய்வு செய்துள்ள நுால். தலைவி, தோழி மனநிலையையும், செவிலி, நற்றாய் மனநிலையையும் தெளிவுபட அறிந்து உணர்த்தப்பட்டுள்ளது. தலைவன் – தலைவி ஊடல்கால மனநிலை, பிரிந்து செல்லவேண்டிய சூழலில் உள்ள நிலை, அதை தவிர்க்கும்போது உள்ள மனநிலையும் விவரிக்கப்பட்டுள்ளது....