சிந்திக்கத் துவங்கிய வயதில், மனதில் பதிந்த நினைவு சுவடுகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். தமிழகத்தில் பல துறைகளில் பிரகாசிக்கும் பெண்களின் அனுபவம் பதிவாகியுள்ளது.இளம் வயதில் பெண்கள் காணும் உலகம் தனித்துவமானது. அந்த சித்திரம் ஆர்வமூட்டும் வகையில் பதிவாகியுள்ளது. வீட்டில், பொதுவெளியில், பள்ளியில்...