'சிவகுமாரின் கதைகளின் ஆதார உணர்ச்சி ஈரம். ஒட்டுமொத்த மானுடகுலத்தின் மீதான அவரது பரிவு, அக்கறை, மேலான அன்பு பீறிடும் எழுத்துகள், கதைகளாக மலரும்போது இயல்பானதொரு மென்மையை எய்திவிடுகிறது.\r\n\r\nகொஞ்சம் அசந்தால் கவிதையோ என்று எண்ணச் செய்யும் உரைநடை க.சீ. சிவகுமாருடையது. தொண்ணூறுகளின் முக்கியப்...